Search This Blog

Sunday, January 29, 2023

செவ்வாய் 10ல் திக் பலம் பெற்றால் எந்த மாதிரியான யோகத்தை தருவார் ?

 செவ்வாய் 10ல் திக் பலம் பெற்றால் எந்த மாதிரியான யோகத்தை தருவார் ?

கிரஹ 6 வகை பலம்

ஜோதிடத்தில் ஸ்தான பலம், திக் பலம், திருக் பலம், கால, அயன, சேஷ்ட பலங்கள் என்ற ஆறு வகை பலங்களில் குறிப்படப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள ஜாதக பலங்களில் திக்பலம் என்பது வித்தியாசமான ஒன்று.

திக்பலம்

திக் பலம் என்பது ஒரு கிரகம் நிற்கும் திசையைக் குறிக்கிறது. இந்த பலத்தினை அடைந்த கிரகம் ஆட்சி வலுவில் நிற்பதற்கு ஒப்பா ன பலன்களைத் தரும்.

என்ன என்ன கிரஹங்கள் எந்த இடத்தில நின்றால் திக் பலம்

1.லக்னத்தில் குரு, புதனும்,

2.நான்கில் சந்திரன், சுக்கிரனும்,

3.ஏழில் சனியும்,

4.பத்தில் சூரியன், செவ்வாயும் திக்பலம் பெறுவார்கள்.

மறைமுக வலு

ஸ்தான பலம் எனப்படும் ஆட்சி, உச்சத்திற்கு நிகராகவும் அதற்கு அடுத்ததாகவும் சொல்லப்படும் இந்த திக்பலம் பாபக் கிரகங்க ளுக்கு மட்டுமே சிறப்பாகச் சொல் லப்பட்டது. இதுவே திக்பலத்தின் சூட்சுமம். பாபக் கிரகங்கள் ஒரு ஜாதகத்தில் நேரிடையாக ஆட்சி, உச்சம் போன்றவைகளை அடையாமல் மறைமுகமாக திக்பலத்தின் வழியாக வலுப் பெற்றால் இன்னும் நல்ல பலன்களைச் செய்யும்.

செவ்வாய் தசை- ஐஏஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ்

ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்து செவ்வாய் திசை ஒருவருக்கு நடந்தால் தைரியம் அதிகரிக்கும். சகோதரரால் நன்மைகள் நடக்கும். செவ்வாய் ரத்தத்திற்கு காரகம். சுபத்துவம் பெற்ற செவ்வாய் மருத்தவம், பொறியியல் படிக்க செவ்வாய் உதவி செய்வார். சீருடை அணியும் அதிகாரம் மிக்க பதவியை தருவார். ஐஏஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பணியை தருவார். செவ்வாய் வலிமை குன்றியிருந் தால் சாதாரண போலீஸ் வேலை செய்வார்.

ஜாதகத்தில் அங்காரகர்

மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளின் அதிபதி செவ்வாய் ஆவார். இந்த செவ்வாய் மகரத்தில் உச்சம் பெறுவார். கடகத்தில் நீச்சம் பெறுவார். சிம்மம் மற்றும் மகர ராசிக்கு செவ்வாய் யோகத் தை செய்யக் கூடிய கிரகம் ஆவார். செவ்வாய்க்கு உரிய எண் 9. செவ்வாய்க்கு உரிய தெய்வம் சுப்பிரமணியர்.ஒருவரது ஜாதகத்தில் சுப கிரகமாக இருந்து செவ்வாய் வலிமையாக இருந்து விட்டால்!... அந்த ஜாதகர் வெற்றி மேல் வெற்றியை குவிப்பார்.

கோடீஸ்வரர்

ஜாதகத்தில் செவ்வாய் உச்சமாகவோ அல்லது 1,4,9,10ஆம் வீடுகளில் அமர்ந்திருந்து தனது சுய வர்க்கத்திலும் 8 பரல்களைப் பெற்றிருந்தால் ஜாதகன் கோடீஸ் வரனாக உயர்வான். தன் திறமை மற்றும் செயல் ஆற்றும் தன்மை யால் பெரும் செல்வம் ஈட்டுவான்

தசம அங்காரஹா

செவ்வாய் பத்தாமிடத்தில் ஆட்சி பெறுவதை விட அங்கே திக்பலம் பெறுவதே நல்லது. இதைத்தான் நமது ஜாதக நூல்கள் “தசம அங்காரஹா” என்று கூறுகின்றன .துலா லக்கினத்திற்கு 10ம் இடமான கடகத்தில் நீசம் பெற்றாலும் செவ்வாய் அங்கே தன் திக்பலத்தால் உயர்தர யோகத்தை தருவார்

10ல் செவ்வாய் ஆட்சி, உச்சம் மற்றும் திக் பலம் - நன்மை தருமா ??

10ல் செவ்வாய் ஆட்சி, உச்சம் போன்ற நேர்வலுவினைப் பெற்று திக்பலமும் பெறுவது நல்ல நிலை அல்ல. இதுபோன்ற அமைப்பில் அவர் சந்திரனுடனோ, குருவுடனோ தொடர்பு கொள்ளும்போது மட்டுமே நன்மைகள் இருக்கும்.

10ல் செவ்வாய் திக்பலம்

நிர்வாக காரகனான செவ்வாய் 10-ல் அமைந்தால் திக்பலம் பெறுவா ர். அந்த ஜாதகர் சிறந்த நிர்வாகத் திறமையுடனிருப்பது மட்டுமின்றி, தன்னுடைய திறமையால் செய்யும் பணியில் படிப்படியாக உயர்ந்து சமுதயாத்தில் ஓர் உன்னதமான உயர்வினைப் பெறுவார். சுபகிரக மான குருவின் பார்வையானது செவ்வாய்க்கோ, 10-ஆம் வீட்டிற் கோ இருக்குமேயானால் நல்ல உத்தியோகம், கௌரவமான பதவிகள் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும் அல்லது செய்யும் தொழில் மேன்மை அடைவர்.

பலம் பெற்ற செவ்வாய்

நவகிரகங்களில் உத்தியோக காரகன் செவ்வாயாவார். செவ்வாய் பலம்பெற்றிருந்தால் நல்ல நிர்வாகத் திறமை, எந்தவொரு காரியத்திலும் திறம்பட செயல்பட்டு தீர்க்கமான முடிவெடுக்கும் ஆற்றல் இருக்கும். சொத்து, சுகம், புகழ் என அனைத்துமே ஜாதகருக்கு கிடைக்கப்பெறும்.

உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க ஜாமக்கோள் ஆருடம் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜாதகம் பார்க்க ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் என்னுடைய அலைபேசி மற்றும் whatsup No 7904719295



No comments:

Post a Comment