Search This Blog

Saturday, July 20, 2024

தமிழ்நாட்டில் உள்ள அதிசய கோயில்கள்

 தமிழ்நாட்டில் உள்ள அதிசய கோயில்கள்



1.நெல்லையப்பர் கோவிலில் ஏழு இசை ஸ்வரங்கள்

நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம்.

2.குண்டடம் வடுக நாத பைரவர்

திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்ப்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம். அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட. இந்த அதிசய சிற்ப்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை.

3.சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது

இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். அப்ப எவ்ளவு துல்லியமாக செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். வட சென்னையில் உள்ள வியாசர் பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் சிற்ப்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால். அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது.

4.ஓசோன் படலம்

ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம்.

5.யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை

யாழி என்கிற மிருகத்தின் சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழம்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.

5.தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய கோபுரமாக அமைந்திருப்பது திருவரங்கத்தின் ராஜகோபுரம்தான்.

13 நிலைகளுடன் அமைக்கப்பட்ட இந்தக் கோபுரம், தமிழ் கோபுரக் கட்டுமானக் கலையின் உச்சத்தைக் காட்டுகிறது.காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில் கோபுரம். ஒரே ஒரு நிலையைக் கொண்ட மிகச் சிறிய கோபுரம் இது

6. ஶ்ரீபெரும்புதூரில் உள்ள ராமானுஜர் உருவம் குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது.

7.தர்மபுரி மல்லிகார்ஜுன கோயிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி, பூமியில் படியாத வண்ணம், அந்த காலத்திலேயே அவ்வளவு நுட்பமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

8.குளித்தலை-மணப்பறை வழியில் உள்ள ரத்னகிரி மலையில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயம் தானாய் நடக்கிறது. முக்கியமாக, இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை என்று சொல்லப்படுகிறது.



9.புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேனுகந்தநாதருக்கு, தினமும் தேனடையிலிருந்து தேன் எடுத்து அபிஷேகம் செய்யப்படுகிறது. வேறெங்கும் இதுபோன்று பூஜை முறைகள் நடைபெறுவதில்லை.

10.திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் காய்க்கும் காய்கள் லிங்க வடிவில் இருப்பது இங்குள்ள விசேசமாகும்.

11.ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோயிலில் மட்டும், பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கப்படுகிறது. இதுபோன்று, வேறு எந்தச் சிவன் கோயிலிலும் தீர்த்தம் கொடுப்பது இல்லை.

ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ வீ சேகர் 79047 19295

No comments:

Post a Comment