Saturday, June 29, 2024

ஈசன் உபதேசித்த ஸ்தலங்கள்:

 ஈசன் உபதேசித்த ஸ்தலங்கள்:


☘️அகிலம்  காக்கும்  தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து. சிவமே என் வரமே ☘️



ஓமாம்புலியூர்


தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.


உத்திரகோசமங்கை:


பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.


இன்னம்பர்:


அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.


திருவுசாத்தானம்:


இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.


ஆலங்குடி:


சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.


திருவான்மியூர்:


அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.


திருவாவடுதுறை:


அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.


சிதம்பரம்:


பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.


திருப்பூவாளியூர்:


நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.


திருமங்கலம்:


சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.


திருக்கழுக்குன்றம்:


சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.


திருமயிலை:


1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.


செய்யாறு:


வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.


திருவெண்காடு:


நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.



திருப்பனந்தாள்:


அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.


திருக்கடவூர்:


பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.


திருவானைக்கா:


அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.


மயிலாடுதுறை:


குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.


திருவாவடுதுறை:


அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.


தென்மருதூர்:


1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.


விருத்தாசலம்:


இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.


திருப்பெருந்துறை:


மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.


இராமேஸ்வரம்:


திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்.


உத்தரமாயூரம்:


ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.


காஞ்சி:


ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.


திருப்புறம்பயம்:


சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.


விளநகர்:


அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.


திருத்துருத்தி:


சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.


கரூர்:


ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.


திருவோத்தூர்:


ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்.


சிவமே ஜெயம் 

சிவமே தவம்

சிவமே என் வரம்

சிவமே  சரணாகதி

🙏🏻🙇🏻‍♂️🧘🏻‍♂️🙇🏻‍♂️🙏🏻


 🌺அகிலம் காக்கும் மணிகண்டீஸ்வரர் மலர் பாதம் சரணம்🌺

No comments:

Post a Comment