Search This Blog

Monday, June 26, 2023

அதிசயிக்க வைக்கும் கைலாச மலையின் ரகசியங்கள் -மிக மர்மமான கைலாச மலையின் அ...


அதிசயிக்க வைக்கும் கைலாச மலையின் ரகசியங்கள்


சிவனோட இருப்பிடம் கைலாயம்னு புராணக்கதைகளிலும், ஆன்மீக கதைகளிலும் கூற கேட்டிருப்போம்

கையிலை மலையானது இந்துக்கள், பொன் பௌத்தர்கள் மற்றும் சமணர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது.


இந்த கைலாய மலையில் சிவன் வாழ்வதாகவும், அவ்வப்போது தன் மனைவி பார்வதியுடன் தியானம் செய்வார் எனவும் அந்த நேரம் மயான அமைதி நிலவும் எனவும் அங்கு சென்று வந்தபக்தர்கள் கூறுகின்றனர்.


கைலாச மலை எவெரெஸ்ட் மலையை விட சிறிதுதான். ஆனால் கைலாச மலையை யாரும் எளிதாக ஏறி விடமுடியாது. கைலாச மலையை பாதி ஏறிய பின் கைலாச மலை ஏறுபவர்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் மூச்சு திணறல் ஏற்படும். இதில் என்ன அதிசயம் என்றால் அங்கு ஆக்ஸிஜன் நிறைய இருந்தும் சுவாசிக்க முடியாமல் திணறுவார்கள்..


இதயதுஇடிப்பு  அதிகமாக விடும். ஏறுபவர்கள் நகம் மற்றும் தலை முடி வீரைவாக வளரும். மேலும் வயது முதிர்ச்சி அடைந்து வயோதீகர்கள் போல் மாறிவிடுவார்கள். மலை ஏறுபவர்களை ஏற விடாமல் யாரோ தடுப்பது போன்ற உணர்வு அடைவார்கள்.

இதுவரை கைலாய மலையை யாரும் ஏறியது இல்லை. இது பல மதங்களின் புனிதத் தலமாகக் கருதப்படுவதால் மலையேற அனுமதி கிடையாது.

உயரம் அதிகம் உள்ள எவெரெஸ்ட மலையை இதுவரை 7000  பேருக்கு க்கு அதிகமாக ஏறியிருப்பார்கள் ஆனால் எவெரெஸ்ட விட 2000 அடி குறைவாய் உள்ள கைலாச மலையை யாரும் ஏறியதாக சரித்திரம் இல்லை.

கைலாச மலை எற முயற்சித்தவர்கள்  யாரோ அவர்கள் காதுகளில் மலை ஏறவேண்டாம் உடேன இறங்கி விடுங்கள் எச்சரிப்பதாக உணருகின்றனர். அப்படி மீறி மலை ஏறியவர்கள் யாரும் உயிருடன் திரும்பி வந்ததாக சரித்திரம் இல்லை.

தேவலோக மனிதர்கள்மற்றும் கந்தர்வர்கள் கைலாய மலையில் வாழ்வதாக நம்புகின்றனர்.

கைலாய மலையை காரைக்கால் அம்மையார்,சுந்தரமூர்த்தி நாயனார்,,சேரமான் பெருமாள் நாயனார்,பெருமிழலைக் குறும்பர் நாயனார்,ஒளவையார் அப்பர் பெருமான் ஏறி சிவ சக்தியின் அருளை பெற்றார்கள் என்று கூறுகிறார்கள் .

கைலாச மலையில் சிவ பெருமானும் அம்பிகையும் இருப்பதாக இந்த மதத்தினர் தீவிரமாக நம்புகின்றனர்.

இந்த காணொளி பார்த்ததற்கு மிக்க நன்றி. மறவாமல் என்னுடைய Youtube சேனலை மறவாமல் subscribe செய்யுங்கள்.

 

 


No comments:

Post a Comment