Search This Blog

Monday, February 7, 2022

ஒரு ஜாதகத்தில் உள்ள முன்னோர்களின் சாபத்தை எப்படி தெரிந்து கொள்வது? எப்படி அதை நிவர்த்தி செய்வது? பித்ரு தோஷம் ஏற்படுத்தும் கிரஹ நிலைகள்


ஒரு ஜாதகத்தில் உள்ள முன்னோர்களின் சாபத்தை எப்படி தெரிந்து கொள்வது? எப்படி அதை நிவர்த்தி செய்வது?

பித்ரு தோஷம் ஏற்படுத்தும் கிரஹ நிலைகள்

1.சூர்யன் மற்றும் சந்திரன் உடன் ராகு கேது நின்றாலும் பித்ரு தோஷம் /சாபம் ஏற்படும்.

2.ஐந்தாம் வீட்டில் கெட்ட கிரகங் களான சனி, இராகு, செவ்வாய், கேது இவர்கள் இருந்தால் உங்களி ன் முன்னோர்களின் பாவமோ சாபமோ உங்களைத் தொடர்கி ன்றது என கூறலாம்.

3.ஐந்தாம் வீட்டில் கெட்ட கிரகங் களான சனி, இராகு, செவ்வாய், கேது இவர்கள் இருந்தால் உங்களி ன் முன்னோர்களின் பாவமோ சாபமோ உங்களைத் தொடர்கின்றது என கூறலாம்.

4.ஐந்தாம் அதிபதி திதிசூன்ய ராசியில் அமைவது, குடும்பத்தில் எல்லா குழந்தைகளுக்கும் சூரியன் நீசமாக இருப்பது, 8,10ல் ஏகப்பட்ட கெட்ட கிரகங்கள், செவ்+சூரி கிரக சேர்க்கை ,குடும்ப த்தில் உள்ள எல்லா குழந்தைகள் ஜாதகத்திலும் இருப்பது, சனி+ராகு சேர்க்கை, ஏகப்பட்ட நீச கிரகங் கள் இருப்பது, யோகமில்லா பரிவர்த்தனைகள் ஜாதகத்தில் காணப்படுவது .

பாப தொழில் செய்பவர்கள்

வட்டித்தொழில், லஞ்சம், திருட்டு ,பொய்பத்திரம் எழுதுதல், வழிப் பறி, பொதுமக்கள் பணத்தை அபகரித்தல் , குற்றவாளிகளை காப்பாற்றும் வழக்கறிஞர்கள் தலைமுறைகள் வறுமையில் இருப்பதையும் அகால மரணங்கள் ஏற்படுவதையும் அனுபவத்தில் காண்க),பெண்களுக்கு துரோகம் செய்து சாபம் பெறுதல்

என்ன மாதிரியான தடைகள்

கல்வித்தடை, வேலையின்மை, தகுந்த வருமானமின்மை ,திருமண த்தடை, குழந்தையின்மை, வயோ திகத்தில் கஷ்டம், நற்கதியின்மை, என பலவகை துன்பம் வாய்க்கும்.

கருடபுராணம் கூறும் பரிகாரங்கள்

1.வேத அத்யயனம், 2.முக்திதரும் தெய்வ உபாசனை முருகன் ,துர்கை ,சாஸ்தா, ராம நாம தாரகம் ,கிருஷ்ணநாம தாரகம், தாரா உபாசனை(காளிதாசன் அருள் பெற்றது) தசமகா வித்யா, சுந்தரிஉபாசனை,சக்கரத்தாழ்வார் உபாசனை மற்றும் தன்வந்திரி உபாசனை.

தில தர்ப்பணம்

தீர்த்த யாத்திரை.காசி ராமேஸ் வரம் பம்பா காவிரி அயோத்தி மதுரா ப்ருந்தாவனம் …திருச்செந் தூர் ராமேஸ்வரம் துவாரகை போன்ற இடங்களில் சமுத்திர ஸ்னானம் செய்து தில தர்ப்பணம் செய்து . அங்கு துறவிகளுக்கு அன்னதானம். புண்ணியஷேத்திர தரிசனம் செய்ய வேண்டும்.

உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க

ஜாமக்கோள் ஆரு டம் மூலம் பிரசன்னம் பார்க்க

ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295


பித்ரு கடமையிலிருந்து தவறியவர்களுக்கு பெருமாளே திதி செலுத்தும் ஆலயம்!

செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் சாலையில் நென்மேலி என்ற கிராமத்தில் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

சிரார்த்த சம்ரட்சண பெருமாள்

திதி கொடுக்க மறந்தவர்கள், திதி கொடுப்பதே தெரியாமல் இருந்தவர்கள், வாரிசு இல்லாத அல்லது இழந்த பெற்றோர், விபத்து, தற்கொலை காரணமாக அகால மரணமடைந்தவர்களின் வாரிசுகள் என்று யார் இந்த தலத்துக்கு வந்தாலும் அவர்கள் சார்பில் தானே நின்று திதி கொடுக்கிறார் சிரார்த்த சம்ரட்சண பெருமாள்.

பித்ரு வேளை பூஜை எனும் பிற்பகல் 12 மணி முதல் 1 மணி

இந்த கிராமத்தின் மத்தியில் சிரார்த்த சம்ரட்சண பெருமாள் எனும் பெயரோடு லட்சுமி நாராயணன் சேவை சாதிக்கிறார். பித்ரு வேளை பூஜை எனும் பிற்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த கிரியைகளைப் பெருமாள் ஆராதனம் ஏற்று விரதமிருந்து செய்கிறாராம்.

திதி கொடுக்க 11மணிக்குள் பெருமாள் சன்னதிக்கு வர வேண்டும்

திதி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் 11 மணிக்குள் பெருமாள் சந்நிதிக்கு வர வேண்டும்.மஞ்சள், எள், தர்ப்பைப்புல், விரலில் அணிய பவித்ரம், வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றை பெருமாளிடம் சமர்ப்பித்து, தங்களுடைய பித்ருக்களுக்காக சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும்.

சிரார்த்த சம்ரட்சணமாகும்.

பிறகு கோவிலின் பின் பக்கத்திலுள்ள விஷ்ணு பாதம் எனும் பெருமாளின் திருவடிக்கு அருகில் சாஸ்திரிகள் வழிகாட்ட திதி கொடுப்பவர் தன் முன்னோருக்கு மறுபடியும் ஒரு சங்கல்பம் செய்து கொண்டு சுவாமியிடம் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்ப்பிப்பதே சிரார்த்த சம்ரட்சணமாகும்.

வெண்பொங்கல், தயிர் சாதம், பிரண்டையுடன் கலந்து எள் துவையல் எல்லாம் செய்யப்பட்டு நைவேத்தியம்

மீண்டும் அவர்கள் பெருமாள் சந்நிதிக்கு வந்து பெருமாளுக்கு மகா சங்கல்பமும் சகல உபசாரங்களுடன் பூஜையும் நடத்த வேண்டும். இறுதியில் நம் வீட்டில் செய்யும் சம்பிரதாய திவசச்சமையல் போல வெண்பொங்கல், தயிர் சாதம், பிரண்டையுடன் கலந்து எள் துவையல் எல்லாம் செய்யப்பட்டு நைவேத்தியம் செய்யப் படுகின்றன. இதை ஏற்று, நம் முன்னோர்களின் ஆத்மாக்களைப் பெருமாள் திருப்திப்படுத்துவதாக ஐதீகம். கயா, காசி, ராமேஸ்வரம் ஆகிய தலங்களில் இல்லாத சிறப்பு இந்த தலத்தில் உண்டு.

சாபங்கள் நீங்க முன்னோர்களுக்கு சிரார்த்தம்

தலை முறை சாபம் பலவகை படும் முன்னோர்கள் மாந்தீரிகம் தொழில் செய்ததாலும் , அடுத்தவர்களை ஏமாத்தி வாழ்வது , தாய் தந்தைக்கு சாப்பாடு போடாமலும் , வாரிசு இல்லாத உறவினருக்கு இறுதி சடங்கு செய்யாமல் இருப்பது, அடுத்தவரின் சாபம் வாங்குவது போன்றவை முக்கியமானவை) இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகல் நாக தோஷம் இருக்கும் ஒரு அடி மேலே சென்றால் பத்து அடி கீழேயே இறங்கும். பித்ருக்களுக்கு செலுத்த வேண்டிய கடமையிலிருந்து தவறியவர்களும், பெண்களும் தங்கள் பெற்றோர்களுக்கும் முன்னோர்களுக்கும் சிரார்த்தம் செய்யலாம்.

No comments:

Post a Comment