Search This Blog

Thursday, May 2, 2024

மீனம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024-25- 1 மே 2024 முதல் மே 13, 2025...


மீனம்  ராசி குரு பெயர்ச்சி  பலன்கள் 2024-25- 1 மே 2024 முதல் மே 13, 2025 வரை

மீன ராசிக்கு  குரு பெயர்ச்சியின் பொழுது நிலைகள்

ராசியில் ராகு ஜென்ம ராகு , 3ல் குரு , 7ல் கேது , 12ல் சனி  (ஏழரை சனி தொடக்கம்)

குரு பார்வை 7,9,11

பொது பலன்

மீன ராசிக்கு குரு பகவான் 1ம் மற்றும் 10ம் அதிபதி ஆவார். இரு கேந்திரங்களுக்கு அதிபதி ஆவார்.

தீதிலா மூன்றில்  துரியோதனன் படை மாண்டதும் , தாளப்பா ஆறில் தோஷம் உண்டு தார்வேந்தர் பகை உண்டு ரோகமும் உண்டு  என்கிறது புலிப்பாணி ஜோதிட பாடல் .

தைரிய, வீரிய ஸ்தானத்திற்கு வரும்  குரு பகவானால் நினைத்த காரியங்கள்  நடக்கும் .மனநிம்மதி  நிலவும் . . வருமானம் உயரும். வீண் விரயம்  ஏற்படுவதை தவிர்ப்பீர்கள்.செய்தொழிலில் நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். இதனால் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருக்கும்.புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும்.குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். குரு 7ம் இடத்தை பார்வையிடுவதால் திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்லபடியாக திருமணம் நடக்கும்.பெற்றோர் வழியில் சில மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல்  நல்லபடியாக முடியும்.மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.



அரசியல்வாதிகள் திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாகமுடிப்பார்கள்.நல்லவேலை கிடைக்கும். வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

ராசியில் ராகு ஜென்ம ராகு

ஜென்ம ராசியில் ராகு கோச்சாரத்தில் நன்மையான பலன்களை தராது. எந்த ஒரு காரியத்தையும் சிரத்தையாக உழைத்து முடிக்கும் நிலை ஏற்படும். அவப்பெயரை எளிதாக சமபதிக்கும் நிலை ஏற்படும். நெருங்கிய உறவினர்களால் மறைமுக தொல்லை உண்டு. நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள்.



3ல் குரு

உத்தியோகத்தில் , தொழில் சிறு தடங்கல் ஏற்படலாம்.  பிறந்த ஊரை விட்டு வெளி ஊரில் தொழிலுக்கு அல்லது பனி நிமித்தம் சென்று இருக்கும் நேரம் ஆகும் இது. மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். . மதிப்பு குறையும். மனோசஞ்சலம், காரியத்தடை ஏற்படும்.

கோச்சாரத்தில் 7ல் கேது

 வாழ்க்கை துணை வழியாக பிரச்சினை ஏற்படலாம். . உடல்நிலை பிரச்சினை ஏற்படலாம்.கூட்டுத்தொழில் பிரச்சினை ஏற்படலாம். அடிக்கடி பயணம் ஏற்படும். ஆன்மீக பயணங்கள் ஏற்படும். தீர்த்த யாத்திரை செல்லும் நேரம் இது. கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து போக  வேண்டும். விட்டு கொடுத்து போனால் இல்வாழ்வு  சிறக்கும்.

7ல் கேது  இருந்தாலும் அவரை குரு பார்ப்பதால் கேள யோகம் , கோடீஸ்வர யோகம் ஏற்படுகிறது. இதனால் திடீர் தன யோகம் ஏற்படுகிறது. எதிர்பாராத வகையில் பல கோடிகளை குவிக்கும் யோகம் மீன ராசி நேயர்களுக்கு அமைகிறது.



12 ல் சனி ஆட்சி

12ல் சனி ஆட்சி பெறுவதால் , முசலயோகம் ஏற்படுகிறது. : மீன ராசி நேயர்கள் இந்த கால கட்டத்தில் கடின உழைப்பு ,மற்றும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள் .

பன்னிரெண்டாம் பாவத்தில் சனி கிரகம் இருப்பதால் .எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள்  இவருக்கு எதிரிகளாக மாறி  விடக்கூடிய வாய்ப்பு உண்டு. பணம் ஈட்டுவதில் குறிக்கோளாய் இருப்பவர்.இவரது கண்டிப்பான போக்கு இவருக்கு எதிரிகளை நிறைய உருவாக்கும்.தாம் எண்ணிய செயலை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என வெறி உள்ளவர்.ஏழரை சனி கால கட்டத்தில் மனைவி குழந்தைகள் உறவினர் நண்பர் ஆகியோருடன் பகை ஏற்படலாம். விட்டு கொடுத்து போவது நன்மை தரும்.

குரு பார்வை 7,9,11

குரு பகவான் 7ம் இடத்தை பார்ப்பதால்

மீன ராசிக்கு 7ம் இடமான வாழ்க்கைத் துணை, தொழில் கூட்டாளி ஸ்தானத்தை குரு பார்வை இடுவதால் , இதுவரை திருமணம் நடக்காமல் இருக்கக்கூடிய மீன ராசி நேயர்களுக்கு , விரைவில் திருமண நடக்க வாய்ப்புள்ளது.திருமணம் ஆனவர்களுக்கு விரைவில் புத்திர பாக்கியம் இன்னும் ஓராண்டுக்குள் கிடைக்க வாய்ப்புள்ளது.கூட்டு  தொழில் அமோகமாக இருக்கும். நண்பர்களின் உதவி தக்க நேரத்தில் கிடைக்கும். கணவன் மனைவி உறவு அமோகமாக இருக்கும். அன்னியோன்யம் கூடும்.

களத்திர ஸ்தானம், மனைவி, துணை, தொழில் கூட்டாளியைக் குறிக்கும் 7ம் இடத்தை குரு பார்ப்பதால் நல்ல மண வாழ்க்கை அமையும். கணவன் மனைவி அன்னியோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல கூட்டாளி கிடைப்பார்கள் . கூட்டு தொழில் நல்ல லாபத்தை தரும். 7ஆம் இடத்தை குரு பார்ப்பதால், உங்கள் வாழ்கை துணை மூலமாக பணவரவு கிடைக்கும்.  திருமணம் ஆகி பிரிவில் இருக்கும் தம்பதிகள் மீண்டும் சேரக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.

குரு பகவான் 9ம் இடத்தை பார்ப்பதால்

மீன ராசிக்கு குரு பகவான்  தனது பார்வையால்  9ம் இடமான தந்தை  மற்றும் பாக்கிய ஸ்தானத்தின் மீது அவரின் பார்வை விழுகிறது. இதனால் நீண்ட நாட்களாக தந்தையுடன் அல்லது தந்தை வழி உறவுகளுடன் இருந்த மன கசப்பு தீரும் .அப்பா  வழியில் சொத்து, பண வரவுகள் கிடைக்கும்.9ம் இடம் என்பதால்  என்பதால் சொத்துக்கள், திடீர் பண வரவுகள், புதிய வாய்ப்புகள் இந்த கால கட்டத்தில் வரக்கூடும். நீண்ட நாட்களாக தந்தை வழி சொத்துக்களில் உள்ள வில்லங்கம் தீர்ந்து சொத்துக்கள் உங்கள் வசம் ஆகும்.

குரு பகவான் 11ம் இடத்தை பார்ப்பதால்

குரு பகவான் 11ம் இடத்தை பார்ப்பதால்,  பறிபோன பதவி மீண்டும் கிடைக்கும். இழந்த பொருள் மீண்டும் வந்து சேரும். புதிய பொருளும் வந்து சேரும். உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.



 குரு பகவான் லாப ஸ்தானமான 11ம் இடத்தை பார்வையிடுவதால்  , பண வரவு சரளமாக இருக்கும். தொழில் நல்ல வளர்ச்சி காணும். பணியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதுநாள் வரை தாமதப்பட்ட உத்யோக உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இந்த 1 வருட காலத்திற்குள் கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் உங்களின் பெயரும், புகழும் படிப்படியாக உயரும்.உங்களுக்கு எதிர்பாராத பொருள் வரவு, அதிர்ஷ்டம் உள்ளிட்ட சுப பலன்களை எதிர்பார்க்கலாம். பங்கு சந்தை , ஸ்பெகுலேஷன் போன்றவற்றில் திடிரென்று அதீத லாபம் கிடைக்கும்.

லாபங்கள் நிறைந்த ஆண்டாக அமையும். வருடம் முழுவதும் வருமானம் நிறைந்த ஆண்டாக அமையும். செய்யும் தொழிலில் லாபத்தை தரும். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும், அறிவித்திறன் அதிகரிக்கும். சனி சிக்கல்களை உருவாக்கினாலும் குருவினால் பாதிப்புகள் குறையும். தொட்டதெல்லாம் பொன்னாகும் பொற்காலமாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு அமையப்போகிறது.

தசை , புத்தி

உங்கள் தசை , புத்தி வலுவாக இருந்தாலும் , உங்கள் பிறப்பு ஜாதகத்தில் கிரஹங்கள் வலுவாக இருந்தாலும். குரு பகவான் ஜாதகத்தில் உச்சம் , திக்பலம் ,மூலதிரிகோணம் , நீசபங்க ராஜயோகம் அடைந்துஇருந்தாலும் நல்ல யோகமான பலன்களே நடைபெறும்.

மீன ராசிக்கு குரு பகவான் 3ம் இடத்தில சஞ்சரிப்பதால் ஏற்படும் நன்மை தீமைகள்

1.நினைத்த காரியங்கள்  நடக்கும் .மனநிம்மதி  நிலவும் .

2.புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும்.

3.குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.

4.குரு 7ம் இடத்தை பார்வையிடுவதால் திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்லபடியாக திருமணம் நடக்கும்

5.மேலதிகாரிகள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள். பதவி உயர்வு கிடைக்கும்.

6.வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

7.மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். . மதிப்பு குறையும். மனோசஞ்சலம், காரியத்தடை ஏற்படும்.

8.ஆன்மீக பயணங்கள் ஏற்படும். தீர்த்த யாத்திரை செல்லும் நேரம் இது.

9.பல கோடிகளை குவிக்கும் யோகம் மீன ராசி நேயர்களுக்கு அமைகிறது.

10.இவரது கண்டிப்பான போக்கு இவருக்கு எதிரிகளை நிறைய உருவாக்கும்.

பரிஹாரம்

குரு

மீன ­ராசி நேயர்களுக்கு குரு 3ல் சஞ்சரிக்க  இருப்பதால்  தீமையான பலன்கள்   ஏற்படலாம்.. வியாழக்கிழமைகளில் கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம், கொண்டக்கடலை சாற்றி அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.

கேது

கேது 7ம் இடத்தில இருப்பதால் செவ்வாய் கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள கேது   பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.

சனி

மீன  ராசி நேயர்களுக்கு சனி  12ல் சஞ்சரிக்க  இருப்பதால் சனிக்கிழமைகளில் கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள சனி  பகவானுக்கு எள்  தீபம் ஏற்றி வழிபடலாம் அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.

1ம் ராகு

ராகு பகவான் 1ம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பதால் , சனிக்கிழமைகளில் கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள ராகு   பகவானுக்கு நெய்  தீபம் ஏற்றி வழிபடலாம் அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.


Wednesday, May 1, 2024

கும்ப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024-25- 1 மே 2024 முதல் மே 13, 2025வ...


கும்ப ராசி குரு பெயர்ச்சி  பலன்கள் 2024-25- 1 மே 2024 முதல் மே 13, 2025 வரை

கும்ப  ராசியின் கிரஹ நிலைகள்  -01-05-2024 முதல் மே 13, 2025 வரை

கும்ப ராசிக்கு குரு பகவான் 2 மற்றும் 11ம் அதிபதி ஆவார். தன காரகர் ஆன குரு தனஸ்தானங்களான 2 மற்றும் 11ம் அதிபதி என்பதால் கும்ப ராசி நேயர்களுக்கு அளவில்லாத செல்வ வளத்தை குரு பகவான் தருவார்.

1ல்  சனி, 2ல் ராகு , 8ல் கேது , 4ல் குரு

உங்கள் வாழ்க்கையில் சில சாதகமான மாற்றங்களை நீங்கள் சந்திக்கலாம். உங்கள் தன்னம்பிக்கை கூடும். பொருளாதார நிலை சரளமாக இருக்கும்.. அதிக வருமானம் வரும். என்றாலும் செலவுகள் அதிகமாக இருக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஓரளவு லாபம் பெறலாம்.வெளி நாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இது அனுகூலமாக நேரம்  ஆகும்.  குல தெய்வ வழிபாடு அவசியம் மேற்கொள்ள வேண்டும்.ஸ்பெகுலேஷன் , ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.  பணியில்  இருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள்.தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக செல்ல நினைத்த ஆன்மீக தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.



ஜென்ம சனி

கும்ப ராசிக்கு கோச்சாரம் சரியாக இல்லை. இந்த குரு பெயர்ச்சி முதல் சற்று சோதனையான காலம் . கும்ப ராசிக்கு ஏழரை சனியில் தற்சமயம் ஜென்ம சனி நடை பெறுகிறது. ஜென்ம சனி என்றால் பல்வேறு சங்கடங்களை சந்திக்க நேரிடலாம். ஆயினும் சனி பகவான் கும்ப ராசியின் அதிபதி என்பதால் , அதிக பாதிப்புகளை தரமாட்டார். மேலும் ராசியில் ஆட்சி பெற்று காணப்படுவதால் , பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான சச யோகத்தை தருவார். இந்த சச யோகத்தால் அரசு அதிகாரம், தலைமைப் பண்பு, புகழ், நல்ல வேலையாட்கள், செல்வம் ஆகியவற்றை தரும்.நீண்ட ஆயுள் . நிலையான சொத்துக்கள், நிலம், வாகனம், வீடு ஆகியவற்றை பெறுவீர்கள்.திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

 

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குப் பெரியளவு லாபம் இருக்காது. பணியில் உள்ளவர்கள் பல சிரமங்களை சந்திக்க நேரிடும்.கூட்டுத் தொழில் செய்யக்கூடியவர்களுக்கு, உங்களின் கூட்டாளி, பங்குதாரர்களால் பிரச்னை ஏற்படலாம். வாழ்கை துணையிடம் விட்டு கொடுத்து போனால் இல்லற வாழ்கை வசந்தமாக இருக்கும்.வேலை தேடுபவர்களுக்குச் சரியான வேலை அமையாமல் கஷ்டப்பட வேண்டி இருக்கும்.ஏமாற்றப்படக்கூடிய காலம்  என்பதால் மன வே..தனை உண்டாகும்.



கும்ப ராசி குரு பெயர்ச்சி  பலன்கள் 2024-25- 1 மே 2024 முதல் மே 13, 2025 வரை

தர்ம புத்திரர் நாலிலே வனவாசமப்படி போனதும் என்கிறது ஜோதிட பாடல்

கோச்சாரத்தில் குரு,  4ல் இருப்பதால்  உற்றார், நண்பர், இவர்கள் எல்லாம் பகை போன்று தோன்றுவார்கள். மனதில் குழப்பம் மிஞ்சும். பெற்ற  தாயால் அனுகூலம் உண்டு. மனம் அலை பாயும்.  வீடு வாகனம் வாங்கும் யோகம் அமையும்.  உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் கிடைக்கும். செல்வமும், செல்வாக்கும் ஏற்படும்.வசதி வாய்ப்புக்கள் உண்டாகும்.ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் இருக்கும்.

2ல் ராகு

முன்கோபம் வரும். புகழ் செல்வம் செல்வாக்கு கிடைக்கும். தானம் செய்வதற்க்கு உங்களின் மனம் ஈடுபடும். உடல் நலத்தில்  எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

8ல் கேது

உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உடல் உபாதைகளால் மருத்துவ சிலவுகள் அதிகரிக்கலாம்

இவை எல்லாமே பொதுப்பலன்கள் ஆகும். உங்கள் தசை , புத்தி வலுவாக இருந்தாலும் , உங்கள் பிறப்பு ஜாதகத்தில் கிரஹங்கள் வலுவாக இருந்தாலும். குரு பகவான் ஜாதகத்தில் உச்சம் , திக்பலம் ,மூலதிரிகோணம் , நீசபங்க ராஜயோகம் அடைந்துஇருந்தாலும் நல்ல யோகமான பலன்களே நடைபெறும்.



குருவின்  பார்வை யோகம்

குருவின்  பார்வை உங்கள் ராசிக்கு  8-வது வீடு, 10-வது வீடு மற்றும் 12-வது வீட்டில் இருக்கும்.

ஆயுள் ஸ்தானமான 8ம் இடத்தை குரு பகவான் இந்த கால கட்டத்தில் பார்வை இடுவது உங்கள் ஆயுள் விருத்தி அடையும்.

ஜீவனஸ்தானமான 10ம் இடத்தை குரு பார்வை இடுவது தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய தொழில்கள் மற்றும் வேலை வாய்ப்பு அமையும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.

2024ல் உங்கள் முடிவுகள் புத்திசாலித்தனமாகவும் விவேகமாகவும் இருக்கும்.  மேலும் மதம் மற்றும் ஆன்மீகம் விஷயத்தில் நாட்டம் அதிகம் ஆகும். உங்கள் அதிர்ஷ்டம். கூடும்.



12ம் இடம்

விரய ஸ்தானம், சயன, மோட்ச ஸ்தானத்தில் குருவின் பார்வை படும் போது, உங்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தெய்வ தரிசனம், மகான்களின் அருள் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.



4ல் உள்ள குருவால் கும்ப ராசிக்கு ஏற்பட போகும் நன்மை தீமைகள்

1. பணவரவு சரளமாக இருக்கும். சிலவுகள் அதிகரிக்கும். கவனம் கடன் வாங்காமல் சமாளிக்க கற்று கொள்ள வேண்டும்.

2. நீங்கள் சொல்வதை மற்றவர்கள் கவனித்து கேட்கும் நிலை ஏற்படும்.

3. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஆர்வம் ஏற்படும். தடைகள் விலகும்.

4. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் குதூகலம் நிறைந்து காணப்படும்.

5. புதிய முயற்சிகள் வெற்றியை தரும். வெற்றியும் முன்னேற்றமும் உண்டாகும்.

6. உடல் ஆரோக்கியம் மேம்படும். மருத்துவ சிலவுகள் கட்டுக்குள் அமையும்.

7. இதுநாள் வரை கஷ்ட படுத்திய கடன் சுமை நீங்கும்.

8.எதிரிகளை வெல்ல கூடிய ஆற்றல் உருவாகும்.

9.இழுவையில் இருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்

10. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

11. எதிர்பாராத தன வரவு ஏற்படும்

12. பணியில் உள்ளவர்களுக்கு  பதவி உயர்வு , அனுகூல இடமாற்றம் , மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

13. தொழில் உள்ளவர்கள் நல்ல லாபம் பார்ப்பார்கள் .

பரிஹாரம்

குரு

கும்ப  ராசி நேயர்களுக்கு குரு 4ல் சஞ்சரிக்க  இருப்பதால்  தீமையான பலன்கள்   ஏற்படலாம்.. வியாழக்கிழமைகளில் கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம், கொண்டக்கடலை சாற்றி அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.

கேது

கேது 8ம் இடத்தில இருப்பதால் செவ்வாய் கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள கேது   பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.

சனி

கும்ப  ராசி நேயர்களுக்கு சனி  1ல் சஞ்சரிக்க  இருப்பதால் சனிக்கிழமைகளில் கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள சனி  பகவானுக்கு எள்  தீபம் ஏற்றி வழிபடலாம் அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.

2ம் ராகு

ராகு பகவான் 2ம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பதால் , சனிக்கிழமைகளில் கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள ராகு   பகவானுக்கு நெய்  தீபம் ஏற்றி வழிபடலாம் அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.


Tuesday, April 30, 2024

மகர ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024-25- 1 மே 2024 முதல் மே 13, 2025 வர...


மகர  ராசி குரு பெயர்ச்சி  பலன்கள் 2024-25- 1 மே 2024 முதல் மே 13, 2025 வரை

12 மற்றும் 3ம் அதிபதி

மகர ராசிக்கு குரு பகவான் 12ம்  மற்றும்  3ம்  வீட்டிற்கு அதிபதி ஆவார். குரு பகவான் 5ம் வீட்டில்  சஞ்சரிக்க்க இருக்கிறார்.. இதுவரை உங்கள் ராசிக்கு 4ம்  வீட்டில் சஞ்சரித்து வந்த குருபவகான் இனி உங்கள் ராசிக்கு  5ம் வீட்டில்  பூர்வ புண்ணிய  ஸ்தானத்தில்  சஞ்சரிக்கப் போகிறார்.    மகர  ராசிக்கு  குரு பகவான்  5ம் இடத்தில  இன்னும் ஒரு வருட காலத்திற்கு சஞ்சரிக்க இருக்கிறார். இதுநாள்  வரை 4ம் இடத்தில்  இருந்த  குரு பகவான் உங்கள் தொழிலில் வளர்ச்சி இன்மை , வேலையில் முன்னேற்றம் இன்மை   போன்ற அனுகூலமற்ற    பலன்களை தந்து இருப்பர். ஆனால் தற்சமயம் 5ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் திருமணம் நடக்கும். குழந்தை வரவு உண்டாகும்.. புதிய வீடு, வாகன சேர்க்கை உண்டாகும். வேலை ஆட்கள் , சேவகர் விருத்தி உண்டாகும். கல்வியில் நல்ல முன்னேற்றம், உள்ளத்தில் ஏற்றம் , திரண்ட  செல்வ சேர்கை, அளவில்லா மகிழ்ச்சி ஏற்படும். குரு பகவான் 5-ல் இருந்தால் புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும்.



பொது பலன்

இந்த பெயர்ச்சிக் காலத்தில்  மகர ராசி நேயர்கள்  சாதகமான பலன்களைப் பெறுவீர்கள்.பணியிடத்தில் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள்.  மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.பணியில் புதிய பொறுப்புகள்  மற்றும் ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.தொழிலில்  உங்கள் கடின உழைப்பால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி காணப்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே  சுமுக நல்லிணக்க உறவு இருக்கும். கணவன் மனைவி பரஸ்பர உறவு அற்புதமாக இருக்கும் .

தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வழக்கு விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.


ஒரு சில மகர ராசி நேயர்களுக்கு வெளி நாடு சென்று கல்வி கற்கும் யோகம் உண்டாகும்.அரசியல்வாதிகள்  மேலிடத்தின் ஆதரவு இருப்பதால் புதிய பதவிகளைப் பெற்று மகிழ்வீர்கள். புதிய வியாபாரம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்ப்புகள் அகலும்.மனக் குழப்பங்கள் நீங்கும்.

குரு பார்வை 11,1,9

இந்த குரு பெயர்ச்சி மே 1, 2024 முதல் மே 13, 2025 வரை நடக்கும். குரு எந்தஇடத்தை கோச்சாரத்தில் பார்வையிடுகிறாரோ   அந்த இடம்  பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது  தன இருக்கும் குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். 5ம் பார்வையும்,9ம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

இந்த பெயர்ச்சி காலத்தில் குரு விருச்சிக  ராசிக்கு  11வது வீடு, 1வது வீடு மற்றும் 3வது வீடு ஆகிய இடங்களை பார்வை இடுகிறார்.

குரு பார்வை கோடி நன்மை என்பார்கள்.  குரு பகவான் தனக்காரகர் , தேவர்களின் குரு, பிரகஸ்பதி என அழைக்கப்படுகிறார். இவரின் அருள் இருந்தால் திருவருள் நிச்சயம் கிடைக்கும் என்பதை நியதி. எனவே தான், குருவின் பார்வை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

குரு பகவானைப் பொறுத்தவரையில் சுப பலனை அதிகமாகவும், தீமைகளைக் குறைவாகவும் கொடுப்பவராக இருக்கிறார். யார் ஒருவர் தன்னுடைய கோச்சாரத்தில்  குருவின் சுப பலன்களை பெறக்கூடிய நல்ல இடத்தில் அமர்ந்துள்ளாரோ, அவர் சமூகத்தில் மற்றவர்களால் போற்றும்படியாக வாழ்வார்.



குரு 1ம் இடத்தை பார்ப்பதால்

1-ம் இடத்தை, அதாவது ஜன்ம ராசியைப் பார்த்தால், பேரும் புகழும் உண்டாகும். அந்தஸ்து, மதிப்பு உயரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். நீங்கள் எடுத்த காரியம் வெற்றி உண்டாகும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உற்றார் , உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு அதிலே வெற்றியும் காணிப்பீர்கள். சொத்துக்களில் இருந்த வில்லங்கம் விலகும்.

குரு 9ம் இடத்தை பார்ப்பதால்

9-ம் இடத்தை, பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கும்போது, வெளிநாடு சென்று உத்தியோகம் பார்க்கும் வாய்ப்பு உண்டாகும். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள்.உங்களுக்கு உத்தியோகத்தில் பதவி உயர்வும், வெளிநாட்டில் வேலையும்  கிடைக்க வாய்ப்புகள் அதிகம். தந்தையின் தொழில் ஆதாயம் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் உங்கள் வசம் ஆகும். கோயில்களில் நடைபெறும் விசேஷ பூஜைகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

குரு 11ம் இடத்தை பார்ப்பதால்

குரு 11ம் இடத்தை பார்ப்பதால் லாப ஸ்தானத்தைப் பார்க்கும்போது, எதிர்பாராத பொருள் வரவு போன்ற சுப பலன்கள் ஏற்படும்.

உத்தியோக உங்கள் பங்களிப்பு சிறப்பாக இருக்கும். நீங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். இது நாள் வரை தடை பெற்ற உத்யோக உயர்வு தற்சமயம் கிடைக்கும். தொழில் நன்றாக இருக்கும். அபரீத லாபம் உண்டாகும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை தரும். பொருளாதார நிலை மேம்படும். வருமானம் உயரும்.  இந்த காலக்கட்டத்தில் சொத்துக்கள் வாங்கும் நிலை உருவாகும் .   ஒரு சிலருக்கு பொன் , ஆபரணம் ,  வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்

மகர  ராசிக்கு  கிரஹ நிலைகள்  -01-05-2024 முதல் மே 13, 2025 வரை

மகர  ராசி நேயர்களுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு கோச்சாரம்  நன்றாக இருக்கிறது.

5ல் குரு , 3ல் ராகு , 9ல் கேது , 2ல் சனி ஆட்சி தேனு யோகம்  தருகிறது

5ல் குரு

5ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் திருமணம் நடக்கும். குழந்தை வரவு உண்டாகும்.. புதிய வீடு, வாகன சேர்க்கை உண்டாகும். வேலை ஆட்கள் , சேவகர் விருத்தி உண்டாகும். கல்வியில் நல்ல முன்னேற்றம், உள்ளத்தில் ஏற்றம் , திரண்ட  செல்வ சேர்கை, அளவில்லா மகிழ்ச்சி ஏற்படும். குரு பகவான் 5-ல் இருந்தால் புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும்.

3ல் ராகு

பொதுவாக 3ல் ராகு கோச்சாரத்தில் அமையும் பொழுது யோகமான பலன்களை ஜாதகருக்கு வழங்குவார்.

3ம் இடம் தைரிய ஸ்தானம் என்பதால் நல்ல மனோதைரியம்  ஏற்படும். அடிக்கடி அலைச்சலை ஏற்படுத்தும். பண வரவு சரளமாக இருக்கும்.. கமிஷன் தொழில் லாபம் தரும்.. ஒரு சில நேயர்களுக்கு காது வலி ஏற்படும். உங்களின் துணைவரின் உடல்நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

9ல் கேது

அதிக ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடுவீர்கள் . தீர்த்த யாத்திரை , புனித தலங்களுக்கு பயணம் செய்வீர்கள் . அலைபாயும் மனதை ஆன்மீக ஈடுபாட்டால் மன அமைதியை கொண்டு வருவீர்கள். தந்தைவழி உறவினர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை.. பூர்விக சொத்துகளிலில் சிக்கல்கள் ஏற்படலாம். குல தெய்வ வழிபாடு அவசியம் இந்த நேரத்தில்.

2ல் சனி ஆட்சி

இதுவரை ஜென்ம சனியால் அவதியுற்ற   மகர ராசி நேயர்கள் தற்சமயம் பாத சனியால்  2ல் உள்ள சனியால் சற்று ஆறுதல் அடைவீர்கள். இன்னும் ஏழரை சனி முடிய இரண்டு வருடங்கள் கழிந்தாக வேண்டும். இருந்தாலும்  தற்போது இப்போது 2ல் ஆட்சி பெற்ற சனியால் மென்மையான , யோகமான பலன்களே ஏற்படும்.. பண வரவு சரளமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வது யோகமான பலன்களை தரும். உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை., உங்களுடைய ஆற்றல் மங்கும், கர்வம்  அதிகரிக்கும் .

தேனு யோகம்

2ல் சனி ஆட்சி தேனு யோகம்  தருகிறது. 2ல் உள்ள சனியால் நல்ல வாக்கு வன்மை ஏற்படும். செல்வம் செல்வாக்கு பெற்றவர்களாகவும், உயர்கல்வி யோகம் பெறுபவர்களாக , பெரிய வசதியான  குடும்பம் , அறுசுவை உணவு , சகல வசதி , சுகவாழ்வு கிட்டும்

உங்கள் தசை , புத்தி வலுவாக இருந்தாலும் , உங்கள் பிறப்பு ஜாதகத்தில் கிரஹங்கள் வலுவாக இருந்தாலும். குரு பகவான் ஜாதகத்தில் உச்சம் , திக்பலம் ,மூலதிரிகோணம் , நீசபங்க ராஜயோகம் அடைந்துஇருந்தாலும் நல்ல யோகமான பலன்களே நடைபெறும்.

மகர ராசிக்கு  குரு பகவான் 5ல்   சஞ்சரிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்

1.குழந்தை வரவு உண்டாகும்.

2. புதிய வீடு, வாகன சேர்க்கை உண்டாகும்.

3.கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

4.மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.

5.பணியில் புதிய பொறுப்புகள்  மற்றும் ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

6.தொழிலில்  உங்கள் கடின உழைப்பால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

7.குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி காணப்படும்.

8.கணவன் மனைவி பரஸ்பர உறவு அற்புதமாக இருக்கும்

9.புதிய வியாபாரம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்

10மனக் குழப்பங்கள் நீங்கும்.

11.வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

12 உற்றார் , உறவினர்கள் ஆதரவு கிடைக்கும்.

13.வெளிநாடு சென்று உத்தியோகம் பார்க்கும் வாய்ப்பு உண்டாகும்.

பரிஹாரம்

கேது பகவான் 9ம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பதால் , செவ்வாய்க்கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள கேது  பகவானுக்கு நெய்  தீபம் ஏற்றி வழிபடலாம் அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.

மகர  ராசி நேயர்களுக்கு சனி  2ல் சஞ்சரிக்க  இருப்பதால், ஏழரை சனியில் பாத சனி  என்பதால் , சனிக்கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள சனி  பகவானுக்கு எள்  தீபம் ஏற்றி வழிபடலாம் அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்


தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2024-25- 1 மே 2024 முதல் மே13, 2025வரை...


தனுசு   ராசி குரு பெயர்ச்சி  பலன்கள் 2024-25- 1 மே 2024 முதல் மே 13, 2025 வரை

1 மற்றும் 4ம் அதிபதி

 தனுசு  ராசிக்கு குரு பகவான் 1ம்  மற்றும்  4ம்  வீட்டிற்கு அதிபதி ஆவார். குரு பகவான் 6ம் வீட்டில்  சஞ்சரிக்க்க இருக்கிறார்.. இதுவரை உங்கள் ராசிக்கு 5ம்  வீட்டில் சஞ்சரித்து வந்த குருபவகான் இனி உங்கள் ராசிக்கு  6ம் வீட்டில்  ருண ,ரோக , சற்று சத்ரு ஸ்தானத்தில்  சஞ்சரிக்கப் போகிறார். தனுசு  ராசிக்கு  குரு பகவான்  6ம் இடத்தில  இன்னும் ஒரு வருட காலத்திற்கு சஞ்சரிக்க இருக்கிறார். இதுநாள்  வரை 5ம் இடத்தில்  இருந்த  குரு பகவான் உங்கள் தொழிலில் வளர்ச்சி  , வேலையில் முன்னேற்றம்   போன்ற அனுகூலமான   பலன்களை தந்து இருப்பர். ஆனால் தற்சமயம் 6ல் சஞ்சரிக்க இருப்பதால் கடன் வாங்கும் நிலையை  ஏற்படுத்துவார். எதிரிகளின் கை ஓங்கி இருக்கும். இன்னும் ஒரு வருட காலத்திற்கு சிறிய சங்கடங்களை சந்திக்க நேரிடும்.



குரு 10ம் இடத்தை பார்ப்பதால் , உத்தியோக உங்கள் பங்களிப்பு சிறப்பாக இருக்கும். நீங்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவீர்கள். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். இது நாள் வரை தடை பெற்ற உத்யோக உயர்வு தற்சமயம் கிடைக்கும். தொழில் நன்றாக இருக்கும். அபரீத லாபம் உண்டாகும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை தரும். பொருளாதார நிலை மேம்படும். வருமானம் உயரும்.  இந்த காலக்கட்டத்தில் சொத்துக்கள் வாங்கும் நிலை உருவாகும் .   ஒரு சிலருக்கு பொன் , ஆபரணம் ,  வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்;.

6ல் குரு இருப்பதால் உடல்  ஆரோக்கியத்தில் சற்று கவனம்  தேவை. அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது  நன்மை  தரும். சிலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்கி சமாளீப்பீர்கள். எதிரிகளின் கை ஓங்கி இருக்கும். வழுக்குகள் இழுவை நிலை காணப்படும்.



குரு பகவான் 6ம் இடத்தில சஞ்சரிப்பதால் எந்தவொரு செலவையும் செய்வதற்கு முன்பு சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும்.

ஷேர் மார்க்கெட், ஸ்பெகுலேஷன் துறைகளில் அதிக வருமானத்தை தரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும்.மாணவர்கள்  படிப்பில் முழுமையான கவனத்தைச் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம்.

இனிமேல்  தனுசு  ராசிக்கு 6ம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 10,12,2ம் இடத்தை பார்வை இடுவார்.

குரு 10ம் இடத்தை பார்வை

குரு ஐந்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். அரசு வழியில்  உதவிகள் கிடைக்கும்.  பயண வாய்ப்புகள் கைகூடிவரும். வெளிவட்டாரத்தில் உங்கள் மதிப்பு உயரும்.தொழில், கர்ம ஸ்தானத்தில் படும் போது உங்களுக்கு தொழிலில் மேன்மையும், பதவி உயர்வு, வேலையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பெற்றோரின் உடல் நலம் சீராகும்.

குரு 2ம் இடத்தை பார்வை

குரு 9ம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். . தனவரவுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். சொத்துக்களை வாங்கும் யோகம் ஏற்படும்.

குரு 12ம் இடத்தை பார்வை

விரய ஸ்தானம், சயன, மோட்ச ஸ்தானத்தில் குருவின் பார்வை படும்போது, உங்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தெய்வ தரிசனம், மகான்களின் அருள் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

குரு பெயர்ச்சியில் உங்கள் தொழிலில்  பணியில் நல்ல முன்னேற்றம் , அதற்கான தனவரவுகளும், குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பால் குடும்பத்தில் சந்தோசம் நிலவும்.

உங்கள் வீடு அருகில் உள்ள கோவிலில் உள்ள நவகிரகத்தில் இருக்கக்கூடிய குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்துவர உடல் ஆரோக்கியமும், கல்வியில் முன்னேற்றமும், எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றல் , வழக்குகளில் சாதகமான தீர்ப்பு ஆகியவை கிடைக்கும்.



 தனுசு    ராசிக்கு  கிரஹ நிலைகள்  -01-05-2024 முதல் மே 13, 2025 வரை

தனுசு  ராசி நேயர்களுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு கோச்சாரம்  சுமாராக  இருக்கிறது.

6ல் குரு , 4ல் ராகு , 10ல் கேது , 3ல் சனி ஆட்சி சௌரிய யோகம்   தருகிறது.இந்த யோகத்தால் தனுசு ராசி நேயர்கள் பராக்கிரமசாலியாகவும் , எடுத்தக் காரியத்தை முடிக்கும் தீரனாகவும் ,சகோதரர்களால் வெற்றி ஆகியவை அமையும்.

குரு பகவான் கோச்சாரத்தில் தனுசு ராசிக்கு 6ல் சஞ்சரிக்க இருப்பதால் , இந்த ஒரு வருட காலத்தில் சில எதிர்பாராத தடைகளை நீங்கள் சந்திக்கலாம்,


 

4ல் ராகு

ராகு  பகவான் 4ல் கோச்சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது ,  விஷஜந்துக்கலால் பாதிப்பு ஏற்படலாம்.. தாயாரின் உடல்நிலை கெட வாய்ப்பு உள்ளது . கணவன் மனைவி அன்னியோன்யம் நிறைந்து இருக்கும் . பெரியோர்களின் ஆதரவு ம் ஒத்துழைப்பும் இருக்கும்.  கால்நடை ஜீவன்களுக்கு மருத்துவ செலவு ஏற்படும்.



10ல் கேது

10ல் ஒரு பாபியாவது இருக்க வேண்டும் என்று சொல்கிறது ஜோதிட நூல்கள். 10ல் சுபர்கள் அமர்ந்தால் கேந்திர ஆதிபத்திய தோஷம் ஏற்பட்டு தீய பலன்கள் ஏற்படலாம். கேது  பத்தாமிடத்திற்க்கு வரும்போது தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர சிலவுகள் செய்ய நேரிடும்.. பணவரவு சரளமாக  இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். வேலை செய்யும் இடங்களில் உயர் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். பனி உயர்வு , விரும்பிய இடத்திற்கு இடம் மாற்றம் ஆகியவை ஏற்படும். பல கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபட யோகம் ஏற்படும்.

3ல் சனி ஆட்சி

பொதுவாக சனி 3ம் இடத்தில இருக்கும் பொழுது யோகமான பலன்களை தருவார். வருமானம் தாராளமாக இருக்கும்.. மண்ணை தொட்டாலும் பொன்னாகும். நோய் விலகி உடல் நலம் பெறுவார்கள். எவரை கண்டும் அஞ்சாத  மனது அமையும். கடும் பகைவர்களையும் வெற்றி காணும் நிலை அமையும்.புதிய வீடு, வாகனம், பதவி சுகம் கிடைக்கும்.

3ல் சனி ஆட்சி சௌரிய யோகம்   தருகிறது.இந்த யோகத்தால் தனுசு ராசி நேயர்கள் பராக்கிரமசாலியாகவும் , எடுத்தக் காரியத்தை முடிக்கும் தீரனாகவும் ,சகோதரர்களால் வெற்றி ஆகியவை அமையும்.

தனுசு ராசிக்கு  குரு பகவான் 6ல்   சஞ்சரிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்

1. குரு பகவான் கோச்சாரத்தில் 6ல் சஞ்சரிக்கும் பொழுது  சிறைவாசம் ஏற்படலாம். சத்திய மாமுனி ஆறிலே இரு காலிலே தளை பூண்டதும்  என்பார் புலிப்பாணி முனிவர். தளை என்பது காலிலே சங்கிலி இணைத்து இருப்பது என்று பொருள்.

2.தாளப்பா ஆறுக்கு தோஷம் உண்டு தார்வேந்தர் பகை உண்டு ரோகம் உண்டு என்பார் புலிப்பாணி முனிவர். 6லே குரு வரும்பொழுது அரசாங்கம் தண்டனையால் சிறைவாசம் நேரிடும். உடல் ஆரோக்கியம் பாதிக்க படும் என்று பொருள்.

3. பணியில் இடை நீக்கம் செய்ய பட்டிருந்தால் தற்சமயம் பணியில் சேரும் வாய்ப்பு அமையும்

 

4.புதிய வேளையில் சேரும் யோகம் உண்டாகும்

5.இதுநாள் வரை தடை பெற்ற  உத்யோக உயர்வு , சம்பள உயர்வு தற்போது கிடைக்கும்

6.குழந்தை இல்லாதவர்களுக்கு தற்சமயம் குழந்தை பாக்கியம் உண்டாகும்

7.உங்கள் செல்வாக்கு மற்றும் சொல்வாக்கு அதிகரிக்கும்

8.வெளிநாடு பயணம் , தீர்த்த யாத்திரை செல்லும் யோகம் ஏற்படும்

9.இது நாள் வரை தடை பெற்ற குழந்தை பாக்கியம் தற்சமயம் உண்டாகும்

10.சுப விரய சிலவுகள் ஏற்படும்

11.நீண்ட நாள் இருந்து வந்த கடன் தொல்லை தற்சமயம்  திருப்ப செலுத்துவீர்கள்

12.பணவரவு சரளமாக இருக்கும்

13.சுபநிகழ்ச்சிகளுக்கு பஞ்சம் இருக்காது

பரிஹாரம்

தனுசு   ராசி நேயர்களுக்கு குரு   6ல் சஞ்சரிக்க  இருப்பதால் , வியாழக்கிழமைகளில்   உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள குரு   பகவானுக்கு  நெய்  தீபம் ஏற்றி வழிபடலாம் அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.

வியாழக்கிழமைகளில் குரு ஹோரையில் ,காலை 6 am  to 7 am குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி , கொண்டக்கடலை மாலை சாற்றி , நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வர வெற்றிகள் குவியும் .

ராகு பகவான் 4ம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பதால் , சனிக்கிழமைகளில் கிழமைகளில் உங்கள் வீடு அருகில் உள்ள நவகிரஹங்களில் உள்ள ராகு   பகவானுக்கு நெய்  தீபம் ஏற்றி வழிபடலாம் அல்லது அர்ச்சனை செய்து வர நன்மையான பலன்களே உண்டாகும்.