Search This Blog

Wednesday, September 21, 2022

கிரஹ யுத்தத்தால் பாழ்ப்படும் திருமண வாழ்க்கை

கிரஹ யுத்தத்தால் பாழ்ப்படும் திருமண வாழ்க்கை

கிரஹயுத்தம்

எந்த லக்னம் ஆனாலும் ஜாதகத்தில் 7 க்குடையவன் 8 க்குடையவன் மற்றும் பாதகாதி பதி ஆகியோர் ஒரே பாதக்காலில் (நட்சத்திர சாரம் ) இருப்பது கிரஹ யுத்தம் என்ற நிலையை ஏற்படு த்துகிறது . இத்தகைய அமைப்பு ஜாதகர்களின் திருமண வாழ்வை மிகவும் பாதிக்கிறது.

ஓடிப்போகும் மனைவிகள்

இந்த ஜாதகருக்கு ஏற்கனவே இரு முறை திருமணம் நடந்தேறிவிட் டது . ஆனால் , இவரை பிடிக்காமல் இரு மனைவிகளும் இவரை துறந்து விட்டனர் . இதுபோன்ற ஜாதகம் அமையப்பெற்றவர்கள் முடிந்தளவு ஏற்கனவே திருமணம் ஆகி விதவை அல்லது விவாகரத்து பெற்ற பெண்ணை மனப்பதே நன்மை தரும்.

சுக ஸ்தானம்

இந்த ஜாதகத்தில் சுக ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 4ம் இடத்தில கேது இருப்பதால் சுகங்களை அனுபவிப்பதற்கு தடை ஏற்படுகிறது.

செவ்வாய் சனி சுக்கிரன் - ஒரே நட்சத்திர சாரம்

மேலும் இந்த ஜாதகத்தில் 2 மற்றும் 7ம் அதிபதியான சுக்கிரன் , லக்கினம் மற்றும் 8ம் அதிபதியான செவ்வாய் , மேஷ லக்கினத்திற்கு பாதகாதிபதியான் சனி ஆகிய கிரஹங்கள் ரோகினி 1ம் பாதத் தில் அமைந்து கிரஹ யுத்தத்தில் மாட்டிக்கொண்டுள்ளன . இதனால் தான் நிலையான திருமண வாழ்க்கை என்பது கேள்வி குறியா க அமைந்து விட்டது .

7ம் அதிபதி பாபகிரங்களுடன் சேர்க்கை

7ம் அதிபதி சுக்கிரன் அசுப கிரகங் களான செவ்வாய் சனியுடன் சேர்ந் து இருப்பதும் மகிழ்ச்சியான திருமண வாழ்வு ஏற்பட தடை ஏற்படுகிறது.

பாதகாதிபதி குடும்ப ஸ்தானத்தில்

மேலும் பாதகாதிபதியான் சனி குடுமஸ்தானமான 2ம் வீட்டில் அமர்ந்து இருப்பதும் குடும்ப வாழ்க்கை மற்றும் திருமண வாழ்வு கானல் நீராகிப்போனது .

ஜாமக்கோள் ஆரூடம்

ஜாமக்கோள் ஆரூடத்தில் உதயத்தில் பாம்பு , 7ல் ஆருடம் இருந்தால் மனைவி ஓடிபோகுதல் , திருமண விஷயத்தில் தேவை இல்லாத குழப்பங்கள் போன்றவை ஜாதகர் கேட்க கூடிய கேள்விகளா க அமையும்

கன்னிப்பெண் சாபம்- பரிஹாரம்

ஜாமக்கோள் ஆரூடத்தில் உதயத்தில் சனி நீச்சம் -7ல் ஆருடம். ஆக அமைந்தால் , கன்னிப்பெண் சாபம் ஜாதகருக்கு உண்டு என்பதை உணரலாம் . அவர்கள் வீட்டில் கன்னிப்பெண்க ள் துர்மரணம் அடைந்து இருப்பா ர்கள் . உங்கள் வீட்டில் எதாவது துர்மரணம் நடந்ததா என்று கேட்டால் ஆம் என்று பதில் வரும். - அவர்ககுக்கு எதாவது சாந்தி செய்தீர்களா என்று கேட்டால் இல்லை என்று பதில். வரும் சாந்தி செய்தால் திருமணம் வாழ்கை சந்தோஷமாக அமையும் .. ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் சாந்தி செய்தால் , திருமண தோஷம் விலகி நல்ல திருமண வாழ்கை அமைகிறது .

உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க , ஜாமக்கோள் பிரசன்னம் மூலமாக உங்கள் அணைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண.ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

May be an image of text that says 'லக்கினம் சூரியன் புதன் சுக்கிரன் சனி செவ்வாய் சந்திரன் ராசி கேது ராகு தாரதோஷ ஜாதகம் குரு'

No comments:

Post a Comment