ஜாதகத்தில் கிரஹங்களின் ஷட்பலம் (கிரக பலம்) எப்படி அறிவது ?
ஷட்பலம்
ஷட்பலம் என்பதும் ஒரு கிரகத்தின் பலம் கணும் விதிமுறை ஆகும் ஷட்பலம் என்பவை ஸ்தான பலம் , திக்பலம் , த்ரிக் பலம் , நைசர்க்கிக பலம் , காலபலம் , சேஷ்டாபலம் என்பவையாகும்
ஷட் பலம் ஆறு வகை படும்
ஸ்தானபலம்
ஷட்பல கணிதத்தில் முதல் பலமான ஸ்தான பலத்தில் மொத்தம் ஐந்து வகை உள்ளது.
1.உச்ச பலம்
உச்ச நிலையில் இருக்கும் கிரகம் ஸ்தானபலம் பெற்றிருக்கும்
2.சப்த வர்க்கச பலம்
மூலத் திரிகோண ராசியில் இருக்கும் கிரகத்திற்கு ஸ்தானபலம் உண்டு .
3.யுக்மா யுக்ம பலம்
ஆட்சி பெற்றிருக்கும் கிரகத்திற்கு நல்ல வலிமை ஏற்படும் .
4.கேந்திராதி பலம்
நட்பு வீடுகளில் இருக்கும் கிரகங்கள் வலிமை பெற்று இருக்கும்
5.திரேகாதி பலம்
நவாம்சத்திலும் மேற்சொன்ன நிலைகளில் இருப்பதன் மூலம் கிரகத் திற்கு வலிமை ஏற்படும்
2. திக்பலம்
லக்கினத்தில் திக்பலம்
சூரிய உதய காலத்தில் அதாவது கிழக்கில்(லக்னம்) குரு புதன் பலம்,
7ல் திக்பலம்
அஸ்தமனத்தில் அதாவது மேற்கில் 7-ல் (ஏழு) சனி பலம்,
10ல் திக்பலம்
உச்சி வேளையில் அதாவது தெற்கில் 10-ல் (பத்து) சூரியன் , செவ்வாய் பலம்,
4ல் திக்பலம்
நடு இரவில் வடக்கில் 4-ல் (நான்கு) சந்திரன் , சுக்கிரன் பலம்
3. திருக்பலம் (பார்வை பலம்)
எந்தக் கிரகமானலும் சுபர்களான சுக்கிரன் , குரு , சந்திரன் , புதன் ஆகியோரால் பார்க்கப்படும் பட்சத்தில் விசேடமான வலிமை யைப் பெறுவார்கள்
பாபக்கிரகம் என்பவை சூரியன் , செவ்வாய் , சனி , ராகு , கேது ஆவார்கள் . பாபக் கிரகங்களால் பார்க்கப்படுகிற எந்தக் கிரகமும் பலவீனம் அடையும் .
நைசர்க்கிய பலம் :- கிரஹங்களின் இயற்கை பலம்
இது இயற்கையாகக் கிரகங்களுக் குரிய வலிமையைக் குறிக்கிற பலம் ஆகும் . இந்த பலம் ராகு , கேது ஆகிய கிரகங்களுக்கு அதிக உண்டு என சில நூல்களில் கூறப்பட்டுள்ளன . சூரியனுக்கு முழுமையான நைசர்க்கிக பலம் உண்டு . அடுத்துச் சந்திரன் , சுக்கி ரன் , குரு , புதன் , செவ்வாய் , சனி ஆகியோர் இந்த வரிசையில் பலம் பெறுவார்கள் . சூரியனுக்கு 1.000 நபம் பலம் என்றும் , சந்திரனுக்கு 0.857 ரூபமென்றும் , சுக்கிரனுக்கு 0.714 ரூபமென்றும் , குருவுக்கு 0.571 ரூபமென்றும் , புதனுக்கு 0.429 ரூப மென்றும் , செவ்வாய்க்கு 0.286 மென்றும் , சனிக்கு 0.143 ரூபமென்றும் சொல்வார்கள் .
காலபலம்
பகலில் பிறந்தவர்களுக்கு சூரியன் , குரு , சுக்கிரன் ஆகியோர் வலிமை பெற்றவர்கள் ஆவார்கள் .
இரவில் பிறந்தவர்களுக்கு சந்திரன் , செவ்வாய் , சனி ஆகியோர் வலிமை பெற்றவர்கள் ஆவார்கள் .
சேஷ்டாபலம்
உத்தராயணத்தில் சூரியனும் , சந்திரனும் பலம் பெறுவார்கள் . மற்ற கிரகங்கள் வக்கிர கதியில் இருந்தாலும் , சமாகம நிலையில் ( அதாவது சந்திரனுடன் சேர்ந்து) இருந்தாலும் சேஷ்டா பலம் உண்டாகும்.
அஸ்தங்கம்
சூரியனுடன் எந்தக் கிரகம் சேர்ந்தாலும் அஸ்தங்கதம் ஆகிவிடும் .
சமாகமம்
சந்திரனுடன் சேரும் கிரகங்கள் சமாகமம் என்கிற நிலையைப் பெறும் .
கிரக யுத்தம்
ஒரு ராசியில் ஒரு பாகைக்குள் இரண்டு கிரகங்கள் இருக்குமானால் கிரக யுத்தம் என்று அழைக்கப்படுகிறது.
மற்ற கிரகங்கள் ஒரே பாகையில் ஒன்று கூடுமானால் கிரக யுத்தம் ஏற்படும் . கிரக யுத்தம் சூரியன் , சந்திரன் , இராகு , கேது ஆகியோருக்கிடையே ஏற்படாது .
இந்த ஒரு பாகைக்குள் முன்னோக்கி யுள்ள கிரகம் தோற்கும் . பின்னிருக்கும் கிரகம் வெற்றி பெறும் என்றும் சொல்வார்கள் .
உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க
ஜாமக்கோள் ஆரு டம் மூலம் பிரசன்னம் பார்க்க
ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment