திருமண தாமதமும் பெண் சாபமும்
ஜாதகத்தில் காணப்படும் சாபங்களின் வகைகள் .
சாபங்கள் மொத்தம் 13. அவை பெண் சாபம், பிரேத சாபம், பிரம்ம சாபம், சர்ப்ப சாபம், பித்ரு சாபம், கோ சாபம், பூமி சாபம், கங்கா சாபம், விருட்ச சாபம், தேவ சாபம்,ரிஷி சாபம், முனி சாபம், குலதெய்வ சாபம் என இந்த சாபங்கள் மனிதர்களை பெரிதும் பாதிக்கின்றன.
பெண் சாபம் என்றால் என்ன ?
பெண் சாபம் ஒருவர் முற்பிறவி யில் அல்லது மூதாதையர்கள் காலத்தில் பெண்களை அவமானப் படுத்துவதால்,உதாசீனப்படுத்துதல் கன்னி பெண்ணை தற்கொலை க்கு தூண்டினாலும் அல்லது கொலை செய்தாலும் , பெண்களை ஏமாற்றுவது , பெண் சாபம் ஏற்படு ம். இது தலைமுறை தலைமுறை யாக தொடரும்.
பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும். பெண்களை ஏமாற்றுவது ம், வயதான தாயை புறக்கணிப்ப தும்
சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் இந்த சாபம் ஏற்படுகிறது.
பெண் சாபத்தால் என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும்?
1.35 , 49 ,46 வயது ஆனாலும் திரும ணம் நடை பெறாது .
2. திருணம் நடந்தாலும் , மகிழ்ச்சி அற்ற திருமண வாழ்க்கை ,
3. விவாகரத்து , கணவன் மனைவி பிரிவினை
4. திருமண வாழ்க்கை கானல் நீராக இருக்கும்
5. பெண் சுகம் அல்லது ஆண் சுகம் இவர்களுக்கு மறுக்கபடலம்
6.பெண்களிடம் சாபம் பெற்றவர் களுக்கு, இளம் வயதிலேயே தாயி ன் அன்பும் ஆதரவும் கிடைக்கா மல் தாயை இழந்து தவிக்கும் நிலை ஏற்படும் அல்லது தாயை விட்டுப் பிரியும் சூழ்நிலை ஏற்படும்.
7.மனைவியால் சித்திரவதை ஏற்ப டும், மேலும் தலைக்கனம் கொண் ட மனைவியிடம் கட்டாயமாக வாழ \வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
8.திருமணமாகாமல் போகக்கூடிய சூழ்நிலை மற்றும் திருமணத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டி ருக்கும் சூழ்நிலை ஏற்படும்.
9. காதலில் தோல்வி ஏற்பட்டு அதனால் மனது தீவிரமாக பாதிக்க படும்
பெண் சாபம் ஏற்பட ஜாதகத்தில் உள்ள அமைப்புகள்
1.ஜாதகத்தில் பெண் கிரகங்களான சுக்கிரன், சந்திரன் கடுமையாக பாதிக்கப்பட்டாலும்
2.4, 7, 11-ம் இடங்கள் வலுகுன்றிய நிலையில் இருந்தாலும், கேதுவோடு சம்பந்தப்பட்டாலும்
3. லக்கினத்தில் பெண் கிரஹங்க ளான சுக்கிரன் , சந்திரன் அமர்ந்ந் து இருந்தாலும்
4. பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் இடத்தோடு பெண் கிரஹங்களின் சம்பந்தம்
5. பாக்ய ஸ்தானமான 9ம் இடத் தோடு பெண் கிரஹங்களின் சம்பந்தம்
6. மாந்தியுடன் சுக்கிரன் இணைந்து காணப்பட்டாலும்
7. காலத்திரகாரகர் சுக்கிரனுக்கு பாப கத்தரி தோஷம் இருந்தாலும்
8. ஜாதகத்தில் சுக்கிரன் அஸ்தங்கம் , நீச்சம் அல்லது வக்கிரம் அடைந்தாலும்
9. பகை கிரஹங்களுடன் சுக்கிரன் சேர்ந்து காணப்படுவது
10. களத்திர ஸ்தானமான 7ம் இடத்தில சுக்கிரன் - சந்திரன் இணைவு
11.6 மற்றும் 7 ம் அதிபதிகள் சேர்க்கை
12. களத்திர ஸ்தானமான 7ம் இடத்தில காரி (சனி) இருப்பது
பரிஹாரம்
சுமங்கலி பூஜை
சுமங்கலிப் பெண்கள் திருமண தடை நீங்க , ஜாதகத்தில் உள்ள பெண் சாபம் விலக , இல்லத்தின் அமைதி சந்தோஷத்திர்க்காகவும் ஏற்பட அவசியம் சுமங்கலி பூஜை செய்யவேண்டும்.பெண்ணிற்கு புடவை, வளையல் தானம்சாபம் அளித்த பெண்ணின் வயது தெரிந்தால் அந்த வயதை ஒத்த பெண்ணிற்கு புடவை, வளையல் போன்றவற்றை தானம் செய்து அவள் பணத்தை குளிர வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பெண் சாபம் நீங்கும்.
சுமங்கலி பூஜை எப்படி செய்வது?
1.இல்லத்தை தூய்மைப்படுத்தி, மாக்கோலமிட்டு, மாவிலை தோரணம் கட்டி அழகுபடுத்த வேண்டும்.
2.சுவாமி படங்களுக்கு பூ, தூபம் போட்டு விளக்கேற்ற வேண்டும்.
3.சுமங்கலி பூஜைக்கு 1,3,5,7,9 என்ற எண்ணிக்கையில் அவரவர் வசதி க்கு ஏற்றவகையில் பெண்களை அழைக்கலாம் .நம் வீட்டிற்கு வரும் பெண்களை நல்ல முறையில் அழைக்க வேண்டும் .தேவியின் வடிவங்கள் அவர்கள் என எண்ணி வரவேற்க வேண்டும்.
4.தாம்பாள தட்டில் நிற்க வைத்து இல்லத்தலைவி பாத பூஜை செய்ய வேண்டும் .
5.சந்தனம், குங்குமம், மலர்கள் கொடுத்து பெண்களை மனையில் மரியாதையுடன் அமர செய்ய வேண்டும்.
6.ஒவ்வொரு பெண்ணையும் பராசக்தியாக கருதி , தீபாராதனை செய்து வழிபட வேண்டும்.
7.தனித்தனியாக நமஸ்காரம் செய்து, அவர்களுக்கு புடவை , ரவிக்கை, மஞ்சள், குங்கும சிமிழ், கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பூ, பழம், தட்சனை கொடுக்க வேண்டு ம்.இதில் எவை உங்களால் முடியு மோ அதை வாங்கி கொடுக்கலாம் .ஆனால் தாம்பூலம் அவசியம் கொடுக்க வேண்டும் .
8.பூஜைக்கு வரும் பெண்களுக்கு உணவு கொடுக்க வேண்டும்.வந்த பெண்கள் சாப்பிட்ட பிறகே இல்ல த்தலைவி சாப்பிட வேண்டும் .மீண் டும் ஒரு முறை, வந்த அனைத்து பெண்களையும் வணங்கி விட்டு வழியனுப்ப வேண்டும்.
9.இந்த பூஜை செய்ய உகந்த நாட்கள் திங்கள், புதன், வெள்ளி இந்த தினங்களில் ராகு காலம் இல்லாத எந்த நேரமும் நல்ல நேரமே.
பெண் சாபம் நீக்கும் தகட்டூர் பைரவர் ஆலயம்
தஞ்சாவூரில் இருந்து திருத்துறை ப்பூண்டி வழியாக வேதாரண்யம் செல்லும் இடத்தில், வாயுமேடு கிராமம் இருக்கிறது. இங்கிருந்து பிரியும் சாலையில், 2 கி.மீ., தூரம் சென்றால், தகட்டூர் கிராமத்தை அடையலாம். இங்கே பைரவரை மூலவராகக் கொண்ட கோவில் உள்ளது. மேலும், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங் களில் அஷ்ட பைரவர் கோவில்கள் உள்ளன. பெண் சாபநிவர்த்தி வேண்டுவோர் தகட்டூர் பைரவரு க்கு அபிஷேகம் செய்து, வடை மாலை சாத்த வேண்டும்.
உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க ஜாமக்கோள் ஆருடம் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜாதகம் பார்க்க ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் என்னுடைய அலைபேசி மற்றும் whatsup No 7904719295
No comments:
Post a Comment