Search This Blog

Sunday, July 7, 2024

எட்டு திக்குகளை ஆளும் சக்திகள்,பிராம்மி,கௌமாரி,வராஹி

 

எட்டு திக்குகளை ஆளும் சக்திகள்... 🌹🙏




1. கிழக்கு - பிராம்மி

2. தென்கிழக்கு - கௌமாரி

3. தெற்கு - வராஹி

4. தென்மேற்கு - சியாமளா

5. மேற்கு - வைஷ்ணவி

6. வடமேற்கு - இந்திராணி

7. வடக்கு - சாமுண்டி

8. வடகிழக்கு - மகேஸ்வரி

🌹பிராம்மி : 🌹

பிரம்ம தேவரின் அம்சமும் சக்தி வடிவமே பிராம்மி என்று

அழைக்கப்படுகிறாள்.

கிழக்கு திசையின் சக்தி வடிவம். பிராமி சக்தியை வணங்குவதால் குழந்தைப் பேறும், கலை ஞானமும் உண்டாகும்.

🌹கௌமாரி: 🌹

சரவணனின் அம்சமாக அவதரித்தவள் கௌமாரி என்று அழைக்கப் படுகிறாள். தென் கிழக்கு திசையின் சக்தி வடிவம். கௌமாரி தேவியை வழிபடுவதால் பதவி உயர்வும் மனதில்இருக்கும் பயமும் அகலும்.

🌹வராஹி: 🌹

விஷ்ணுவின் அவதாரமான வராக மூர்த்தியின் அம்சமாக இருப்பவர் வராஹி. தெற்கு திசையின் சக்தி வடிவம். வராஹி தேவியை வணங்கி வருவதால் எதிரிகளை அழித்து வெற்றி கொள்ளலாம். மனதில் தைரியம் பிறக்கும்._

🌹சியாமளா: 🌹

மீனாட்சி அம்மனின் அவதாரமாக திகழ்பவள் சியாமளா தேவி.

தென் மேற்கு திசையின் சக்தி வடிவம். சியாமளா தேவியை வழிபடுவதால் சகல கலைகளிலும் தேர்ச்சி மற்றும் அறிவுக்கூர்மை உண்டாகும்._

🌹வைஷ்ணவி:🌹

விஷ்ணுவின் அம்சமாக தோன்றியவர். நாராயணி என்றும் அழைக்கப் படுபவள். மேற்கு திசையின் சக்தி வடிவம். வைஷ்ணவியை வழிபடுவதால் உடல் ஆரோக்கியமும் எண்ணங்களில் மேன்மையும் உண்டாகும்._

🌹இந்திராணி: 🌹

தேவலோகத்தின் அதிபதியான இந்திரனின் அம்சமாக தோன்றியவர் இந்திராணி. வடமேற்கு திசையின் சக்தி வடிவம். இந்திராணியை வழிபடுவதால் நல்ல வாழ்க்கை துணை அமைத்து தருவார். பணத் தட்டுப்பாடு குறையும்.

🌹சாமுண்டி: 🌹

ருத்தரனின் அம்சமாக தோன்றியவர்.எந்த விதமான சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாதவர்.வடக்கு திசையும் சக்தி வடிவம். சாமுண்டியை வணங்கி வருவதால் எடுத்த செயலில் எவ்விதமான இன்னலும் இன்றி வெற்றியும், பாதுகாப்பும் உண்டாகும்.



🌹மகேஸ்வரி: 🌹

சிவபெருமானின் அம்சமாக திகழக்கூடியவர் மகேஸ்வரி. வடகிழக்கு திசையின் சக்தி வடிவம். மகேஸ்வரியை வழிபடுவதால் ஐயங்கள் மற்றும் கோபம் நீங்கும். சகல பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கக் கூடியவர்.

🙏🌹இவ்விதம் சகல சௌபாக்கியங்களையும் அளிக்கும் அஷ்ட திக் சக்திகளை வழிபட்டு வாழ்க்கையில் உள்ள எல்லா வளமும், சிறப்பும் பெற்று முன்னேறுவோம்

No comments:

Post a Comment