Search This Blog

Tuesday, July 2, 2024

வியாதிகள் . . .வரமா ..? அல்லது ... .. ..சாபமா ?!!

 

வியாதிகள் . . .வரமா ..? அல்லது ... .. ..சாபமா ?!!

உடலை நேசிப்பவருக்கு வியாதி ஒரு சாபமே !!

ஏனெனில்,முதலில் நாக்கைக் கட்டுப்படுத்தவேண்டும் !

பிறகு ஆசையை அடக்கவேண்டும் !

இவையிரண்டும் உடல் மேல் ஆசை உள்ளவரை மிகவும் கஷ்டமான காரியம் !



ஆனால் பகவானையும்,பக்தியையும் நேசிப்பவருக்கு

வியாதி ஒரு ஆசிர்வாதமே !

● ஸ்ரீ நாராயண பட்டத்திரிக்கு பக்கவாதம் என்னும் வியாதியே அவரை நாராயணீயம் எழுத வைத்தது !

● வாசுதேவ கோஷுக்கு அவரின் தொழு நோயே அவருக்கு ஸ்ரீ க்ருஷ்ண சைதன்யரின் தரிசனத்தை பெற்றுத் தந்தது !

● ஸ்ரீ நாராயண தீர்த்தருக்கு அவரின் வயிற்று வலியே வராஹ தரிசனத்தையும்,

க்ருஷ்ண லீலா தரங்கிணியையும் தந்தது !

● ஸ்ரீ சனாதன கோஸ்வாமிக்கு அவரின் உடல் புண்களே அவருக்கு ஸ்ரீ சைதன்யரின்

பரிபூரண ப்ரேமையைக் கொடுத்தது !

● பீஷ்ம பிதாமகருக்கு அவரின் உடலில் தைத்த அம்புகளின் வலியே அவரை சஹஸ்ர நாமத்தை சொல்ல வைத்தது !

● மாரனேரி நம்பிக்கு ராஜ பிளவை நோயே அவருக்கு ஆளவந்தாரின் அனுக்ரஹத்தையும் மோக்ஷத்தையும் சாபல்யமாக்கியது !

இப்படி பல மஹாத்மாக்களின் வாழ்வில் வியாதிகளே மிகப்பெரிய மாற்றத்தையும், பக்குவத்தையும் கொண்டுவந்திருக்கிறது . . .

புண்ணிய நதிகளான கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகள் கூட , மக்கள் நீராடியதால் அவர்களின் பாவக்கறை தங்கள் மீது படிந்துள்ளதைப் போக்க சிவபெருமானின் அருளாசிப்படி துலா மாதத்தில் - ஐப்பசி மாதத்தில் - காவிரியில் நீராடி தங்களைப் புனிதப்படுத்திக் கொண்டன என புராணங்கள் கூறுகின்றன. அப்படியானால் மஹாத்மாக்களும் கூட தங்களை புனிதப் படுத்திக் கொண்டிருக்கலாம்.



அதற்காக நீங்கள் வியாதிகளை வரவேற்க வேண்டாம் !

ஆனால் வியாதிகளில் துவண்டு போகாமலிருக்க வேண்டும் !

வியாதிகள் உங்கள் வாழ்வை தீர்மானிப்பதில்லை !

பக்தியே உங்கள் வாழ்வை நிர்ணயிக்கிறது !

உடலை கவனித்துக் கொள்ளுங்கள்

நோய் வராமல் காத்துக்கொள்ளுங்கள் !

வாழ்க வளமுடன் !

No comments:

Post a Comment