தர்ம கர்மாதிபதி யோகமும் தான தர்மத்திற்கு சிலவிடும் யோகமும்
தர்மகர்மாதிபதி யோகம்
ஜாதகத்தில் 9ம் அதிபதி தர்மாதி பதி என்றும் 10ம் அதிபதி கர்மாதி பதி என அழைக்கப்படுகிறார்கள். 9ம் வீட்டு அதிபதி மற்றும் 10ம் அதிபதி அல்லது கிரகங்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோ, ஒருவருடன் மற்றவர் இணைந்தோ, ஒருவர் வீட்டில் இன்னொருவர் மாறி அமர்ந்தோ *பரிவர்த்தனை), வேறு எந்த வகையிலேனும் ஒருவருக்கொ ருவர் சம்பந்தம் பெறுவது அல்லது இருவரும் பலம் பெறுவது தர்மகர்மாதிபதி யோகம் எனப்படும் மிகச் சிறந்த யோகமாகும்.
சுபத்துவமாக
இந்த யோகத்தில் சம்பந்தப்பட்ட கிரகங்கள், ஆட்சி அல்லது உச்சம் போன்ற வலிமை பெற்று, அல்லது நட்பு வீடுகளில் நல்ல இடங்களில் அமர்ந்து, பகை, நீசம், அஸ்தங்கம் போன்று வலிமை குன்றாமல், ராகு,கேதுக்களுடன் சேராமல், சுபத்துவமாகவும் இருக்க வேண்டும்.
திரிகோணம் அல்லது கேந்திர ஸ்தானங்களில்
9 மற்றும் 10 ம் ஸ்தானங்களுக்கும் உரிய கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து திரிகோணம் அல்லது கேந்திர ஸ்தானங்களில் அமர்ந்திருப்பது யோகமாகும் .
சாரப் பரிவர்த்தனை
தர்ம கர்மாதிபதி யோகம் என்பது இரு வீட்டு அதிபதிகளும் சாரப் பரிவர்த்தனை அடைவது ஆகும். அதாவது, 9-க்கு உடையவர் நட்சத்திரத்தில் 10-ம் அதிபதியும், 10-க்கு உடையவர் நட்சத்திரத்தில் 9-ம் அதிபதியும் அமர்ந்திருப்பது ஆகும்.
6,8,12 இடங்களில்
லக்னத்திலிருந்து ஒன்பதாம் இடம் அல்லது பத்தாம் இடத்தில் ஏற்படு வது மிகவும் விசேஷமானது. 6,8,12 ஆகிய மறைவு ஸ்தானங்கள் சம்ப ந்தப்பட்டதாக இந்த யோகம் ஏற்ப டுவது சிறப்பான பலன்களை அளிப்பதில்லை.
பரிவர்த்தனை, வர்க்கோத்தமம்
பரிவர்த்தனை, வர்க்கோத்தமம் போன்ற வலுக்களை அடைந்து, அவர்களுடைய தசையும் உரிய பருவத்தில் நடைபெறும் போது ஜாதகருக்கு யோக பலன்கள் நடைபெறும்.
தான தர்மங்கள்
அவர்களின் முன்னோர்கள் தலைமுறை தலை முறையாக ஏராளமான தர்ம காரியங்களைச் செய் வார்கள். கோவில்களுக்குத் திருப்பணி செய்வது, இலவச மருத்துவமனைகள் கட்டுவது, பள்ளிகள், கல்லூரிகளைக் கட்டுவது, பெரிய அளவில் அடிக்கடி அன்னதானம் செய்வது, ஏழைகள்-எளிய மக்களுக்கு உதவிகள் செய்வதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். உயர்ந்த நிர்வாகப் பதவி வகிப்பார்கள்.
யார் இந்த பாலம் கல்யண சுந்தரம்?
திருநெல்வேலி மாவட்டம், நாங்கு நேரி தாலுகா, களக்காடு பஞ்சாய த்திற்குட்பட்ட தமிழகத்தின் ஒரு கடைக்கோடி குக்கிராமத்தில் பிறந்த ஒருவரை அமெரிக்காவின் பில் கிளிண்டன் சந்திக்க விரும் பினார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவர் தான் பாலம் கல்யாணசுந்தரம்!
பத்ம பூஷண் விருது
சமூக சேவகரான பாலம் கல்யாணசுந்தரம் தன்னுடைய சமூக சேவைக்காக ஏற்கெனவே பல விருதுகளை பெற்றுள்ளார். தற்போது இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதுக்கு தேர்ந்தெடுக்க ப்பட்டிருக்கிறார்.
ஏழைகளுக்காக அர்ப்பணிப்பு
ஐம்பது லட்சம் மதிப்பிலான தன்னுடைய பூர்வீக சொத்துகள், வாழ்நாள் முழுவதும் தான் கல்லூரியில் பணியாற்றி சம்பாதித்த முப்பது லட்சம் ரூபாய் பணம், பணி ஓய்விற்கு பின் கிடைத்த பணிக் கொடை என தன் வாழ்நாளில் தனக்கு கிடைத்த அத்தனை பணத்தையும் ஏழைகளுக்காக அளித்தவர் பாலம் கல்யாணசுந்தரம்'
தர்மகர்மாதிபதி யோகத்தின் பலன் பாடல் வடிவில்
"சொல்லுமையா பாக்கியத்தோன்,
பத்தோன் கூடி சுகமாக வீற்றிருக்கும் பலனைக் கேளு!
எல்லையில்லா தனம் படைத்து வாழ்வதோடு எவர்களுமே பணிவார்கள் இறைவன் போல !
தொல்லையில்லான் பல பேரை காக்க வல்லான் துணையாளர் பல பேரும் உண்டு பாரு!
வல்லவியா ஈஸ்வரியின் கடாட்ஷத்தாலே வளமையோடு வாழ்ந்திருப்பான் எந்நாளுமே!"
இதையெல்லாம் பார்க்கையில் பாலம் கல்யணசுந்தரம் ஜாதகத்தில் கண்டிப்பாக வலுவான தர்மகர்மாதி யோகம் அமைந்து இருப்பதால் இன்று பத்ம பூஷண் விருது அவர்களை தேடி வந்துள்ளது என்பதை நாம் உணரலாம்
உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க ஜாமக்கோள் ஆருடம் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜாதகம் பார்க்க ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் என்னுடைய அலைபேசி மற்றும் whatsup No 7904719295
No comments:
Post a Comment