ஈசன் உபதேசித்த ஸ்தலங்கள்:
☘️அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து. சிவமே என் வரமே ☘️
ஓமாம்புலியூர்
தட்சிணாமூர்த்தி உமாதேவிக்கு பிரணவப்பொருள் உபதேசித்தது.
உத்திரகோசமங்கை:
பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.
இன்னம்பர்:
அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.
திருவுசாத்தானம்:
இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் ராமர் பெற்றார்.
ஆலங்குடி:
சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானை தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.
திருவான்மியூர்:
அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.
திருவாவடுதுறை:
அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.
சிதம்பரம்:
பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.
திருப்பூவாளியூர்:
நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.
திருமங்கலம்:
சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
திருக்கழுக்குன்றம்:
சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.
திருமயிலை:
1000 முனிவர்கள் அறநெறிகளை அறிவுறையாக பெற்றது.
செய்யாறு:
வேதம் பற்றி கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.
திருவெண்காடு:
நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோயதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம வித்யாம்பிகை என்று பெயர்.
திருப்பனந்தாள்:
அம்பாள் ஸ்வாமியிடம் ஞானோபதேசம் பெற்றது.
திருக்கடவூர்:
பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.
திருவானைக்கா:
அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.
மயிலாடுதுறை:
குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.
திருவாவடுதுறை:
அகத்தியமுனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.
தென்மருதூர்:
1000 முனிவர்க்கு உபதேசம் அருளியது.
விருத்தாசலம்:
இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரை தன் தொடைமீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.
திருப்பெருந்துறை:
மாணிக்கவாசகருக்கு குருத்த மரத்தடியில் உபதேசம்.
இராமேஸ்வரம்:
திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும்.
உத்தரமாயூரம்:
ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.
காஞ்சி:
ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.
திருப்புறம்பயம்:
சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.
விளநகர்:
அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.
திருத்துருத்தி:
சிவன் பிரம்மசாரியாய் வேதத்தை தாமே சொன்னது.
கரூர்:
ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.
திருவோத்தூர்:
ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்.
சிவமே ஜெயம்
சிவமே தவம்
சிவமே என் வரம்
சிவமே சரணாகதி
🙏🏻🙇🏻♂️🧘🏻♂️🙇🏻♂️🙏🏻
🌺அகிலம் காக்கும் மணிகண்டீஸ்வரர் மலர் பாதம் சரணம்🌺
No comments:
Post a Comment