Saturday, January 6, 2024

12 ராசிகளுக்கும் திருநள்ளாறு வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் 2023 -2026-மே...


திருநள்ளாறு சனி பெயர்ச்சி எப்போது ?

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், வருகின்ற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி 2023  மாலை 5-20 மணிக்கு மகர ராசியில் இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.

மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு

நீதியின் கடவுளான சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிக்கக்கூடியவர். ஒரு ராசியில் சனி பெயர்ச்சி அடையும் போது அந்த ராசிக்கும் அதற்கு முன் மற்றும் பின் உள்ள ராசிகளுக்கு ஏழரை சனியாக அமர்ந்திருப்பார். சனி பகவான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனியாகும். எனவேதான் ஜோதிடத்தில் சனியைபோல் கொடுப்பவனும் இல்லை கெடுப்பவனும் இல்லை என்று கூறுகின்றனர்.

 


இந்நிலையில் கர்ம காரகனியான சனி பகவான் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனை ஏற்படப்போகிறது. எனவே சனிபகவானால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

யாருக்கு என்ன சனி?

 இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷம் லாப சனி, ரிஷபம் தொழில் சனி, மிதுனம் பாக்ய சனி, கடகம் அஷ்டமத்து சனி, சிம்மம் கண்டச்சனி, கன்னி ருண ரோக சத்ரு சனி, துலாம் புண்ணிய சனி, விருச்சிகம் அர்த்தாஷ்டம சனி, தனுசு தைரிய சனி,மகரம் பாத சனி, கும்பம் ஜென்ம சனி, மீனம் விரய சனி என பலன்கள் கிடைக்கும்.

ஏழரை சனி:

 மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். தனுசு ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி காலமான 30 மாதமும் பாதிப்புகள் குறைய கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். சனி சாந்தி பூஜை செய்ய வேண்டும்.

மேஷம்:

மேஷ ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியால்  அமைய இருக்கும் கிரஹ நிலைகள்

கோச்சாரத்தில் மேஷ ராசிக்கு  சனி லாபஸ்தானமான 11ம் இடத்தில இருப்பதும் , ராகு 12ல் இருப்பதும் கேது 6 ல் இருப்பதும் குரு ஜென்ம ராசியில் இருந்தாலும் வருகின்ற 1 மே 2024 முதல் தனஸ்தானமான 2ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பது மிகவும் சிறப்பு. சனி 11ல்  கோச்சாரத்தில் இருப்பது அற்புதமான பலன்களை மேஷ ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறாரார்கள். கேது 6ல் இருப்பதும் குரு 2ம் இடத்திற்க்கு வர இருப்பதும் அற்புதமான பலன்களை யோகமான பலன்களை மேஷ ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறார்கள்.

மேஷ ராசி நேயர்கள் 80% யோகமான பலன்களை அனுபவிக்க இருக்கிறார்கள். எதிர்பாராத தன லாபங்கள் மற்றும் செல்வ சேர்க்கை உண்டாகும் .

மேஷ ராசி நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால் யோகமான பலன்கள் நடைபெறும்.  மாறாக தசா புக்தி சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம் பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய பலன்களே நடைபெறும்.

2024ஆம் ஆண்டு மே 1ஆம் தேதியன்று குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.

இரண்டரை ஆண்டுகள்  லாப சனி காலம் என்பதால் பலன்களும் நன்மைகளும் அதிகரிக்கும் கும்ப ராசியில் பயணம் செய்யும் சனி பகவான் மேஷ ராசியின் அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் யோகத்தை தரப்போகிறார்.
சனி பகவான் மேஷ  ராசிக்கு 10 மற்றும் 11ம்  அதிபதி,  11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சனி பகவான் இரண்டரை ஆண்டுகள் பயணம் செய்யப்போகிறார். 2024 ஆண்டு ஒரு பிரகாசமான ஆண்டாக மேஷ ராசி நேயர்களுக்கு  இருக்க போகிறது..

பல தடைகளை உடைத்து  வெற்றி கான்பீர்கள். நீங்கள் எண்ணியது கைகூடும் தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு 2024ஆம் ஆண்டு முதல்  பிரகாசமாக இருக்க போகிறது. வேலையில் இருப்பவர்கள் கூட சொந்த தொழில் தொடங்குவீர்கள். உத்யோக உயர்வை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வேலையில் இருப்பவர்கள்விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும்.



இது நாள் வரை ஒரு சில மேஷ ராசி நேயர்கள் குறைந்த சம்பளத்தில் பட்டு வந்தார்கள்.  இனி கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை  தேடி வரும். எதிர்பாராத பதவி உயர்வு தேடி வரும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் உங்களுக்கு உதவுவார்கள். உங்களுக்கு பல இடைஞ்சல்களையும் கொடுத்து வந்த உயரதிகாரி இடம் மாறி செல்வதால் உங்களுக்கு வேலையில் நல்ல சூழ்நிலை காணப்படும்.

மேஷ ராசிக்கு சனி பகவான் லாபாதிபதி ஆவார் . கும்பத்தில் சனி  சனி சஞ்சாரம் செய்யும் பொழுது எப்போதுமே  அதிக லாபத்தை தான் தருவார். அதிக வருமானத்தால் பொருளாதார நிலை உயரும். பண வருமானம் அதிகரிப்பதால் உங்கள்  சேமிப்பு உயரும். 2024ஆம் ஆண்டு முதல் மேஷ ராசி நேயர்கள் ராஜ யோகமான வாழ்வை அடையப்போகிறார்கள். அனைத்திலும்  வெற்றி பெற்று அமோகமாக வாழப்போகிறீர்கள்.

திருமண சுப காரியங்கள் கைகூடும். வீட்டில் சுப செலவுகள் அதிகரிக்கும்.

2024 ஆண்டில்  இது நாள் வரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு  புத்திர பாக்கியம் கிடைக்கும். பெற்ற குழந்தைகளால் பெருமை ஏற்படும். அனைத்து தடைகளைத் தாண்டி வாழ்வில் வளம் ஏற்படும்.. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

பரிஹாரம்

மேஷ ராசிக்கு ராகு பகவான் 12ளிலும் குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் , உங்களுடைய வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில் ராகு பகவானுக்கு சனி கிழமை தோறும் மற்றும் குரு பகவானுக்குவியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடை நீங்கி வெற்றிகள் குவியும் .


ரிஷபம்:

திருநள்ளாறு சனி பெயர்ச்சி

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், வருகின்ற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி 2023  மாலை 5-20 மணிக்கு மகர ராசியில் இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.

ரிஷப  ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியால்  அமைய இருக்கும் கிரஹ நிலைகள்

கோச்சாரத்தில் ரிஷப  ராசிக்கு  சனி தொழில் மற்றும் கர்ம ஸ்தானமான 10ம் இடத்தில இருப்பதும் , ராகு 11ல் இருப்பதும் கேது 5 ல் இருப்பதும் குரு  12ல் இருப்பதும்  வருகின்ற 1 மே 2024 முதல் ஜென்ம ராசியான  1ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பது மிகவும் நன்மை தரும்.

சனி 10ல்  கோச்சாரத்தில் இருப்பது அற்புதமான பலன்களை ரிஷப ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறாரார்கள். கேது 5ல் இருப்பதும் குரு 12 ம் மற்றும் 1ம் இடத்திற்க்கு வர இருப்பதும் சுமாரான பலன்களை தரும், ஆகையால் ரிஷப  ராசி நேயர்கள் கேது மற்றும் குரு பிரீத்தி செய்வது நன்மை தரும்.

ரிஷப  ராசி நேயர்கள் 85 சதவீதம்  யோகமான பலன்களை அனுபவிக்க இருக்கிறார்கள். எதிர்பாராத தன லாபங்கள் மற்றும் செல்வ சேர்க்கை உண்டாகும் ரிஷப ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில்  யோகமான பலன்கள் நடக்க இருக்கிறது. .

ரிஷப ராசி நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால் யோகமான பலன்கள் நடைபெறும். மாறாக தசா புக்தி சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம் பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய பலன்களே நடைபெறும்.



ரிஷப  ராசிக்கு  பத்தாம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகிறார் சனி பகவான். பத்தாம் வீடு தொழிலை மற்றும் உங்கள் கர்மாவையும் உணர்த்தும்..ரிஷப ராசிக்கு   சனி சுபர். தர்மகர்மாதிபதி. அதாவது 9 மற்றும் 10ம் அதிபதி ஆவார். அதனால்  யோகமான பலன்களை உங்களுக்கு இந்த சனி பெயர்ச்சி வாரி வழங்கும். உங்கள் உழைப்பிற்கேற்ற நல்ல பலனை இந்த இரண்டரை ஆண்டுகலளில் நீங்கள் அடைய இயலும்.

புதிய  வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க வாய்ப்பு ஏற்படும்.. வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் தேடி வரும் .  வேலை தேடி வெளிநாடு செல்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

புதிய கடன்கள் வாங்கி பழைய கடன்களை  அடைப்பீர்கள். வங்கிகளில் தொழில் செய்வதற்காக  புதிய கடன்கள் கிடைக்கும்.  ரிஷப ராசிக்கு பத்தில் ஆட்சி பெற்ற சனியால் சச யோகம்  அமைவதால் யோக பலன்கள் ஏற்படும்.சனியால்  உங்களுக்கு  கிடைக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் தடுக்க  முடியாது.

இது நாள் வரை  திருமணம் தடை பெற்றவர்களுக்கு  தற்சமயம் சனி பகவான் அருளால் திருமணம் நடக்கும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். புது வேலை அல்லது தொழில் அமையும். நீங்கள் வகிக்கும்  பதவியில் புது உற்சாகம் மற்றும் பதவி உயர்வு  கிடைக்கும்.

இந்த காலக்கட்டத்தில் ரிஷப ராசி நேயர்களின் நிதிநிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் பணவரவு ஏற்படும். உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் ராகு  இருப்பதால் நீங்கள் சுக போகங்களுக்காக அதிக பணம் செலவு செய்வீர்கள். சிலர் ஷேர் மார்க்கெட் , ஸ்பெகுலேஷன் போன்றவற்றில் ஈடுபட்டு பணத்தை இழக்க நேரிடும். எனவே உங்கள் செலவுகளில் கவனம் தேவை.

ரிஷப ராசி நேயர்கள் தங்களுடைய ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து அதில் கவனம் செலுத்த வேண்டும். யோகா, தியானம் போன்றவற்றிற்கு  அதிக நேரம் ஒதுக்குங்கள். திடகாத்திரமான  உணவை உட்கொள்ளுங்கள் . வயதானவர்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

ரிஷப  ராசி நேயர்கள் செய்ய வேண்டிய பரிஹாரம்

சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றலாம். ரிஷப ராசிக்கு கேது 5ம் இடத்திலும் குரு 12 மற்றும் 1 ம் இடத்தில் அமர இருப்பதால் தீய பலன்களை ரிஷப ராசி நேயர்கள் அனுபவிக்க நேரிடும். ஆகையால் உங்களுடைய வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில் கேது பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி செவ்வாய் கிழமைகளில் வழிபடலாம். குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடை நீங்கி வெற்றிகள் குவியும் .

சனிக்கிழமை உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் மேற்கொள்ளுங்கள்.

மிதுனம்:

திருநள்ளாறு சனி பெயர்ச்சி

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், வருகின்ற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி 2023  மாலை 5-20 மணிக்கு மகர ராசியில் இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.

சனி பகவான்  மிதுன ராசிக்கு   ஒன்பதாம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆகி அங்கு  இன்னும் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்யவிருக்கிறார்.

பொதுவாக  ஒன்பதாம் வீடு  தகப்பனார், தீடீர் தனவரவு  மற்றும் தெய்வீக ஈடுபாட்டை  குறிக்கும். சனி தனது சொந்த வீடான கும்ப ராசியில், மூலத்திரிகோண ராசியில் சஞ்சாரம் செய்வது  மிதுன ராசி நேயர்களுக்கு  அதிர்ஷ்டத்தை அளிக்கும்.  அஷ்டம வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் பொழுது விவரிக்க முடியாத கஸ்டங்களை சந்தித்து இருப்பீர்கள். அவை அனைத்தும் இப்பொழுது முடிவிற்கு வருகிறது.

மிதுன ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியால்  அமைய இருக்கும் கிரஹ நிலைகள்

கோச்சாரத்தில் மிதுன  ராசிக்கு  சனி 9ம் ஸ்தானமான பாக்கிய ஸ்தானமான  இருப்பதும் , ராகு 10ல் இருப்பதும் கேது 4 ல் இருப்பதும் குரு  11ல் இருப்பதும்  வருகின்ற 1 மே 2024 முதல்   12ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பது மிகவும் நன்மை தரும்.. சனி 9ல்  கோச்சாரத்தில் இருப்பது அற்புதமான பலன்களை மிதுன ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறாரார்கள். கேது 4ல் இருப்பதும் குரு 12 ம்  இடத்திற்க்கு வர இருப்பதும் சுமாரான பலன்களை தரும், ஆகையால் மிதுன   ராசி நேயர்கள் கேது மற்றும் குரு பிரீத்தி செய்வது நன்மை தரும்.

மிதுன   ராசி நேயர்கள் 80 சதவீதம்  யோகமான பலன்களை அனுபவிக்க இருக்கிறார்கள். எதிர்பாராத தன லாபங்கள் மற்றும் செல்வ சேர்க்கை உண்டாகும். மிதுன  ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில்  யோகமான பலன்கள் நடக்க இருக்கிறது.

மிதுன ராசி நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால் யோகமான பலன்கள் நடைபெறும்.  மாறாக தசா புக்தி சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம் பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய பலன்களே நடைபெறும்.

மிதுன ராசி நேயர்களுக்கு அஷ்டமத்து சனி முடிவுக்கு வரப்போவதால்  இது நாள் வரை மிதுன ராசிக்காரர்கள்  அனுபவித்த கஷ்டங்கள் தீரப்போகிறது. பொருளாதார நெருக்கடிகள் நீங்கி தாராள பணவரவு ஏற்படும்.. தீராத நோய்களால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு விடிவுகாலம் வரப்போகிறது.

 உடல் ஆரோக்கியம்  மேலோங்கும். உற்சாகமும் சுறுசுறுப்பும் அதிகரிக்கும். அஷ்டம சனியால் எத்தனையோ பிரச்சினைகளையும் அவமானங்களையும் சந்தித்த மிதுன ராசி நேயர்களுக்கு இனி எல்லாம் நல்லதாகவே நடக்கப்போகிறது.

ஒன்பதில் உள்ள பாக்ய சனியால் அதிர்ஷ்ட காற்று அதிகரிக்க போகிறது.. பணவரவு  சரளமாக இருக்கும். வேலையில் சம்பளம் மற்றும் பதவி  உயர்வு  கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம்  ஏற்படும்.. நகை, பொன் பொருள், சொத்து , வாகன  சேர்க்கை உண்டாகும்.. நிறைய தான தர்மங்களை தர்ம சனி காலத்தில் செய்வது கர்ம வினையை அகற்றும்.

மிதுன ராசி நேயர்களுக்கு இளைய உடன் பிறப்புகளுடனான உறவுமுறை  சற்று கரடு முரடாக இருக்கும்,  உங்கள் தந்தையின் இருந்து  ஆதரவு கிட்ட அதிக வாய்ப்பில்லை. உங்கள் குழந்தைகளின் நடத்தை மற்றும் பழக்க வழக்கங்கள்  உங்கள் மனதை பாதிக்கும். நீங்கள் அனுசரித்து  நடந்து கொள்வதன் மற்றும் விட்டு கொடுத்து போவதன்  மூலம் சில பிரச்சினைகள் தீரும்.இது நாள் வரை திருமண தடை ஏற்பட்டவர்களுக்கு  இந்த கால கட்டத்தில் இல்லற  வாழ்க்கை அமையும்.

திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி உறவில் நெருக்கம் இருக்கும். இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்வீர்கள்.

.தொழிலில் சரளமான போக்கு காணப்படும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஒரு சிலர் சொத்துக்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் தொழிலை விரிவுபடுத்த ஒரு சிலர் கடன் வாங்குவீர்கள்.

மிதுன ராசி மாணவர்கள் கல்வியில்  சிறப்பான சாதனை புரிவார்கள். கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவார்கள். தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். படைப்பாற்றல் பெருகும். போட்டித் தேர்வில் பங்கு பெறுபவர்கள் சிறப்பாக தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெறுவார்கள்.

மிதுன ராசி நேயர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். மனப் பதட்டம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதால் அதனை தவிர்ப்பது நல்லது.

மிதுன   ராசி நேயர்கள் செய்ய வேண்டிய பரிஹாரம்

சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றலாம். மிதுன ராசிக்கு  ராசிக்கு கேது 4 ல் இருப்பதும் குரு   வருகின்ற 1 மே 2024 முதல்   12ம் இடத்தில் தனகாரகர் குரு அமர இருப்பதும் தீய பலன்களை  மிதுன  ராசி நேயர்கள் அனுபவிக்க நேரிடும். ஆகையால் உங்களுடைய வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில் கேது பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி செவ்வாய் கிழமைகளில் வழிபடலாம். குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடை நீங்கி வெற்றிகள் குவியும் .

கடகம்:

திருநள்ளாறு சனி பெயர்ச்சி

சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், வருகின்ற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி 2023  மாலை 5-20 மணிக்கு மகர ராசியில் இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.

கடக  ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியால்  அமைய இருக்கும் கிரஹ நிலைகள்

கோச்சாரத்தில் கடக  ராசிக்கு  சனி அஷ்டமஸ்தானமான  8ம் இடத்திற்கு வருவதும் , ராகு 9ல் இருப்பதும் கேது 3 ல் இருப்பதும் குரு  10ல் இருப்பதும்  வருகின்ற 1 மே 2024 முதல்   11ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பது மிகவும் நன்மை தரும். சனி 8ல்  கோச்சாரத்தில் இருப்பது கடினமான பலன்களை  கடக  ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறாரார்கள். ராகு 9ல் இருப்பதும் குரு 10 ம்  இடத்தில்  இருப்பதும் சுமாரான பலன்களை தரும், ஆகையால் கடக  ராசி நேயர்கள்  சனி ,ராகு  மற்றும் குரு பிரீத்தி செய்வது நன்மை தரும்.

வெறும் 20 சதவீதம்

கடக    ராசி நேயர்கள்  வெறும் 20 சதவீதம்  யோகமான பலன்களை அனுபவிக்க இருக்கிறார்கள். கடக   ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில் நன்மை மற்றும் தீய பலன்கள் கலவையாக நடக்க இருக்கிறது. .

கடக ராசி நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால் யோகமான பலன்கள் நடைபெறும்.  மாறாக தசா புக்தி சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம் பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய பலன்களே நடைபெறும்.

மேலும் பாதகாதிபதி , மார்காதிபதி , அஷ்டமாதி தசை , புத்தி நடைபெற்றாலும்  இவர்கள் ஜாதங்களில் வலுவிழந்து இருந்தால் ஒழிய யோகமான பலன்கள் ஏற்பட தடை உண்டாகும். ஆகையால் தக்க பரிகாரங்கள் செய்வது நன்மை தரும்.

 கடக ராசிக்கு சனிபகவான் இதுநாள் வரை ஏழாம் வீட்டில்  கண்டச்சனியாக இருந்து கஷ்டங்களைக் கொடுத்தார் இனி எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக அமரப்போகிறார். அகப்பட்டவனுக்கு அஷ்டம சனி என்று கூறுவார்கள்.

இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும்  அவற்றை சமாளிக்கும் திறன் உங்களுக்கு ஏற்படும்.. எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது  சரள யோகம் ஆகும். நீண்ட ஆயுள் , ஆரோக்கியமான உடல் அமைப்பு , காரியங்களில் வெற்றி ஆகியவை உண்டாகும்.  எதிர்பாராத பணவரவு வந்து கடக ராசி நேயர்களை திக்குமுக்காட வைக்கும்.

ஏப்ரல் 2024 வரை  கடக ராசிக்கு குரு 10ம் வீட்டில் சஞ்சரிப்பார்.  அஷ்டம சனி மற்றும் குரு 10ல் இருப்பது டிக்ஜாம் புயலை போல உங்களை அல்லாட வைக்கும்.

கடன் வாங்கி புதிய பணமுதலீடுகளை செய்ய வேண்டாம்.  புதிய தொழில் முயற்சிகள் மே 2024 க்கு பிறகு மேற்கொள்ளலாம். நீங்கள் பார்த்து வருகின்ற  வேலையை  விடும் முன்பு ஒருமுறைக்கு  இருமுறை யோசிக்கவும். மற்றவர்கள் கூறும்  பேராசை வார்த்தைகளை நம்ப வேண்டாம்.

பங்குச்சந்தை முதலீடுகளில் ஈடுபட வேண்டாம்.. இருக்கிறதை வைத்துக்கொண்டு மனநிறைவு உடன்  வாழுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று  கவனம் தேவை.

கடக ராசி நேயர்களுக்கு அஷ்டம சனியும் மற்றும் குரு 10 ல் கோச்சாரத்தில் இருப்பதும் மிகவும் சோதனையான காலம் ஆகும். சிலருக்கு வேலை போயிருக்கும். வேலையில் பல சங்கடங்களை சந்தித்து இருப்பீர்கள். அவமானங்களையும் சங்கடங்களையும் சந்தித்து இருப்பீர்கள். தொழிலில் பல கஷ்டங்களையும் சங்கடங்களையும் சந்தித்து இருப்பீர்கள்.

உதாரணமாக ஒரு மிக உயரிய பதவியில் இருந்த ஒரு தமிழ்நாடு காவல் அதிகாரி சக பெண் அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்டதால் பதவியை இழந்து தண்டனை பெற்றுள்ளார். இன்னொரு உயர் பதவி வகித்த காவல் அதிகாரி ஓய்வு பெற்றபின் தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தின் தலைவராக நியமிக்க தமிழ்நாடு  அரசு பரிந்துரைத்தாலும் அதனை தமிழ்நாட்டு ஆளுநர் நிராகரிக்கிறார். அதாவது கடக ராசி நேயர்களுக்கு இதுபோன்ற சோதனையான காலகட்டத்தை சந்திக்க நேரிடலாம். ஆகையால் மிக்க கவனம் தேவை.

ஆயினும் வருகின்ற 1 மே 2024 முதல்   11ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பது கடக ராசி நேயர்களுக்கு  மிகவும் நன்மையான பலன்களை தரும். தொழில் அல்லது வேளையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி யோகமான பலன்கள் ஏற்படும்.

திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் தங்கள்  துணையை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் அதனை சிறிது நாளைக்கு ஒத்திப் போடுங்கள். புதிய முதலீடு எதையும் மேற்கொள்ளாதீர்கள். பங்கு வர்த்தகம் செய்வதிலும் கவனம் தேவை.  

மாணவர்கள் கல்வியில் நன்றாக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிக்க கவனம் தேவை.

பரிஹாரம்

சனிக்கிழமைகளில் சனி ஹோரையில்  சனி பகவானுக்கு  நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபடுங்கள் அஷ்டம சனி பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகம் நடைபெறும். தினமும் காக்கைக்கு எள் மற்றும் நல்லஎண்ணெய் கலந்த சாதம் வைத்து வரவும்

பரிஹாரம்

கடக  ராசிக்கு  ராசிக்கு ராகு  9 ல் இருப்பதும் குரு   வருகின்ற 1 மே 2024 வரை    10ம் இடத்தில் தனகாரகர் குரு அமர்ந்து  இருப்பதும் தீய பலன்களை  கடக   ராசி நேயர்கள் அனுபவிக்க நேரிடும். ஆகையால் உங்களுடைய வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில்ராகு  பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி சனிக் கிழமைகளில் வழிபடலாம். குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடை நீங்கி வெற்றிகள் குவியும் .

சிம்மம்:

திருநள்ளாறு சனி பெயர்ச்சி

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், வருகின்ற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி 2023  மாலை 5-20 மணிக்கு மகர ராசியில் இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.

சிம்ம ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியால்  அமைய இருக்கும் கிரஹ நிலைகள்

கோச்சாரத்தில்  சிம்ம  ராசிக்கு  சனி  சப்தம ஸ்தானமான  7ம் இடத்திற்கு வருவதும் , ராகு 8ல் இருப்பதும் கேது 2 ல் இருப்பதும் குரு  9ல் இருப்பதும்  வருகின்ற 1 மே 2024 முதல்   10ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பது மிகவும் நன்மை மற்றும் தீயபலன்கள் கலவையாக  நடைபெறும். சனி 7ல்  கோச்சாரத்தில் இருப்பது கடினமான பலன்களை  சிம்ம ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறாரார்கள். ராகு 8ல் இருப்பதும் குரு 10 ம்  இடத்தில்  இருப்பதும் சுமாரான பலன்களை தரும், ஆகையால் கடக  ராசி நேயர்கள்  சனி ,ராகு , கேது மற்றும் குரு பிரீத்தி செய்வது நன்மை தரும்.

சிம்ம   ராசி நேயர்கள்  வெறும் 25 சதவீதம்  யோகமான பலன்களை மட்டும்  அனுபவிக்க இருக்கிறார்கள். சிம்ம ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில் நன்மை மற்றும் தீய பலன்கள் கலவையாக நடக்க இருக்கிறது. .

சிம்ம  ராசி நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால் யோகமான பலன்கள் நடைபெறும்.  மாறாக தசா புக்தி சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம் பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய பலன்களே  கலவையாக நடைபெறும்.

மேலும் பாதகாதிபதி , மாரகாதிபதி , அஷ்டமாதி தசை , புத்தி நடைபெற்றாலும்  இவர்கள் ஜாதங்களில் வலுவிழந்து இருந்தால் ஒழிய யோகமான பலன்கள் ஏற்பட தடை உண்டாகும். ஆகையால் தக்க பரிகாரங்கள் செய்வது நன்மை தரும்.

 கண்டச்சனி காலம் என்றாலும் கவலை வேண்டாம்.

சனிபகவான் சிம்ம  ராசிக்கு ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானத்தில் கண்டச்சனியாக பசஞ்சரிக்க போகிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ம ராசி நேயர்களுக்கு உயர்தரமான  பலன்கள் கிடைக்கப்போகிறது. இந்த சனி பெயர்ச்சியால்  வேலையில்  உள்ளவர்களுக்கு  பதவி உயர்வை தருவார்,

ஒரு சில சிம்ம ராசி நேயர்கள் .வெளிநாடு  படிக்க அல்லது வேலை செய்ய அல்லது தொழில் தொடங்குவார்கள். வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு  எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.. 7ம் இடத்தில் ஆட்சி பெற்ற  சனி பகவானால் சச யோகத்தால்  யோகமான பலன்கள் சிம்ம ராசி நேயர்களுக்கு உண்டாகும்.. பண வரவும் சேமிப்பும் அதிகரிக்கும். கும்ப ராசியில் உள்ள ஆட்சி பெற்ற சனியின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் தீய பலன்கள் குறையும். ஏழுக்கு உடைய சனி  ஏழில் இருப்பதால் திருமணம் தடைகளை தாண்டி இந்த இரண்டரை ஆண்டுகளில் தடைபெற்ற திருமணம் நிறைவேறும்.

ஏப்ரல் 2025ஆம் ஆண்டு வரை களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் பயணம் செய்வதால் கணவன் மனைவி குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நன்மை தரும். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

வருகின்ற 1 மே 2024 முதல் குரு பகவான் சிம்ம ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10 ம் இடத்திற்கு வர இருக்கிறார். கோச்சாரத்தில் குரு 10ல் இருக்கும் பொழுது வேலை மற்றும் தொழிலில் பிரச்சனைகளை இருக்கும். 10ல் குரு வரும் பொழுது பதவி பாழ் என்று கூறுவார்கள். பிரதமர் , முதல் அமைச்சர் , அமைச்சர் பதவிகளை குரு 10ல் பொழுது அரசியல்வாதிகள் இழந்து இருக்கிறார்கள். துரியோதனன் பட்டம் இழந்ததும் , இறைவனே ஒரு தலைஓட்டில் இரந்துண்டு வாழும் நிலைக்கு தள்ள பட்டதும் குரு 10ம் இடத்திற்கு வந்த பொழுதுதான் என்பதை நாம் உணர வேண்டும். சிம்ம ராசி நேயர்கள் செய்யும் வேலையில் அல்லது தொழிலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய கால கட்டம் இது .

கோச்சாரத்தில் கேது 2ம் இடத்திலும் ராகு 8ம் இடத்திலும் சிம்ம ராசிக்கு சஞ்சாரம் செய்வது நன்மையான பலன்கள் நடை பெறுவதற்கு தடையை ஏற்படுத்தும். முன் கோபத்தால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பரிஹாரம்

சனிக்கிழமையன்று ஊனமுற்றோர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். சனிபகவானின் குருவான கால பைரவரை தினமும் மற்றும் தேய்பிறை அஷ்டமியில்  வணங்குங்கள்  சனி பகவான் உங்களுக்கு நன்மையே தருவார்.சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவான், பைரவரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

சிம்ம    ராசிக்கு  ராகு  8 ல் இருப்பதும் கேது 2ல் இருப்பதும் , குரு   வருகின்ற 1 மே 2024  முதல்   10ம் இடத்தில் தனகாரகர் குரு அமர்ந்து  இருப்பதும் தீய பலன்களை சிம்ம   ராசி நேயர்கள் அனுபவிக்க நேரிடும். ஆகையால் உங்களுடைய வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில்ராகு  பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி சனிக் கிழமைகளில் வழிபடலாம். செவ்வாய் கிழமை தோறும் கேது பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடை நீங்கி வெற்றிகள் குவியும் .

         கன்னி ராசி  சனி பெயர்ச்சி பலன்கள்

கன்னி ராசிக்கு ருண ரோக சத்ரு சனி

திருநள்ளாறு சனி பெயர்ச்சி

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், வருகின்ற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி 2023  மாலை 5 மணி 23 நிமிடத்திற்கு  மகர ராசியில் இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.

கன்னி  ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியால்  அமைய இருக்கும் கிரஹ நிலைகள்

கோச்சாரத்தில்   கன்னி  ராசிக்கு  சனி  ருண ரோக சத்ரு  ஸ்தானமான  6ம் இடத்திற்கு வருவதும் , ராகு 7ல் இருப்பதும் கேது 1 ல் இருப்பதும் குரு  8ல் இருப்பதும்  வருகின்ற 1 மே 2024 முதல்   9ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பது மிகவும் நன்மை மற்றும் தீயபலன்கள் கலவையாக  நடைபெறும்.

சனி 6ல்  கோச்சாரத்தில் இருப்பது யோகமான பலன்களை  கன்னி ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறாரார்கள்.

கன்னி ராசிக்கு 6ம் இடத்தில் சனி அமர இருப்பதால் ,  கன்னி ராசி நேயர்களின்  வாழ்க்கை முழுவதும் வலிமையும், பலமும் நிறைந்தவராக, எதிரிகள் பந்தாடப்படுவர். எதிர்பாராத பண வரவு கிடைப்பதோடு, தைரியமும், துணிவுடன் தன் வாழ்க்கையை நடத்துவார்.ஆரோக்கியம் மேம்படும், மனோ தைரியம் மிகுந்து காணப்படும்.

ராகு 7ல் இருப்பதும் கன்னி ராசியில் கேது இருப்பதும் குடும்ப வாழ்க்கையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .

குரு 9 ம்  இடத்தில்  இருப்பதும் நன்மையான  பலன்களை தரும். ஓடிப்போனவனுக்கு குரு 9ல் என்று கூறுவார்கள். கன்னி ராசி மாணவர்கள் கல்வியில் மனமை அடைவார்கள். புதிய ஆராய்ச்சிகளை செய்து ஒரு சிலர் முனைவர் பட்டம் பெறுவார்கள்., இது நாள் வரை  புத்திர பாக்கியம், தடைபெற்றவர்களுக்கு தற்சமயம் உண்டாகும். விரும்பிய வண்ணம் காரிய வெற்றி, நிலபுலன் சேர்கை ஆகியவை ஏற்படும்.

ஆகையால் கன்னி ராசி நேயர்கள்,ராகு , மற்றும் கேது பிரீத்தி செய்வது நன்மை தரும்.

 கன்னி  ராசி நேயர்கள்   85 சதவீதம் யோகமான பலன்களை அனுபவிக்க இருக்கிறார்கள். கன்னி ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில் நன்மையான பலன்களே அதிகம்  நடக்க இருக்கிறது.

கன்னி   ராசி நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால் யோகமான பலன்கள் நடைபெறும்.  மாறாக தசா புக்தி சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம் பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய பலன்களே  கலவையாக நடைபெறும்.

மேலும் பாதகாதிபதி , மாரகாதிபதி , அஷ்டமாதி தசை , புத்தி நடைபெற்றாலும்  இவர்கள் ஜாதங்களில் வலுவிழந்து இருந்தால் ஒழிய யோகமான பலன்கள் ஏற்பட தடை உண்டாகும். ஆகையால் தக்க பரிகாரங்கள் செய்வது நன்மை தரும்.

சனி ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருப்பின், கோட்சார ரீதியாக கெடுபலன் தரும் ஸ்தானத்தில் இருப்பினும் அது அதிக கெடுதிகளைத் தர மாட்டார்.

 கன்னி ராசிக்காரர்களே.. சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஐந்தாம் இடத்தில  இருந்து கன்னி ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். பொதுவாக சனி பகவான் 3 ,6, 11 போன்ற இடங்களில் சஞ்சரிக்கும் பொழுது ஜாதகருக்கு யோகமான பலன்களை அள்ளித்தருவார் என்பதில் சிறிதளவும் ஐயம் கொள்ள வேண்டாம்.   6ம் இடமான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து சனி பகவான் முழு ராஜயோகத்தையும் கன்னி ராசி நேயர்களுக்கு தரப்போகிறார். . ஆறாம் வீட்டு அதிபதி சனி பகவான் ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து இருப்பது ஹர்ஷ யோகம் என்று அழைக்கபடும்.

இந்த ஹர்ஷ யோகத்தால் , கன்னி ராசியை நேயர்களுக்கு நீண்ட ஆயுளை கொடுப்பர். ஆரோக்கியத்தில் நல்ல முனேற்றம் காணப்படும். நல்ல துணிச்சலை தரும்.. தன்னம்பிக்கை மிக்கவர்களாக இருப்பார்கள். . மாணவர்களுக்கு உயர் கல்வி யோகம் உண்டாகும். .எதிரிகளை வெல்லும்ஆற்றலை கொடுக்கும். வம்பு , வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும்.

.சனி பகவான் ஆறாம் வீடானா கும்பத்திற்கு  தனது சொந்த வீட்டுக்கு வருவதால் நோய்கள் தீரும்.  ஆரோக்கியம் பெருகும். வருமானம் பெருகி கடன்கள் அடைபடும். . அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். திடீர்  எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் தேடி வரும்.. புதிய தொழில்களை மூலம் லாபங்கள் அதிகரிக்கும். . எதிரிகளை வெற்றிக்கொள்வீர்கள்.. உங்களின் வாழ்க்கையில்  ராஜயோகத்தை தரப்போகிறார் சனி பகவான். இனி இரண்டரை ஆண்டு காலம் உங்களுக்கு ராஜயோக காலம். யோகமான வாழ்கை தேடி வரும். வரும் தை மாதத்திற்குப் பிறகு கன்னி ராசிக்காரர்களின் செல்வமும் செல்வாக்கும் ஓங்கி காணப்படும்.

பரிஹாரம்

ஆறாம் வீட்டில் பயணம் செய்யும் ருண ரோக சத்ரு ஸ்தான சனி என்பதால் திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சனீஸ்வர பகவானையும், சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கி வந்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

ராகு 7ல் இருப்பதும் கன்னி ராசியில் கேது இருப்பதும்  குடும்ப வாழ்வில் சில சங்கடங்களை ஏற்படுத்தும்.ஆகையால் உங்களுடைய வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில் கேது பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி செவ்வாய் கிழமைகளில் வழிபடலாம். ராகு பகவானுக்கு சனிக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடை நீங்கி வெற்றிகள் குவியும் .

துலாம் சனி பெயர்ச்சி

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், வருகின்ற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி 2023  மாலை 5 மணி 23 நிமிடத்திற்கு  மகர ராசியில் இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.

துலா   ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியால்  அமைய இருக்கும் கிரஹ நிலைகள்

கோச்சாரத்தில்  துலா     ராசிக்கு  சனி  பஞ்சம   ஸ்தானமான  5ம் இடத்திற்கு வருவதும் , ராகு 6ல் இருப்பதும் கேது 12ல் இருப்பதும் குரு  7ல் இருப்பதும்  வருகின்ற 1 மே 2024 முதல்   8ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பது மிகவும் நன்மை மற்றும் தீயபலன்கள் கலவையாக  நடைபெறும்.. சனி 5ல்  கோச்சாரத்தில் இருப்பது யோகமான பலன்களை  கன்னி ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறாரார்கள். ராகு 6ல் இருப்பதும் குரு 7 ம்  இடத்தில்  இருப்பதும்  நன்மையான  பலன்களை தரும், ஆகையால் கன்னி ராசி நேயர்கள்,கேது மற்றும் குரு பிரீத்தி செய்வது நன்மை தரும்.

 துலா   ராசி நேயர்கள்   90 சதவீதம்  யோகமான பலன்களை  அனுபவிக்க இருக்கிறார்கள்.  துலா  ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில் நன்மையான பலன்களே அதிகம்  நடக்க இருக்கிறது. .துலா   ராசி நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால் யோகமான பலன்கள் நடைபெறும்.  மாறாக தசா புக்தி சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம் பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய பலன்களே  கலவையாக நடைபெறும்.

மேலும் பாதகாதிபதி , மாரகாதிபதி , அஷ்டமாதி தசை , புத்தி நடைபெற்றாலும்  இவர்கள் ஜாதங்களில் வலுவிழந்து இருந்தால் ஒழிய யோகமான பலன்கள் ஏற்பட தடை உண்டாகும். ஆகையால் தக்க பரிகாரங்கள் செய்வது நன்மை தரும்.

சனி ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருப்பின், கோட்சார ரீதியாக கெடுபலன் தரும் ஸ்தானத்தில் இருப்பினும் அது அதிக கெடுதிகளைத் தர மாட்டார்.

துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி யோகமான  பலன்களைத் தரும்.  சனி பகவான் இன்னும் இரண்டரை ஆண்டுகள் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார்.

துலா  ராசிக்காரர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.  வருமானம் பெருகும். சேமிப்பு மிகும். அதன் மூலம் வீடு, சொத்து வாங்கலாம். புதிய முதலீடு மூலம் லாபம் உண்டாகும்.  இது நாள் வரை திருமணம் தடைபெற்றவர்களுக்கு திருமணம் செய்வதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.  நல்ல  வாழ்க்கைத்  துணை அமையும். உங்கள் வாழ்க்கைத் துணையிடம் இருந்து அதிக அன்பும் மரியாதையும் பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகளை  மேற்கொள்ளலாம்.. அவை லாபம் தரும்.

துலா ராசிக்கு இது நாள் வரை அர்த்தாஷ்டம சனியால் கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்த நீங்கள், விபத்துக்களை சந்தித்த உங்களுக்கு நீங்கள் சந்தித்த  துன்பங்களில் இருந்து விடிவுகாலம் இந்த சனி பெயர்ச்சியால் உங்களுக்கு நடக்க போகிறது.

 சனிபகவான் பஞ்சமஸ்தானமான ஐந்தாம் வீட்டில் அமர்வது சிறப்பு. பூர்வஜென்ம புண்ணியங்களை பலன்களை  அனுபவிக்க போகிறீர்கள்.. நன்மையான பலன்களே உங்களுக்கு அதிகம் நடக்க இருக்கிறது. அர்த்தாஷ்டம சனியால் வேலை இழந்தவர்களுக்கும், வேலை கிடைக்காமல் தவிப்பவர்களுக்கும்விரைவில் புதிய வேலை கிடைக்க போகிறது. நீங்கள் நினைத்து பார்த்திரதா  சம்பளத்தில் நல்ல வேலை உங்களுக்கு கிடைக்க இருக்கிறது.

வேலை செய்யும் இடத்தில் சங்கடங்களை சந்தித்தவர்களுக்கு இனி மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். வேலை  உயர்வும் , சம்பள உயர்வும்  ஒரு சேர கிடைக்கும். சிலருக்குவிரும்பிய  இடத்திற்கு  அனுகூல இடமாற்றம் கிடைக்கும். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் துலா ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறார்கள்.. பணவரவுசரளமாக  இருக்கும். செய் தொழில் வளர்ச்சி பெறும். திருமண தடைகள் நீங்கும். புதிய வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும்.

ராகு 6ல் இருப்பது எதிரிகளை பந்தாடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .மனைவி மற்றும்  நண்பர்களினால் அதிக நன்மையே அடைவீர்கள். பெண்கள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட நாட்கள் இருந்து வந்த கடன் தொல்லைகள் நீங்கி ஆனந்தமாய் இருப்பீர்கள்.12ல் கேது இருப்பது  ஞானமார்க்கத்தில் ராசி நேயர்களை ஈடுபடவைக்கும். பல கோயில்களுக்கு ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள். தான தர்மம் போன்றவற்றில் ஈடுபாடு ஏற்படும்.

பரிஹாரம்

உங்களுடைய வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில்ராகு  பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி சனிக் கிழமைகளில் வழிபடலாம். செவ்வாய் கிழமை தோறும் கேது பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடை நீங்கி வெற்றிகள் குவியும் .ஸ்ரீ ஆஞ்சநேயரை  தினமும் வழிபட்டு வருவது நல்லது.

       விருச்சிகம்: சனி பெயர்ச்சி

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், வருகின்ற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி 2023  மாலை 5 மணி 23 நிமிடத்திற்கு  மகர ராசியில் இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.

விருச்சிகம் அர்த்தாஷ்டம சனி

விருச்சிக   ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியால்  அமைய இருக்கும் கிரஹ நிலைகள்

கோச்சாரத்தில்  விருச்சிக ராசிக்கு  சனி  நான்காம்    ஸ்தானமான  4ம் இடத்திற்கு வருவதும் , ராகு 5ல் இருப்பதும் கேது 11ல் இருப்பதும் குரு  6ல் இருப்பதும்  வருகின்ற 1 மே 2024 முதல்   7ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பது மிகவும் நன்மை மற்றும் தீயபலன்கள் கலவையாக  நடைபெறும்.. சனி 4ல்  கோச்சாரத்தில் இருப்பது யோகமான பலன்களை   விருச்சிக   ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறாரார்கள். ராகு 5ல் இருப்பதும் குரு 6 ம்  இடத்தில்  இருப்பதும்  நன்மையான  பலன்களை தர தடை ஏற்படுத்தும்., ஆகையால் விருச்சிக  ராசி நேயர்கள் ராகு மற்றும் குரு பிரீத்தி செய்வது நன்மை தரும்.

விருச்சிக    ராசி நேயர்கள்   45 சதவீதம்  யோகமான பலன்களை மட்டும்  அனுபவிக்க இருக்கிறார்கள்.  விருச்சிக  ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில் நன்மையான பலன்களே அதிகம்  நடக்க இருக்கிறது.

விருச்சிக  ராசி நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால் யோகமான பலன்கள் நடைபெறும்.  மாறாக தசா புக்தி சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம் பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய பலன்களே  கலவையாக நடைபெறும்.

மேலும் பாதகாதிபதி , மாரகாதிபதி , அஷ்டமாதி தசை , புத்தி நடைபெற்றாலும்  இவர்கள் ஜாதங்களில் வலுவிழந்து இருந்தால் ஒழிய யோகமான பலன்கள் ஏற்பட தடை உண்டாகும். ஆகையால் தக்க பரிகாரங்கள் செய்வது நன்மை தரும்.

சனி ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருப்பின், கோட்சார ரீதியாக கெடுபலன் தரும் ஸ்தானத்தில் இருப்பினும் அது அதிக கெடுதிகளைத் தர மாட்டார்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கடந்த ஒரு தசாப்தமாக  கஷ்டமான காலகட்டம் . ஏழரை சனி ஒருவழியாக முடிந்ததே என்று நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில்  சமீபத்தில் நடந்த ராகு கேது பெயர்ச்சியின் பொழுது ஜென்ம கேதுவால் பலசங்கடங்களை சந்தித்தீர்கள். இப்போது அர்த்தாஷ்ட சனிகாலம் வரப்போகிறது. அர்த்தஷடம சனிபகவான்  சங்கடங்களை தருவாரோ என்று அஞ்ச  வேண்டாம். நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் ஜலதி யோகம்  அமையப்பெற்றதால் அதிக சங்கடங்கள் இருக்காது. மேலும் சனி பகவான் 4ல் ஆட்சி பெற்றதால் சச மகா யோகம் அமையப்பெறுகிறது.. சனியின் பத்தாவது பார்வை விருச்சிக ராசி மீது விழுவதால் உங்கள் தொழில் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

 பணியில் இருப்பவர்களுக்கு உத்யோக உயர்வு  கிடைக்கும். பணவரவு சரளமாக இருக்கும். வீடு, கார் என சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அதே நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த நேரிடும். நோய்களிலிருந்து பூரணமாக குணம் அடைவீர்கள்.

 தாயாரின்  உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவை. எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும்.

திருமணத்திற்கு காத்திருப்பவர்கள் தங்கள்  துணையை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால் அதனை சிறிது நாளைக்கு ஒத்திப் போடுங்கள். புதிய முதலீடு எதையும் மேற்கொள்ளாதீர்கள். பங்கு வர்த்தகம் செய்வதிலும் கவனம் தேவை.  மாணவர்கள் கல்வியில் நன்றாக கவனம் செலுத்த வேண்டும்.

வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். மனப் பதட்டம் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதால் அதனை தவிர்ப்பது நல்லது.

பரிஹாரம்

உங்களுடைய வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில் ராகு  பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி சனிக் கிழமைகளில் வழிபடலாம். குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடை நீங்கி வெற்றிகள் குவியும் .ஸ்ரீ ஆஞ்சநேயரை  தினமும் வழிபட்டு வருவது நல்லது.

தினமும்  வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வணங்க கவலைகள் நீங்கும். உங்கள் கஷ்டங்கள்  ஒரு முடிவுக்கு வரும்.

தனுசு  சனி பெயர்ச்சி பலன்கள் 2023  :

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், டிசம்பர் மாதம் 20ஆம் தேதி 2023  மாலை 5 மணி 23 நிமிடத்திற்கு  மகர ராசியில் இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.

தனுசு    ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியால்  அமைய இருக்கும் கிரஹ நிலைகள்

கோச்சாரத்தில்   தனுசு ராசிக்கு  சனி  தைரிய , வீரிய    ஸ்தானமான  3ம் இடத்திற்கு வருவதும் , ராகு 4ல் இருப்பதும் கேது 10ல் இருப்பதும் குரு  5ல் இருப்பதும்  வருகின்ற 1 மே 2024 முதல்   6ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பது மிகவும் நன்மையான பலன்களே  நடைபெறும். பொதுவாக சனி பகவான் 3 ,6,,11 ல் கோச்சார ரீதியாக சஞ்சரிக்கும் பொழுது ராசி நேயர்களுக்கு யோக பலன்களை வாரி வழங்குவதில் சனிபகவானுக்கு வேறு எந்த கிரகமும் நிகரான பலன்களை தருவது சந்தேகேமே  சனி 3ல்  கோச்சாரத்தில் இருப்பது யோகமான பலன்களை   தனுசு   ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறாரார்கள். ராகு 4ல் இருப்பதும் குரு 6 ம்  இடத்தில்  இருப்பதும்  நன்மையான  பலன்களை தர தடை ஏற்படுத்தும்., ஆகையால் தனுசு  ராசி நேயர்கள் ராகு மற்றும் குரு பிரீத்தி செய்வது நன்மை தரும்.

தனுசு   ராசி நேயர்கள்   90% சதவீதம் யோகமான பலன்களை மட்டும்  அனுபவிக்க இருக்கிறார்கள். தனுசு  ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில் நன்மையான பலன்களே அதிகம்  நடக்க இருக்கிறது.

தனுசு ராசி நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால் யோகமான பலன்கள் நடைபெறும்.  மாறாக தசா புக்தி சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம் பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய பலன்களே  கலவையாக நடைபெறும்.

மேலும் பாதகாதிபதி , மாரகாதிபதி , அஷ்டமாதி தசை , புத்தி நடைபெற்றாலும்  இவர்கள் ஜாதங்களில் வலுவிழந்து இருந்தால் ஒழிய யோகமான பலன்கள் ஏற்பட தடை உண்டாகும். ஆகையால் தக்க பரிகாரங்கள் செய்வது நன்மை தரும்.

சனி ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருப்பின், கோட்சார ரீதியாக கெடுபலன் தரும் ஸ்தானத்தில் இருப்பினும் அது அதிக கெடுதிகளைத் தர மாட்டார்.

 ஏழரை சனி முடிந்து தைரிய சனி ஆரம்பித்து விட்டது. தனுசு ராசிக்காரர்கள் கடந்த ஏழரை ஆண்டு காலமாகவே ஏழரை சனியின் பிடியில் சிக்கி பல கஷ்டங்கள் ,துயரங்கள்  நஷ்டங்களை சந்தித்து வந்தீர்கள்.. உங்களுக்கு இனி எல்லாம் நல்லதாகவே நடக்கப்போகிறது.  இனி உங்களுக்கு  விடிவு காலம்தான். காரணம் ஏழரை சனியிடம் இருந்து முழுமையாக விடுபடப்போகிறீர்கள். இந்த சனி பெயர்ச்சியால் உங்களுக்கு சங்கடங்கள், துயரங்கள்  நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கப்போகிறது.

 நீண்ட நாட்களாக வராத பணம் உங்கள் இல்லம் தேடி வரும். வாழ்க்கையில் முன்னேற்றமான அறிகுறி காணப்படும். கடந்த ஏழரை ஆண்டு காலமாக எத்தனையோ துயரங்களை துன்பங்களை அனுபவித்து சொல்ல முடியாத கஷ்டங்களை சந்தித்து இருப்பீர்கள். உங்களின் துன்பங்கள், துயரங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது.  வாழ்க்கையில் இதுவரை இழந்த மன நிம்மதி கிடைக்கப்போகிறது. நோய் பாதிக்கப்பட்டு உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு  அதன் பாதிப்புகள்  தற்போது குறையும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி பகவான்  இனி லாபங்களைத் தரப்போகிறார்.

 மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் அமரப்போகும் சனிபகவானால் 2024ஆம் ஆண்டு முதல் வெற்றிகளை மட்டுமே அனுபவிக்க போகிறீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. வேலை கிடைக்காதவர்களுக்கு இனி மேல் நல்ல வேலை வீடு தேடி வரும். தடைபெற்ற திருமணங்கள் தற்போது கைகூடும்.

தனுசு ராசி நேயர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வும்  ஒரு சேர கிடைக்கும். சிலருக்கு விரும்பிய  இடத்திற்கு  அனுகூல இடமாற்றம் கிடைக்கும். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தனுஷ்  ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறார்கள்.

 பணவரவுசரளமாக  இருக்கும். செய் தொழில் வளர்ச்சி பெறும். திருமண தடைகள் நீங்கும். புதிய வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சிலர் வெளிநாடு சென்று மேற்கல்வி கற்க , தொழில் செய்ய , வேலையில் சேர வாய்ப்பு கிடைக்கும். வருமானம் பெருகுவதால் சேமிப்பு நிறைய உண்டாகும். கடன்களை தீர்த்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்,

பரிஹாரம்

உங்களுடைய வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில் ராகு  பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி சனிக் கிழமைகளில் வழிபடலாம். குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடை நீங்கி வெற்றிகள் குவியும் .ஸ்ரீ ஆஞ்சநேயரை  தினமும் வழிபட்டு வருவது நல்லது.

தினமும்  வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வணங்க கவலைகள் நீங்கும். உங்கள் கஷ்டங்கள்  ஒரு முடிவுக்கு வரும்

       மகரம்: சனி பெயர்ச்சி பலன்கள் 2023  :

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், டிசம்பர் மாதம் 20ஆம் தேதி 2023  மாலை 5 மணி 23 நிமிடத்திற்கு  மகர ராசியில் இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.

மகர   ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியால்  அமைய இருக்கும் கிரஹ நிலைகள்

கோச்சாரத்தில்  மகரராசிக்கு  சனி  குடும்ப , வாக்கு , தன, நேத்திர    ஸ்தானமான  2ம் இடத்திற்கு வருவதும் , ராகு 3ல் இருப்பதும் கேது  9ல் இருப்பதும் குரு  4ல் இருப்பதும்  வருகின்ற 1 மே 2024 முதல்   5ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பது மிகவும் நன்மையான பலன்களே  நடைபெறும். சனி 2ல்  கோச்சாரத்தில் இருப்பது யோகமான பலன்களை  மகர   ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறாரார்கள். கேது  9ல் இருப்பதும் குரு 4 ம்  இடத்தில்  இருப்பதும்  நன்மையான  பலன்களை தர தடை ஏற்படுத்தும்., ஆகையால் மகர  ராசி நேயர்கள் கேது  மற்றும் குரு பிரீத்தி செய்வது நன்மை தரும்.

மகர   ராசி நேயர்கள்   50% யோகமான பலன்களை மட்டும்  அனுபவிக்க இருக்கிறார்கள்.  மகர ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில் நன்மையான பலன்களே அதிகம்  நடக்க இருக்கிறது. தீய பலன்களும் இருக்கும்.

மகர ராசி நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால் யோகமான பலன்கள் நடைபெறும்.  மாறாக தசா புக்தி சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம் பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய பலன்களே  கலவையாக நடைபெறும்.

மேலும் பாதகாதிபதி , மாரகாதிபதி , அஷ்டமாதி தசை , புத்தி நடைபெற்றாலும்  இவர்கள் ஜாதங்களில் வலுவிழந்து இருந்தால் ஒழிய யோகமான பலன்கள் ஏற்பட தடை உண்டாகும். ஆகையால் தக்க பரிகாரங்கள் செய்வது நன்மை தரும்.

சனி ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருப்பின், கோட்சார ரீதியாக கெடுபலன் தரும் ஸ்தானத்தில் இருப்பினும் அது அதிக கெடுதிகளைத் தர மாட்டார்.

 

கடந்த இரண்டரை வருடங்களாக ஜென்ம சனியால் அதிகம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களே.. நீங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் பரிதியை கண்ட பனிபோல் விலகி ஓடப்போகிறது.. காரணம் ஜென்ம சனி விலகி பாத சனியாக மகர ராசிக்கு தொடரப்போகிறது. மகர ராசிக்கு ஏழரை சனி முழுமையாக விலக இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன. ஆனாலும் மகர ராசிக்கு சனி பகவான் அதிபதி என்பதால் , சொந்த ராசி நேயர்களுக்கு அதிக தொல்லைகள் கொடுக்கமாட்டார் என்று உறுதியாக சொல்லலாம்.

மேலும் மகர ராசி நேயர்களுக்கு 2ம் இடத்தில் ஆட்சி பெற்ற சனி அமர்வது தேனு யோகத்தை தரும். இதனால் மகர ராசி நேயர்களுக்கு தங்கள் வாக்கு சாதுர்யத்தால் எதிரிகளை சமாளிப்பார்கள். தாராளமான பண வரவு ஏற்படும். செல்வாக்கு உயரும். சில மகர ராசி நேயர்கள் வெளி நாடு சென்று உயர் கல்வி கற்கும் யோகம் உண்டாகும். மாணவர்களளின் கல்வியில் நல்ல முன்னேற்றமான போக்கு காணப்படும்.

 தடையில்லா தன வருமானமும்  அதீத லாபமும் கிடைக்கும். பாத சனி காலம் என்பதால் ஏழரை சனியின் கடைசி இரண்டரை ஆண்டு காலம் கொஞ்சம் கவனம் தேவை. சனியின் பார்வை ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு,பதினொன்றாம் வீடுகளின் மீது விழுவதால் கஷ்டங்களை எளிதாக கடந்து விடலாம்.  தாயாரின் உடல் நிலையில் சற்று கவனம் தேவை.

 குடும்ப சனியாக இரண்டாம் வீட்டில் சனிபகவான் அமரப்போவதால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் வீண் விவாதங்கள் வந்து போகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே சண்டைகள் சச்சரவுகள் வந்து போகும். விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை இருந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து மீளமுடியும்.

இந்த கால கட்டத்தில் யாருக்கும் பணத்தை கடனாக தர வேண்டாம் மற்றும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. கடன் கொடுத்த பணத்தை வசூலிப்பதிற்குள் போதும் போதும் என்று ஆகி விடும்... பொருளாதார நெருக்கடியால் பல தொல்லைகளை சமாளிக்க நேரிடும்.  எனவே பேசும் வார்த்தைகளிலும், பணம் கொடுக்கல் வாங்கலிலும் கவனமும் நிதானமும் தேவை.

மகர ராசி மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவார்கள். புதிய ஆராய்ச்சிகளை செய்து ஒரு சிலர் முனைவர் பட்டம் பெறுவார்கள்., இது நாள் வரை  புத்திர பாக்கியம், தடைபெற்றவர்களுக்கு தற்சமயம் உண்டாகும். விரும்பிய வண்ணம் காரிய வெற்றி, நிலபுலன் சேர்கை ஆகியவை ஏற்படும்

மகர  ராசி நேயர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வும்  ஒரு சேர கிடைக்கும். சிலருக்கு விரும்பிய  இடத்திற்கு  அனுகூல இடமாற்றம் கிடைக்கும். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் மகர   ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறார்கள்.. பணவரவுசரளமாக  இருக்கும். செய் தொழில் வளர்ச்சி பெறும். திருமண தடைகள் நீங்கும். புதிய வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும்.  சிலர் வெளிநாடு சென்று மேற்கல்வி கற்க , தொழில் செய்ய , வேலையில் சேர வாய்ப்பு கிடைக்கும்.

பரிஹாரம்

உங்களுடைய வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில் கேது பகவானுக்கு செவ்வாய் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடை நீங்கி வெற்றிகள் குவியும்

சனிக்கிழமை ஆஞ்சநேயரை வணங்கினாலும் அனுமன் சாலிசா பாராயணம் செய்தாலும்  ஏழரை சனியால் ஏற்படும் தொல்லைகளிருந்து விடுபடலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

 சனி சாந்தி பரிகார ஹோமம் செய்யலாம்.         ஏழரை சனியில் குடும்ப சனி பாதசனி காலம் என்பதால் வாலாஜாபேட்டையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வழிபடலாம்.

கும்பம்: சனி பெயர்ச்சி பலன்கள் 2023  :

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், டிசம்பர் மாதம் 20ஆம் தேதி 2023  மாலை 5 மணி 23 நிமிடத்திற்கு  மகர ராசியில் இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.

 

கும்ப  ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியால்  அமைய இருக்கும் கிரஹ நிலைகள்

கோச்சாரத்தில் கும்ப ராசிக்கு  சனி  ஜென்ம ராசி   ஸ்தானமான  1ம் இடத்திற்கு வருவதும் , ராகு 2ல் இருப்பதும் கேது  8ல் இருப்பதும் குரு  3ல் இருப்பதும்  வருகின்ற 1 மே 2024 முதல்   4ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பது சற்று கடுமையான பலன்களே  நடைபெறும்.. சனி 1ல்  கோச்சாரத்தில் இருப்பது யோகமான பலன்களை   கும்பராசி நேயர்கள் அனுபவிக்க தடை ஏற்படுத்தும்.. கேது  8ல் இருப்பதும் குரு 4 ம்  இடத்தில்  இருப்பதும்  நன்மையான  பலன்களை தர தடை ஏற்படுத்தும்., ஆகையால்  கும்ப ராசி நேயர்கள் சனி , ராகு கேது  மற்றும் குரு பிரீத்தி செய்வது நன்மை தரும்.

  கும்ப ராசி நேயர்கள்   40% யோகமான பலன்களை மட்டும்  அனுபவிக்க இருக்கிறார்கள்.  கும்ப ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில் நன்மை மற்றும் தீமையான  பலன்களே அதிகம்  நடக்க இருக்கிறது. தீய பலன்களும் இருக்கும்.

கும்ப ராசி நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால் யோகமான பலன்கள் நடைபெறும்.  மாறாக தசா புக்தி சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம் பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய பலன்களே  கலவையாக நடைபெறும்.

மேலும் பாதகாதிபதி , மாரகாதிபதி , அஷ்டமாதி தசை , புத்தி நடைபெற்றாலும்  இவர்கள் ஜாதங்களில் வலுவிழந்து இருந்தால் ஒழிய யோகமான பலன்கள் ஏற்பட தடை உண்டாகும். ஆகையால் தக்க பரிகாரங்கள் செய்வது நன்மை தரும்.

சனி ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருப்பின், கோட்சார ரீதியாக கெடுபலன் தரும் ஸ்தானத்தில் இருப்பினும் அது அதிக கெடுதிகளைத் தர மாட்டார்.

கும்ப ராசி நேயர்களே , சனி பகவான் உங்கள்  ஜென்ம ராசியில் அமரப்போகிறார். ஜென்மசனி தொடங்குகிறது. சனி பகவான் உங்களுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார்  இதனால் சச ஏற்படுகிறது. சச யோகத்தால்  அணைத்து விதமான தீய பலன்கள் நற்பலன்களே ஏற்படும். சனி கும்ப ராசிக்கு அதிபதி என்பதால்  நீங்கள் சந்திக்கும் அணைத்து பிரச்சனைகளில் இருந்து காப்பாற்ற படுவீர்கள்.

ஏழரை சனி முதல் சுற்றில் உள்ளவர்களுக்கு ஜென்ம சனி மன அழுத்தம், தடுமாற்றங்களை மற்றும் பணக்கஷ்டங்களை  தருவார். கும்ப ராசியில் பிறந்த 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த சனிப்பெயர்ச்சியை எளிதாக கடந்து சென்று விடுவீர்கள். ஏழரை சனி காலகட்டம் என்பதால் கடினமாக உழைப்பீர்கள், பொறுப்பு மற்றும் கடமைகளும் அதிகரிக்கும்.

உழைப்பு ,உழைப்பு என்று 24 மணி நேரமும் உழைப்பீர்கள்.. ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். கடல் கடந்து சென்று மேல் படிப்பு , வேலை வாய்ப்பு மற்றும்  தொழில் செய்யும் யோகம் உண்டாகும்.. அரசு பணிக்கான தேர்வுகளை எழுதியிருப்பவர்கள்  அதில் வெற்றி பெறுவீர்கள்.

பரிஹாரம்

உங்களுடைய வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில்  ராகு பகவானுக்கு சனி கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம். கேது பகவானுக்கு செவ்வாய் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடை நீங்கி வெற்றிகள் குவியும்.

சனி பகவானுக்கு சனி கிழமைகளில் நல்லெண்ணெய் எள் தீபம் ஏற்றி வழிபடவும். ஸ்ரீ காலபைரவரை தேய்பிறை அஷ்டமிகளில் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் வழிபடலாம்.

             மீனம்: விரைய சனி

சனி பெயர்ச்சி பலன்கள் 2023  :

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், டிசம்பர் மாதம் 20ஆம் தேதி 2023  மாலை 5 மணி 23 நிமிடத்திற்கு  மகர ராசியில் இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.

மீன  ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியால்  அமைய இருக்கும் கிரஹ நிலைகள்

கோச்சாரத்தில்  மீன  ராசிக்கு  சனி  அயன , சயன , போக ஸ்தானமான  12ம் இடத்திற்கு வருவதும் , ராகு 1ல் இருப்பதும் கேது  7ல் இருப்பதும் குரு  2ல் இருப்பதும்  வருகின்ற 1 மே 2024 முதல்   3ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பதுசற்று கடுமையான பலன்களே  நடைபெறும்.. சனி 12ல்  கோச்சாரத்தில் இருப்பது யோகமான பலன்களை   மீன  ராசி நேயர்கள் அனுபவிக்க தடை ஏற்படுத்தும்.. கேது  7ல் இருப்பதும் குரு 3 ம்  இடத்தில்  இருப்பதும்  நன்மையான  பலன்களை தர தடை ஏற்படுத்தும்., ஆகையால்   மீன  ராசி நேயர்கள் சனி , ராகு கேது  மற்றும் குரு பிரீத்தி செய்வது நன்மை தரும்.

மீன    ராசி நேயர்கள்   20% யோகமான பலன்களை மட்டும்  அனுபவிக்க இருக்கிறார்கள்.   மீன  ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில் நன்மை மற்றும் தீமையான  பலன்களே அதிகம்  நடக்க இருக்கிறது. தீய பலன்களும் இருக்கும்.

மீன  ராசி நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால் யோகமான பலன்கள் நடைபெறும்.  மாறாக தசா புக்தி சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம் பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய பலன்களே  கலவையாக நடைபெறு மேலும் பாதகாதிபதி , மாரகாதிபதி , அஷ்டமாதி தசை , புத்தி நடைபெற்றாலும்  இவர்கள் ஜாதங்களில் வலுவிழந்து இருந்தால் ஒழிய யோகமான பலன்கள் ஏற்பட தடை உண்டாகும். ஆகையால் தக்க பரிகாரங்கள் செய்வது நன்மை தரும்.

சனி ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருப்பின், கோட்சார ரீதியாக கெடுபலன் தரும் ஸ்தானத்தில் இருப்பினும் அது அதிக கெடுதிகளைத் தர மாட்டார்.

மீன ராசிக்கு சனி பகவான்  12,ஆம் வீட்டில்  பயணம் செய்வது ஏழரை சனி காலமாகும். முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி. 2023 ஆம் ஆண்டு முதல் மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு விரைய சனியாக ஏழரை சனி காலம் தொடங்குகிறது. இந்த கால கட்டத்தில் பணத்தை  சேமித்து வைத்திருக்காமல்  சுப சிலவுகள் மற்றும்  சொத்துக்களில் முதலீடு செய்யலாம். ராசிக்கு 12ம் அதிபதியான சனி பகவான் 12ல் ஆட்சி பெற்று காணப்படுவது  விமல யோகம் ஆகும். இதனால் மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். 

சனி பகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டிற்கு அதிபதி. விரைய சனி காலமாக இருப்பதால் லாப சனி காலத்தில் சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு செய்வது நல்லது. அது தவிர சொத்துக்களாக வாங்கி முதலீடு செய்வது நல்லது.

மீன ராசி நேயர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வும்  ஒரு சேர கிடைக்கும். சிலருக்கு விரும்பிய  இடத்திற்கு  அனுகூல இடமாற்றம் கிடைக்கும். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் மீன ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறார்கள்.

 பணவரவுசரளமாக  இருக்கும். செய் தொழில் வளர்ச்சி பெறும். திருமண தடைகள் நீங்கும். புதிய வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சிலர் வெளிநாடு சென்று மேற்கல்வி கற்க , தொழில் செய்ய , வேலையில் சேர வாய்ப்பு கிடைக்கும். வருமானம் பெருகுவதால் சேமிப்பு நிறைய உண்டாகும். கடன்களை தீர்த்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்,

பரிஹாரம்

உங்களுடைய வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில்  ராகு பகவானுக்கு சனி கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம். கேது பகவானுக்கு செவ்வாய் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடை நீங்கி வெற்றிகள் குவியும்.

சனி பகவானுக்கு சனி கிழமைகளில் நல்லெண்ணெய் எள் தீபம் ஏற்றி வழிபடவும். ஸ்ரீ காலபைரவரை தேய்பிறை அஷ்டமிகளில் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் வழிபடலாம்.

 சனிக்கிழமை தோறும் காகத்திற்கு உணவு வைப்பதன் மூலம்  விரய சனியால்  ஏற்படும் சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கும்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் இருக்கும் வாலீஸ்வரரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.


திருநள்ளாறு:

 காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீதர்பாரணேஸ்வரர் தேவஸ்தானம் அமைந்துள்ளது. இங்கு சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இவ்வாலயத்தில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். சனிப்பெயர்ச்சியின்போது தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாருக்கு வந்திருந்து நலங்குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை எள்தீபம் ஏற்றி வணங்கி செல்வார்கள்.


No comments:

Post a Comment