Search This Blog

Friday, January 13, 2023

அருணகிரி நாதர் ஜாதகம் என்ன சொல்கிறது ?

 அருணகிரி நாதர் ஜாதகம் என்ன சொல்கிறது ?

கால அக்னி ருத்ர பைரவர்

கால அக்னி ருத்ர பைரவர் தான் அருணகிரி நாதர் என்ற பிறவி எடுத்தார் என்று நம்பப்படுகிறது.

போக வாழ்வு

அவர் திருவண்ணாமலையில் விபச்சாரிகளின் மோக வலையில் சிக்கித் தவித்தார். சிற்றின்பச் சேற்றில் மூழ்கினார். விபச்சாரி களை திருப்திப்படுத்த தன் செல்வம் முழுவதையும் இழந்தார். மேலும் கருமிகளைப் புகழ்ந்து பாடிப் பணம் பெற்று விபச்சாரி களுக்கு கொடுத்தார். அவர்களு டன் கொண்ட தகாத உறவால் அவர் குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்டார்.

அருணகிரி நாதரை ஆட்கொண்ட முருகப்பெருமான்

இறுதியாக, தரம் தாழ்ந்த தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள வும், தான் செய்த பாவத்துக்குப் பரிகாரம் தேடவும் அவர் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்தார். கோவில் கோபுரத் தின் உச்சிக்கு ஏறிச் சென்றார். முருகனைப் பிரார்த்தித்தார். தற்கொலை செய்துகொள்ள கோவில் கோபுரத்திலிருந்து கீழே குதித்தார். அவர் பூமிக்கு அருகில் வரும்போது அவர் வணங்கும் முருகன் தனது அபார கருணை யினால் அவரை தனது திருக்கரங் களில் தாங்கிப்பிடித்து காப்பாற்றி னார்.

இளமையில் போக வாழ்க்கையில் ஈடு பட்ட பின்னர் எப்படி ஞானி ஆனார்

1. லக்கினத்தில் கேது

லக்கினத்தில் ஞானகாரகர் கேது தனித்து நின்றால் ஜாதகருக்கு எந்த விஷயத்திலும் அதிக ஆர்வம் இருக்காது. ஜாதகர் தனிமையை அதிகம் விரும்புவார். ஆன்மிகம் மற்றும் பக்தி மார்க்கம் சம்பந்தப் பட்ட விஷயத்தில் ஆர்வம் அதிகரி க்கும். தத்துவார்த்த விஷயங்க ளில் அதிக ஆர்வ மிகுதி இருக்கும்

2. போககாரகர் ராகு 7ல்

7ல் நிழல் கிரகமான ராகு பகவான் அமையப்பெற்ற ஜாதகர் களத்ர பாவம் சரியாக அமையாமல் போகலாம். திருமண வாழ்க்கை யானது சில சச்சரவுகளுடனே செல்லும். வாழ்க்கை துணையை விட்டு பிரிவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. அருணகிரிநாதரை போக வாழ்க்கையில் ஈடு பட வைத்தது போகக்காரகர் ராகு .

3.4ம் இடத்தில குரு ஆட்சி பெற்று காணப்படுவது கேந்திர ஆதிபத்தி ய தோஷம்

4 இடம் சுகஸ்தானம் . இங்கு கேந்திராதிபத்திய தோஷம் அமைந்த குரு இருப்பதால் இவர் சுக போக வாழ்க்கையில் இளமையில் ஈடுபட வைத்தது.

5. 8ம் அதிபதி சந்திரன் சுக ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பது முறையற்ற சுகபோகங்களை அனுபவிக்க வைத்தது.

6. 10ம் இடத்தில சூரியன் செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்கை . போக வாழ்க் கையில் அதீத ஈடுபாடு .

7. சூரியன் செவ்வாய் சேர்க்கை - இடு கதிர் செவ்வாய் எங்கு இணைந்தாலும் இரு தாரம்தானே - பலபெண்களின் தொடர்பு

8. சுக்கிரன் நீச்சம் - சுக வாழ்க்கை யை வெறுத்து பின்பு ஞான மார்க்க த்தில் ஈடுபட வைக்கும்

9. கர்மஸ்தானமான 10 இடத்தில் 3 கிரஹங்கள் அமையப்பெற்றால் ஜாதகர் சந்நியாசி ஆக மாறுவார்.

10. ஒரே பாதத்தில் குரு சனி சேர்க்கை - பிரம்ம ஹத்தி தோஷம் -

11. புனர்பூ தோஷம் -சனி சந்திரன் சேர்க்கை பெற்ற ஞான ஜாதகங்கள் துறவறம், பிரம்மச்சரியம், சன்யாச வாழ்க் கை வாழ்வார்கள். ஆதி சங்கரர், சுவாமி விவேகானந்தர், சுவாமி அரவிந்தர், காஞ்சி பெரியவர், ராமானுஜர் ஆகியோருக்கு இந்த வகையான அமைப்பு உள்ளத

12. சனி சந்திரன் சேர்க்கை - புனர்பூ தோஷம் - இல்லற வாழ்க்கை போராட்டமாக அமையும் .

13,9 மற்றும் 10ம் அதிபதிகள் பரிவர்த்தனை - தர்மகர்மாதிபதி யோகம் கேந்திர திரிகோணாதி பதி - திரண்ட செல்வ சேர்க்கை ஆன்மிக பணிகளில் ஈடுபாடு

உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க ஜாமக்கோள் ஆருடம் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜாதகம் பார்க்க என்னுடைய whatsup No 7904719295

May be an image of text that says "சந்திரன் சனி குரு ரகு அருணகிரி நாதர் ஜாதகம் புதன் லக்கினம் கேது சூரியன் செவ்வாய் சுக்கிரன்"

No comments:

Post a Comment