திருமண பொருத்தத்தில் 10 பொருத்தம் மட்டும் பார்த்தால் போதுமா ? வேறு எவற்றை எல்லாம் பார்க்க வேண்டும்.? தோஷ சாம்யம் என்றால் என்ன ?
திருமணத்திற்கு பொருத்தம் பார்க் கும் போது பிறந்த நட்சத்திரங்க ளைக் கொண்டு ஆண் பெண் இருவருக்கும் பத்து பொருத்தங்கள் இருக்கிறதா என்று பார்ப்பார்கள்.
பத்து பொருத்தமும் சரியாக பொருந்தி வந்திருந்தாலும் ஜாதக கட்டமும் சரியாக இருக்கிறதா என்று அவசியம் பார்க்க வேண்டும்.
ஆண் அல்லது பெண் ஜாதகத்தில் இவை எல்லாம் இருக்கிறதா என்று ஆராய வேண்டும்
திருமண தோஷத்தை ஏற்படுத்தும் கிரஹ அமைப்புகள்
1.லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும் . லக்கினாதிபதி 6,8,12 போன்ற இடங்களில் மறையக் கூடாது. லக்கினாதிபதி நீச்சம் , அஸ்தங்கம் ,வக்கிரம் அடைய கூடாது.
2. ஆயுள் காரகர் ஆன அட்டமாதி பதி வலுபெற்றுஇருக்க வேண்டும்.
3.ஆயுள் காரகர் ஆன சனி வலு பெற்றுஇருக்க வேண்டும்.
4.ஆணுக்கோ அல்லது பெண்ணுக் கோ வீரியஸ்தானம் என்ற 3ம் இடம் வலுப்பெற வேண்டும். .
5.குரு, சுக்கிரன் , சனி இந்த மூன்று ம் நீர் ராசிகள் ஆன கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவற்றில் இருந்து அவர்களுடன் 6,8,12 அதிபதிகள் சம்பந்தம் பெற்று இருந்தால் பையனுக்கு அல்லது பெண்ணுக்கு இருந்தால் நீரழிவு நோயினால் அவதிப்படுவார்கள்.
6. இவர்களுக்கு லக்கினத்திற்கு பாதக , மாரக தசை தற்சமயம் அல்லது வரப்போகும் தசையா இருக்க கூடாது.
7.யோக, அவயோக தசைகள் நடக்க இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இருவருக்கும் யோக காரகர் தசை நடந்தால் பலத்த யோகத்தை அனுபவிப்பார்கள். இருவருக்கும் அவயோக தசை நடைபெறுமாயின் துயரம் , துன்பங்களை அனுபவிப்பார்கள்.
8.இருவருக்கும் ஏழரை சனி அல்ல து அட்டமசனி நடைபெற்றால் இந்த ஜாதகங்களை இணைக் கூடாது.
9. வீரிய ஸ்தானமான 3 ஆம் அதிபதி நீசம் ஆகி அலி கிரகங்களின்(புதன், சனி} கால்களில் நிற்கும் பையனுக்கு ராக்ஷஸ கணம் , யோனி பொருத்தம் , மற்றும் சுக்கிரன் ஆட்சி ,உச்சம் பெட்ற பெண் ஜாதகத்தை இணைக்க கூடாது.
9.11ம் இடமான லாப ஸ்தானத்து அதிபதி ரொம்ப வலுவா இருந்து அவரின் தசை நடந்தா , மணமகன் அற்ப காரணங்க்கு விவாகரத்து செய்வர்.
10. ஜாதகத்தில் கலத்திரகாரகர் ஆன சுக்கிரன் , புத்திரகாரகர் ஆன குரு வலுபெற்றுஇருக்க வேண்டும் .
11. 7ல் கேது , சனி கேது இணைவு ஜாதகத்தில் இருக்க கூடாது.
12. 7ம் அதிபதி 6,8,12 ல் மறைய கூடாது
13. 7ம் அதிபதி நீச்சம் , அஸ்தங்கம் , வக்கிரம் அடைய கூடாது.
14. ஆண்மை குறிக்கும் சூரியன் ஜாதகத்தில் நீச்சம் பெற்றாலும் நீச்ச பங்க ராஜ யோகம் அடைந்து இருக்க வேண்டும்.
15. சூரியன் அம்சத்தில் நீச்சம் பெற கூடாது.
17. அஷ்ட வர்க்கத்தில் சூரியன் மற்றும் சுக்கிரன் நல்ல விதமாக பரல்களை பெற்றுஇருக்க வேண்டும்.
18. தோஷ ஜாதகத்தை தோஷ ஜாதகத்துடன் இணைக்க வேண்டும். இதை தோஷ சாம்யம் என்று கூறுவார்கள்.
19. சுத்த ஜாதகத்தை சுத்த ஜாதகத்துடன் இணைக்க வேண்டும்
20 . பெண் ஜாதகத்தில் லக்கினத்து க்கு 8 ஆம் இடத்தில் அசுப கிரகங்க ளான சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் அமைந்து இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதற்கு இணையான ஆண் தோஷ ஜாதகத்தை இணைக்க வேண்டும்.
21. பெண் ஜாதகத்தில் லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இதற்கு இணையான ஆண் தோஷ ஜாதகத்தை இணைக்க வேண்டும்.
22. செவ்வாய் தோஷம் இருந்தால் அதற்க்கு இணையான செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை இணைக்க வேண்டும்
23.7-ம் இடத்தில் களத்திர காரகன் என்னும் சுக்கிரன் தனித்து இருந்தால் "காரகோ பாவ நாஸ்தி" என்ற அமைப்பு ஏற்படும். இதற்கு இணையான தோஷ ஜாதகத்தை இணைக்க வேண்டும்.
24. பாதகாதிபதி 7 இடத்தில அமைந்தால் இதற்கு இணையான தோஷ ஜாதகத்தை இணைக்க வேண்டும்.
25. 7ம் இடத்தில தனித்த குரு இருந்தால் இதற்கு இணையான தோஷ ஜாதகத்தை இணைக்க வேண்டும். அதாவது 7ல் குரு அல்லது சூரியன் உள்ள ஜாதகத்தை இணைக்கலாம்.
26. 7ம் இடத்தில சனி பகவான் இருந்தால் இதற்கு இணையான தோஷ ஜாதகத்தை இணைக்க வேண்டும்.
27. ஆண் பெண் ராசிகள் ஷஷ்டாமாக வந்தால் திருமணத்தை தவிர்க்க வேண்டும்.
28.உங்கள் ராசிக்கு உங்கள் வாழ்க்கைத் துணையின் ராசி ஏழுக்கு ஏழாக இருந்தால் அதற்கு ஏழாம் பொருத்தம் என்று பொருள். திருமணத்தை தவிர்க்க வேண்டும்.
29.ஆண்கள் ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் அடைந்து இருந்தாலும், கேதுவோடு இணைந்திருந்தாலும் திருமணப் பற்று ஏற்படாது இதற்கு இணையான தோஷ ஜாதகத்தை இணைக்க வேண்டும்
30.பெண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் கேதுவுடன் இணைந்து இருந்தாலு ம், சூரியனோடு இணைந்து அஸ்த மனம் ஆகியிருந்தாலும் பெண்களு க்கு திருமணத்தில் நாட்டம் இருக் காது.இதற்கு இணையான தோஷ ஜாதகத்தை இணைக்க வேண்டும்
31. ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் குரு கேது இருந்தாலும், சனியும் கேதுவும் இருந்தாலும், லக்னத்து க்கு பனிரெண்டாம் இடத்தில் சூரியன் கேது இணைந்து இருந்தாலும் அதை சந்நியாசி ஜாதகம் என்பார்கள். அதாவது திருமணத்தில் நாட்டம் இல்லாமல் போகும். ஆன்மிகச் சிந்தனைகள் அதிகரிக்கும். இதற்கு இணையான தோஷ ஜாதகத்தை இணைக்க வேண்டும்
32. சனி பார்த்த இடம் பாழ் என்பார் கள். சனி 5ஆம் வீட்டில் இருந்து, களத்திர ஸ்தானமான 7ஆம் வீட்டையும், தன குடும்ப வாக்கு ஸ்தானமான 2ஆம் வீட்டையும் பார்ப்பார். இதனால் கணவன் மனைவி மற்றும் குடும்ப உறவு களிடையே சிக்கல், பிரச்னைகள், மனக் கசப்பு ஏற்பட வாய்ப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இத்த கைய ஜாதகங்களை இதற்க்கு இணையான ஜாதகத்துடன் இணைக்க வேண்டும்..
33.ஏழாம் இடத்தில் நீசக் கிரகம், கூட்டு கிரக சேர்க்கை. ராகு, கேது, செவ்வாய் போன்ற கிரக அமைப்பு க்கள் இருக்கக் கூடாது. இருந்தால் ,இதற்க்கு இணையான ஜாதகத் துடன் இணைக்க வேண்டும்..
34. லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் மூன்று கிரங்களுக்கு மேல் இருந் தாலும், பார்த்தாலும் இல்வாழ்க் கையில் நாட்டம் இறுக்காது. இதை சன்யாச யோகம் என்பார்கள். இத்தகைய ஜாதகத்திற்கு இதற்க்கு இணையான ஜாதகத்துடன் இணைக்க வேண்டும்
35. பொதுவாக லக்னம், லக்னாதி பதி, ராசியாதிபதி, சந்திரன் பலமாக இருப்பது நன்மை தரும். லக்னாதிபதி நல்ல இடத்தில் ராசி, நவாம்ச கட்டத்தில் இருந்தால் விட்டுக் கொடுக்கும் தன்மை, பெருந்தன்மை, தயாள குணம் போன்றவை இருக்கும்.
36.2ம் இடம், 5ம் இடம், 7ம் இடம், 9ம் இடம் இந்த நான்கு ஸ்தானங்களும் பலமாக அமையும்போது எந்த சிக்கல்கள், பிரச்னைகள் வந்தா லும் அதை சாதுர்யமாக எதிர் கொண்டு ஜாதகர்கள் வெற்றி பெறுவார்கள்
இவற்றையெல்லாம் உங்களை பயமுறுத்துவதற்காக சொல்ல வில்லை. ஜாதகம் பார்ப்பது , திருமண பொருத்தம் பார்ப்புது அவ்வ்ளவு எளிதல்ல. என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை பதிவு இடுகிறேன்.
உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க ஜாமக்கோள் ஆருடம் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜாதகம் பார்க்க ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் என்னுடைய அலைபேசி மற்றும் whatsup No 7904719295
No comments:
Post a Comment