Search This Blog

Thursday, December 21, 2023

திருநள்ளாறு வாக்கிய தனுசு ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023-2026: குறித்த ...


தனுசு  சனி பெயர்ச்சி பலன்கள் 2023  :

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், டிசம்பர் மாதம் 20ஆம் தேதி 2023  மாலை 5 மணி 23 நிமிடத்திற்கு  மகர ராசியில் இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.



தனுசு    ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியால்  அமைய இருக்கும் கிரஹ நிலைகள்

கோச்சாரத்தில்   தனுசு ராசிக்கு  சனி  தைரிய , வீரிய    ஸ்தானமான  3ம் இடத்திற்கு வருவதும் , ராகு 4ல் இருப்பதும் கேது 10ல் இருப்பதும் குரு  5ல் இருப்பதும்  வருகின்ற 1 மே 2024 முதல்   6ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பது மிகவும் நன்மையான பலன்களே  நடைபெறும். பொதுவாக சனி பகவான் 3 ,6,,11 ல் கோச்சார ரீதியாக சஞ்சரிக்கும் பொழுது ராசி நேயர்களுக்கு யோக பலன்களை வாரி வழங்குவதில் சனிபகவானுக்கு வேறு எந்த கிரகமும் நிகரான பலன்களை தருவது சந்தேகேமே  சனி 3ல்  கோச்சாரத்தில் இருப்பது யோகமான பலன்களை   தனுசு   ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறாரார்கள். ராகு 4ல் இருப்பதும் குரு 6 ம்  இடத்தில்  இருப்பதும்  நன்மையான  பலன்களை தர தடை ஏற்படுத்தும்., ஆகையால் தனுசு  ராசி நேயர்கள் ராகு மற்றும் குரு பிரீத்தி செய்வது நன்மை தரும்.

தனுசு   ராசி நேயர்கள்   90% சதவீதம் யோகமான பலன்களை மட்டும்  அனுபவிக்க இருக்கிறார்கள். தனுசு  ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில் நன்மையான பலன்களே அதிகம்  நடக்க இருக்கிறது.

தனுசு ராசி நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால் யோகமான பலன்கள் நடைபெறும்.  மாறாக தசா புக்தி சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம் பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய பலன்களே  கலவையாக நடைபெறும்.

மேலும் பாதகாதிபதி , மாரகாதிபதி , அஷ்டமாதி தசை , புத்தி நடைபெற்றாலும்  இவர்கள் ஜாதங்களில் வலுவிழந்து இருந்தால் ஒழிய யோகமான பலன்கள் ஏற்பட தடை உண்டாகும். ஆகையால் தக்க பரிகாரங்கள் செய்வது நன்மை தரும்.



சனி ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருப்பின், கோட்சார ரீதியாக கெடுபலன் தரும் ஸ்தானத்தில் இருப்பினும் அது அதிக கெடுதிகளைத் தர மாட்டார்.

 ஏழரை சனி முடிந்து தைரிய சனி ஆரம்பித்து விட்டது. தனுசு ராசிக்காரர்கள் கடந்த ஏழரை ஆண்டு காலமாகவே ஏழரை சனியின் பிடியில் சிக்கி பல கஷ்டங்கள் ,துயரங்கள்  நஷ்டங்களை சந்தித்து வந்தீர்கள்.. உங்களுக்கு இனி எல்லாம் நல்லதாகவே நடக்கப்போகிறது.  இனி உங்களுக்கு  விடிவு காலம்தான். காரணம் ஏழரை சனியிடம் இருந்து முழுமையாக விடுபடப்போகிறீர்கள். இந்த சனி பெயர்ச்சியால் உங்களுக்கு சங்கடங்கள், துயரங்கள்  நீங்கி சந்தோஷங்கள் அதிகரிக்கப்போகிறது.

 நீண்ட நாட்களாக வராத பணம் உங்கள் இல்லம் தேடி வரும். வாழ்க்கையில் முன்னேற்றமான அறிகுறி காணப்படும். கடந்த ஏழரை ஆண்டு காலமாக எத்தனையோ துயரங்களை துன்பங்களை அனுபவித்து சொல்ல முடியாத கஷ்டங்களை சந்தித்து இருப்பீர்கள். உங்களின் துன்பங்கள், துயரங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது.  வாழ்க்கையில் இதுவரை இழந்த மன நிம்மதி கிடைக்கப்போகிறது. நோய் பாதிக்கப்பட்டு உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு  அதன் பாதிப்புகள்  தற்போது குறையும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி பகவான்  இனி லாபங்களைத் தரப்போகிறார்.

 மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் அமரப்போகும் சனிபகவானால் 2024ஆம் ஆண்டு முதல் வெற்றிகளை மட்டுமே அனுபவிக்க போகிறீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. வேலை கிடைக்காதவர்களுக்கு இனி மேல் நல்ல வேலை வீடு தேடி வரும். தடைபெற்ற திருமணங்கள் தற்போது கைகூடும்.

தனுசு ராசி நேயர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வும்  ஒரு சேர கிடைக்கும். சிலருக்கு விரும்பிய  இடத்திற்கு  அனுகூல இடமாற்றம் கிடைக்கும். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தனுஷ்  ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறார்கள்.



 பணவரவுசரளமாக  இருக்கும். செய் தொழில் வளர்ச்சி பெறும். திருமண தடைகள் நீங்கும். புதிய வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சிலர் வெளிநாடு சென்று மேற்கல்வி கற்க , தொழில் செய்ய , வேலையில் சேர வாய்ப்பு கிடைக்கும். வருமானம் பெருகுவதால் சேமிப்பு நிறைய உண்டாகும். கடன்களை தீர்த்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்,

பரிஹாரம்

உங்களுடைய வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில் ராகு  பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி சனிக் கிழமைகளில் வழிபடலாம். குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடை நீங்கி வெற்றிகள் குவியும் .ஸ்ரீ ஆஞ்சநேயரை  தினமும் வழிபட்டு வருவது நல்லது.

தினமும்  வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமியில் கால பைரவரை வணங்க கவலைகள் நீங்கும். உங்கள் கஷ்டங்கள்  ஒரு முடிவுக்கு வரும்


No comments:

Post a Comment