பாதகாதிபதி வலுப்பெற்ற ஜாதகம் ஏன் போராட்டங்களை சந்திக்கிறது ?
"பாதகம் " என்பது கெடுதல் என்று பொருள் என விளங்கும். பாதகஸ் தான அதிபதியையோ "பாதகாதி பதி" என்கிறோம்.
பாதகாதிபதி ஒரு ஜாதகத்தில் வலு பெற கூடாது. அப்படி வலு பெற்றா ல் வாழ்வில் பல்வேறு சோதனைக ளை ஜாதகர் சந்திக்க நேரிடும்.
எந்த லக்கினத்திற்கு யார் பாதகாதிபதி ?
சர லக்கனம்
சர லக்கனம் ஆன மேஷம் , கடகம் , துலாம் , மற்றும் மகர லக்கினத்தி ற்கு 11ம் அதிபதி பாதகாதிபதி ஆவார். மேஷத்திற்கு சனியும் , கடகத்திற்கு சுக்கிரனும் , துலாத்தி ற்கு சூரியனும் , மகரத்திற்கு செவ்வையும் பாதகாதிபதிகளாக வருவார்கள்.
ஸ்திர லக்கனம்
ஸ்திர லக்கனம் ஆன ரிஷபம் , சிம்மம் , விருச்சிகம் , கும்பம் ஆகிய லக்கினத்திற்கு 9ம் அதிபதி (திரிகோண ) பாதகாதி பதி ஆவர். திரிகோணாதிபதி ஆன 9ம் அதிபதியே ஸ்திர லக்கினத்திற்கு பாதகஆதிபதி ஆவதால் , ஸ்திர லக்கினங்களுக்கு பாதகாதிபதி நன்மையே செய்வார் என எடுத்து கொள்ளலாம். ரிஷப ராசிக்கு பாதகாதிபதியாக சனி பகவான் வருவார்.சிம்ம ராசிக்கு பாதகாதிபதி யாக செவ்வாய் பகவான் வருவார்.விருச்சக ராசிக்கு பாதக அதிபதியாக சந்திரன் பகவான் வருவார். கும்பம் ராசிக்கு பாதகாதிபதி சுக்கிரன் பகவான் வருவார்.
உபய லக்கனம்
உபய லக்கனம் ஆன மிதுனம் , கன்னி , தனுசு , மீனத்திற்கு 7 ம் அதிபதி பாதகாதிபதி ஆக வருவார். மிதுன ராசிக்கும்,கன்னி ராசிக்கும் பாதகாதிபதியாக குருபகவான் வருவார். தனுசு மற்றும் மீனம் ராசிக்கு பாதகாதிபதியாக புதன் பகவான் வருவார்.
பாதகாதிபதி எப்போது நன்மை யை தருவார் ?
1.பொதுவாக 6,8,12ல் மறைந்தால் மிகுந்த நன்மைகளை தருவார், கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற பழமொழிக்கு ஏற்ப .
2. பாதகாதிபதி நீச்சம் அடைந்து காணப்பட்டால் நன்மைகளை தருவார்
3. பாதகாதிபதி அஸ்தங்கம் அடைந்து காணப்பட்டால் நன்மைகளை தருவார்
4. பாதகாதிபதி திரிகோணம் ஏறின் செல்வனுக்கு செல்வம் செப்பு என்கிறார் புலிப்பாணி முனிவர்.
அதாவது பாதகாதிபதி திரிகோண ஸ்தனங்கள் ஆன 1,5,9 போன்ற இடங்களில் அமர்ந்து மேலும் அந்த திரிகோணாதிபதி பலம் பெற்றிரு ப்பது நற்பலனை உண்டாக்கும்
5. பாதகாதிபதி நீசபங்கம் பெற்றிருக்க, தனது தசை , புக்தி , அந்திரங்களில் ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை ஏற்படுத்து வார்.
6. பாதகாதிபதி தன் சொந்த வீட்டிலிருந்து மறைந்து காணப்பட்டால் நன்மைகளை செய்வர்.
7. திரிகோணாதிபதி நட்சத்திர சாரங்களில் இருந்தால் பாதகாதி பதி ஜாதகருக்கு நன்மை செய்வர்.
8. பாதகாதிபதியும் திரிகோணாதி பதியும் ஒருவருக்கு ஒருவர் பரிவர் த்தனை பெற்றால் யோகத்தை தருவார்.
9. ராசியாக வரும் பாதகாதிபதி ஜாதகருக்கு தீமை செய்வதில்லை. உதாரணத்திற்கு மேஷ லக்கினத்தி ற்கு சனி பாதகாதிபதி ஆவர். மேஷ லக்கனத்தில் பிறந்தவர்கள் மகர ராசியில் அல்லது கும்ப ராசியில் பிறந்து இருந்தால் தீமைகளை செய்வதில்லை.
பாதகாதிபதி எப்பொழுது தீமை செய்வார் ?
1.பாதகாதிபதி தசையில் அட்டமாதிபதி புத்தியில் அதிக கவனம் தேவை
2.பாதகாதிபதி வலுவான இடங்களில் அமர்ந்து, ஸ்தானபலம் பெற்று, சுபர் பார்வையும் பெறுவ து யோகமான பலன்களை தராது. ஆரம்பத்தில் சுப பலன்களை தந்தால் , முடிவில் மாரகம் அல்லது அதற்கு இணையான கண்டத்தை ஜாதகருக்கு தந்து விடும்.
3. லக்னமும், ராசியும் ஒன்றாக அமைபவர்கள் பாதகாதிபதி தசை, புக்திகளில் கவனமாக இருக்க வேண்டும்
4.மிதுனம் மற்றும் கன்யா லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் பாதகாதிபதி ஆவார் . இவர்களுக்கு , பாதகாதிபதியான குரு 7. ஆட்சி பெற்று காணப்பட் டால் , கடுமையான கேந்திர ஆதிபத்திய தோஷத்தை ஏற்படுத் துவார். ஒரு சில ஜாதகர்கள் ஓரின சேர்க்கையில் ஆர்வமுள்ளவர் ஆக காணப்படுவார்கள். இவர்களுக்கு திருமண வாழ்வு என்பது கானல் நீராக அமைந்து விடும்.
செல்வி ஜெயலலிதா அவர்கள் மிதுன லக்கனத்தில் பிறந்தவர். 7ம் இடமான தனுசில் 7ம் அதிபதியான குரு ஆட்சி பெற்றதால் , பாதகாதிபதி வலுப்பெற்றதால் , கேந்திர ஆதிபத்திய தோஷம் ஏற்பட்டதால் , இவருக்கு திருமன்ன வாழ்வு என்பது காணல் நீராக அமைந்ததது.
உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க, ஜாமக்கோள் ஆருடம் மூலமாக உங்கள் பிரச்சனைகளு க்கு தீர்வு காண ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment