Search This Blog

Sunday, April 19, 2026

7ல் ராகு செவ்வாய்-7ம் இடத்திற்கு சனி பார்வை -மனநோயாளி மனைவி அமையும் வாய்ப்பு?

 7ல் ராகு செவ்வாய்-7ம் இடத்திற்கு சனி பார்வை  -மனநோயாளி மனைவி அமையும் வாய்ப்பு?


கிரிஷ்ன் சோகக்கதை

கிரிஷ் நன்கு படித்தவன் ஐ டி துறையில் வேலை கைநிறைய சம்பளம் சொந்த வீடு வாகனம்  அமைய பெற்றவன்

வயது 27   அவனுக்கு அவன் பெற்றோர்கள் பெண் பார்க்க.

ஆரம்பித்தார்கள் . நல்ல வசதியான குடும்பத்தில் ஒரே பெண்ணாக அமைந்தது .

ஆசையுடன் முதலிரவு

திருமணம் பெரும் கோலாகலமாக நடைபெற்றது. அன்று இரவு முதலிரவு . ஆசையுடன் அழகிய மனைவியை எதிர்பார்த்து காத்திருந்தான். மனைவியும் பால் சொம்புடன் அறைக்குள் வந்தாள் ,

அவன் ஆசை ஆசையாக மனைவின் கையை பிடித்தான். அவ்வளவு தான் அவன் முகத்தில் ஒரு குத்து விழந்தது ,

அறைந்தது வேறு யாருமில்லை . அவனின் ஆசை புது மனைவிதான் ,

என்னை தொந்திரவு செய்யாதீர்கள் , எனக்கு அசதியாக இருக்கிறது. நான் தூங்க வேண்டும் என்றாள் .

சரி பரவாயில்லை என்று கிரிஷ் நினைத்தான் . நாளை எல்லாம் சரியாகி  விடும் என்று கருதினான்.

அடுத்த நாளும் இதே கதைதான்.

இவ்வாறு ஒரு மாதம் சென்றது . தினமும் இதே கதைதான். அவன் பொறுமை இழந்து பெண்ணின் பெற்றோர்களிடம் விஷயத்தை சொன்னான் .

மனநோய் பிரச்னை

அவர்கள் தங்கள் மனநோய் பிரச்னை உள்ளது என்று கூறினார்கள் . மருத்துவர்கள் திருமணம் நடந்தால் மனநோய் சரியாகிவிடும் என்று சொன்னதால் திருமணம் செய்தோம் என்று கூறினார்கள். பிறகு இரு குடும்பமும் கலந்து உரையாடி விவாகரத்து செய்து கொண்டார்கள்.

7 இடத்தில் ராகுவும் செவ்வாயும்

கிரிஷ் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7 இடத்தில் ராகுவும் செவ்வாயும் இணைந்து காணப்பட்டதாலும் , 7 இடத்தை சனி பார்த்ததாலும் இந்த அவல நிலை ஏற்பட்டது.

 

 

 

லக்கினம்

 

 

 

 

 

 

ராசி சக்ரம்

 

 

 

 

சனி

 

 

 

 

 

செவ்வாய் , ராகு

 

 

சனி பார்வை

7-ம் இடத்தில் ராகு-செவ்வாய் சேர்க்கை மற்றும் அதன் மீது சனி பார்வை இருப்பது, கடுமையான திருமண தோஷமாகக் கருதப்படுகிறது. இது திருமண வாழ்க்கையில் அதிக மனக்கசப்பு, தாமதம், பிரிவினை அல்லது துணையின் உடல்/மனநல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனினும், லக்னாதிபதி பலம், குரு பார்வை இருந்தால் பாதிப்பு குறையும். கவனமான ஜாதகப் பொருத்தம் அவசியம்.

7-ல் ராகு-செவ்வாய்:

இந்த சேர்க்கை திருமண வாழ்க்கையில் தேவையற்ற வாக்குவாதங்கள், கோபம், அவநம்பிக்கை மற்றும் ஏமாற்றங்களை ஏற்படுத்தலாம்.

சனி பார்வை:

 7-ம் வீட்டின் மீது சனியின் பார்வை, திருமண வாழ்க்கையில் தேக்கநிலை, பற்றுதலின்மை, கணவன்-மனைவி இடையே இடைவெளியை உண்டாக்கலாம்.

மனைவியின் நிலை:

இத்தகைய அமைப்புள்ள ஜாதகத்தில், துணையின் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் (மன அழுத்தம், மனநல பாதிப்புகள்) அல்லது குணநலன்களில் கடுமையான மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது.

11ம் இடத்தில சுக்கிரனும் புதனும்

ஆயினும் கிரிஷ் ஜாதகத்தில் 11ம் இடத்தில சுக்கிரனும் புதனும் இணைந்து காணப்படுவதால் கிரிஷுக்கு மறுமணம் விரைவில் அமையும் என்று பலன் கூறப்பட்டது..

தோஷ சாம்யம்

தோஷ சாம்யம்  என்பது திருமணப் பொருத்தத்தில், ஆணுக்கும் பெண்ணுக்கும் ஜாதகத்தில் உள்ள பாபக் கிரகங்களின் (செவ்வாய், சனி, ராகு, கேது, சூரியன்) பாதிப்பு சமமாக உள்ளதா அல்லது ஒத்துப் போகிறதா என்று பார்ப்பதாகும்.

பெண்ணை  விட ஆணுக்கு அதிக தோஷம் இருந்தால், அது பிரிவினை அல்லது குடும்ப வாழ்வில் கடுமையான கருத்து வேறுபாடுகளை உண்டாக்கலாம்.

ஜோதிட ஆலோசைணைகளுக்கு  ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295




Friday, April 17, 2026

கடக லக்கினத்திற்கு யோககாரகர் செவ்வாய் தசை நடந்தும் ரூபாய் 2000 கோடி இழந்த ஜாதகர் ?

 \கடக லக்கினத்திற்கு யோககாரகர் செவ்வாய் தசை நடந்தும் ரூபாய் 2000 கோடி இழந்த ஜாதகர் ?


ஜாதகர் கடக லக்கனத்தில் மற்றும் கடக ராசியில்  பிறந்தவர் கடக லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்தில் ஆட்சி

சாமர யோகம்

அந்த காலத்தில் மணர்களுக்குத்தான் சாமரம் வீசுவார்கள் . இதனால் ஒரு அரசரை போல் வாழும் யோகம் உண்டு .

கடக லக்கினத்தில் பிறந்த அரசியல் தலைவர்கள்

கடக லக்கினத்தில் பிறந்த அரசியல் தலைவர்கள் அறிஞர் அண்ணா , கலைஞர் கருணாநிதி , முன்னாள் பிரதமர் தேவ கவுடா, ஜவாஹர்லால் நேரு , இந்திரா காந்தி , ராஜ்நாத் சிங்,பி.வி. நரசிம்ம ராவ்,லல்லு பிரசாத் யாதவ் மற்றும் முன்னாள் பிரதமர் வீ பீ சிங்.

பிரம்ம ஹத்தி தோஷம்

பிரம்ம ஹத்தி தோஷம் என்பது ஜாதகத்தில் குரு மற்றும் சனி கிரகங்களின் சில குறிப்பிட்ட அமைப்புகளால் உருவாகும் ஒரு முக்கியமான தோஷமாகும்.

குருசனி சேர்க்கை பிரம்ம ஹத்தி தோஷம் உருவாக்கும் போது, அது வாழ்க்கையை சோதித்து, பிற்பாதியில் உயர்த்தும்.

பொருளாதார சிக்கல்கள் – எவ்வளவு வருமானம் வந்தாலும் நிம்மதி இல்லாத வாழ்க்கை.

ஹர்ஷ யோகம்

கடக லக்கினத்திற்கு 6ம் அதிபதி குரு 6ல் ஆட்சி  ஹர்ஷ யோகம்

ஹர்ஷ யோகம் என்பது ஷட்வர்க ராஜயோகங்களில் ஒன்று.

எதிரிகளை வெல்வார்.நோய்களை சமாளிப்பார்.கடன், வழக்கு போன்ற சிக்கல்களை வெற்றிகரமாக முடிப்பார்.

விமல  யோகம்

விமல  யோகம்  புதன் 12ம் அதிபதி 12ல் ஆட்சி

பிறருக்கு உதவுதல், சமூக சேவை, தர்மம்.

பாரிஜாத யோகம்

11ம் அதிபதி சுக்கிரன் 11ல் ஆட்சி

யோககாரகர் செவ்வாய் தசையில் ஏன் ரூ 2000 கோடி இழப்பு ?

 செவ்வாய் கடக லக்கினத்திற்கு 5 மற்றும் 10 ம் அதிபதி ஆவர். கடக லக்கினத்திற்கு செவ்வாய் யோககாரகர் . ஆனால் அவர் தசையில் ஏன் ரூ 2000 கோடி இழப்பு. செவ்வாய் கடக லக்கினத்திற்கு பாபியான புதன் சாரம் வாங்கி தசை நடத்தியதால் இந்த நஷ்டம்,

யோக தசை நடந்தும் செவ்வாய் பலன் தராமல் போனதற்கு , செவ்வாய் நட்பு சாரமான சூரியன், சந்திரன், குரு ஆகிய ஒன்றில் சாரம் வாங்கி தசை நடத்தியிருந்தால் ஜாதகருக்கு செவ்வாய் தசை யோகத்தை வாரி வழங்கியிருக்கும் என்று உறுதிஉத்தரவை யாக சொல்லலாம்.

சாராய ஆலை அதிபர் ஜெகத்ரட்சகன் சொத்துக்களை அமலாக்க துறை பறிமுதல்

அமலாக்கத்துறை சோதனை (மார்ச் 2025): மதுபான கொள்முதல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விவகாரத்தில், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

சொத்து பறிமுதல்:

ஜெகத்ரட்சகன் தொடர்பான நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின

ஆனால் உச்ச நீதி மன்றம் அமலாக்கத்துறை உத்தரவை  றது செய்து ஜெகத்ரட்சகன் சொத்துக்களை திருப்பி அனுபவிக்க  உத்திரவு இட்டுள்ளது.

ஏப்ரல் 2026-ல் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

சொத்து பறிமுதல் ரத்து:

சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் செய்ததாகக் கூறி, ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கிய உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

பறிபோன ரூ 2000 கோடி

அதுபோன்று இந்த ஜாதகருக்கு  பறிபோன ரூ 2000 கோடி தற்போது நடக்கும் ராகு தசையில் திரும்ப வந்து சேரும் என்பது உறுதி

 

ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295



 

Wednesday, April 1, 2026

"கோடி புண்ணிய யோகம்" என்றால் என்ன? இந்த யோகம் அமைய எந்த விதமான கிரகங்கள் அமைப்பு ஜாதகத்தில் இருக்கும்?

 "கோடி புண்ணிய யோகம்" என்றால் என்ன?

 இந்த யோகம் அமைய எந்த  விதமான கிரகங்கள் அமைப்பு ஜாதகத்தில் இருக்கும்?

"கோடி புண்ணிய யோகம்"

"கோடி புண்ணிய யோகம்" என்பது ஜோதிடத்தில் மிகச் சிறப்பான செல்வ யோகம். இந்த யோகம் அமையும் போது, ஒருவரின் வாழ்க்கையில் திடீர் செல்வம், உயர்ந்த பதவி, சமூக மரியாதை, மற்றும் கோடீஸ்வர நிலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக குரு, சுக்கிரன் போன்ற கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் இந்த யோகம் அமையும்.

பஞ்ச மஹாபுருஷ யோகங்களின் சங்கமம்:

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் (ருசக யோகம்), புதன் (பத்ர யோகம்), குரு (ஹம்ச யோகம்), சுக்கிரன் (மாளவ்ய யோகம்) மற்றும் சனி (சச யோகம்) ஆகிய ஐந்து கிரகங்களும் தத்தமது ஆட்சி அல்லது உச்ச வீடுகளில் இருந்து கேந்திரங்களில் (1, 4, 7, 10-ம் வீடுகள்) அமைந்திருப்பது மிகவும் அரிதான கோடி புண்ணிய யோகத்தைத் தரும்.

பௌர்ணமி சந்திரனுடன் குரு:

பௌர்ணமி அன்று பிறந்த ஜாதகத்தில், சந்திரன் முழு பலத்துடன் இருக்க வேண்டும். அந்த சந்திரனுடன் குரு பகவான் இணைந்து அல்லது சந்திரனைப் பார்த்து (கஜகேசரி யோகம்) வலுவாக இருந்தால் இது மிகப்பெரிய யோகமாகும்.

லக்னாதிபதி மற்றும் ஒன்பதாம் அதிபதி பலம்:

ஜாதகத்தின் லக்னாதிபதியும், ஒன்பதாம் வீட்டின் அதிபதியும் (பாக்கியாதிபதி) உச்சம் அல்லது ஆட்சி பெற்று, நல்ல வீடுகளில் (கேந்திரம் அல்லது திரிகோணம்) அமர்ந்து சுப கிரகங்களால் பார்க்கப்பட வேண்டும்.

சுப கிரகங்களின் கேந்திர நிலை:

குரு, சுக்கிரன், புதன் மற்றும் வளர்பிறை சந்திரன் ஆகிய நான்கு சுப கிரகங்களும் ஜாதகத்தின் கேந்திர வீடுகளில் (1, 4, 7, 10) பலமாக அமர்ந்திருப்பது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

தர்ம கர்மாதிபதி யோகம்:

ஒன்பதாம் அதிபதியும் (தர்மம்) பத்தாம் அதிபதியும் (கர்மம்) இணைந்து கேந்திரம் அல்லது திரிகோணத்தில் அமர்வது மிகவும் சிறப்பானது.

ராகு/கேதுவின் சுப நிலை:

ராகு அல்லது கேது உபசய வீடுகளில் (3, 6, 11) அமர்ந்து சுப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெறுவது எதிர்பாராத பெரிய யோகங்களைத் தரும்.

கோடி புண்ணிய யோகம் – விளக்கம்

"கோடி புண்ணியம் செய்தால் மட்டுமே கிடைக்கும்" என்ற பொருளில், மிக அரிதாக அமையும் செல்வ யோகம்.

   பலன்:

       திடீர் செல்வம் (புதையல், லாட்டரி, பங்குச்சந்தை, வியாபார வெற்றி).

       சமூகத்தில் உயர்ந்த மரியாதை.

       வாழ்க்கையில் பெரிய பதவி, அதிகாரம்.

எந்த கிரக அமைப்பில் அமையும்?ஜோதிடக் குறிப்புகளின்படி:

    குரு

       குரு நல்ல இடத்தில் (லக்னம், 2ம், 5ம், 9ம், 11ம் வீடு) இருந்தால் செல்வம், பாக்கியம் அதிகரிக்கும்.

       குரு பார்க்க கோடி நன்மைஎன்ற பழமொழி இதை உறுதிப்படுத்துகிறது.

    சுக்கிரன்

       சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால், ஆடம்பரம், செல்வம், வசதி, கலை, வியாபாரம் மூலம் செல்வம் கிடைக்கும்.

       குரு + கேது சேர்க்கை:

       குறிப்பாக ரிஷப லக்னத்தில், 5ம் வீட்டில் (கன்னி ராசி) குரு-கேது இணைந்தால், அந்த ஜாதகர் கோடீஸ்வரராகும் வாய்ப்பு உறுதி.

தசா/புத்தி காலம்:

       குரு, சுக்கிரன், சந்திரன், சூரியன் ஆகிய கிரகங்களின் நல்ல தசா, புத்தி காலம் வந்தால், செல்வம் திடீரென அதிகரிக்கும்.

கோடி புண்ணிய யோகம் அரிதாக அமையும்.

       இது ஜாதக கிரக அமைப்பு + தசா காலம் + தனிப்பட்ட முயற்சி ஆகியவற்றின் சேர்க்கையால் மட்டுமே பலன் தரும்.

       ஒருவரின் ஜாதகத்தில் குரு, சுக்கிரன், கேது நல்ல நிலையில் இருந்தால், வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் கோடீஸ்வர நிலை அடைய வாய்ப்பு அதிகம்,

 

ஜோதிட சாகரம் ஆர்  வீ சேகர் 79047 19295