Search This Blog

Thursday, December 21, 2023

திருநள்ளாறு வாக்கிய மகர ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2023-2026: குறித்த ம...


மகரம்: சனி பெயர்ச்சி பலன்கள் 2023  :

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில், டிசம்பர் மாதம் 20ஆம் தேதி 2023  மாலை 5 மணி 23 நிமிடத்திற்கு  மகர ராசியில் இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.

மகர   ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியால்  அமைய இருக்கும் கிரஹ நிலைகள்

கோச்சாரத்தில்  மகரராசிக்கு  சனி  குடும்ப , வாக்கு , தன, நேத்திர    ஸ்தானமான  2ம் இடத்திற்கு வருவதும் , ராகு 3ல் இருப்பதும் கேது  9ல் இருப்பதும் குரு  4ல் இருப்பதும்  வருகின்ற 1 மே 2024 முதல்   5ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பது மிகவும் நன்மையான பலன்களே  நடைபெறும். சனி 2ல்  கோச்சாரத்தில் இருப்பது யோகமான பலன்களை  மகர   ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறாரார்கள். கேது  9ல் இருப்பதும் குரு 4 ம்  இடத்தில்  இருப்பதும்  நன்மையான  பலன்களை தர தடை ஏற்படுத்தும்., ஆகையால் மகர  ராசி நேயர்கள் கேது  மற்றும் குரு பிரீத்தி செய்வது நன்மை தரும்.



மகர   ராசி நேயர்கள்   50% யோகமான பலன்களை மட்டும்  அனுபவிக்க இருக்கிறார்கள்.  மகர ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில் நன்மையான பலன்களே அதிகம்  நடக்க இருக்கிறது. தீய பலன்களும் இருக்கும்.

மகர ராசி நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால் யோகமான பலன்கள் நடைபெறும்.  மாறாக தசா புக்தி சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம் பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய பலன்களே  கலவையாக நடைபெறும்.

மேலும் பாதகாதிபதி , மாரகாதிபதி , அஷ்டமாதி தசை , புத்தி நடைபெற்றாலும்  இவர்கள் ஜாதங்களில் வலுவிழந்து இருந்தால் ஒழிய யோகமான பலன்கள் ஏற்பட தடை உண்டாகும். ஆகையால் தக்க பரிகாரங்கள் செய்வது நன்மை தரும்.

சனி ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருப்பின், கோட்சார ரீதியாக கெடுபலன் தரும் ஸ்தானத்தில் இருப்பினும் அது அதிக கெடுதிகளைத் தர மாட்டார்.

 


கடந்த இரண்டரை வருடங்களாக ஜென்ம சனியால் அதிகம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களே.. நீங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் பரிதியை கண்ட பனிபோல் விலகி ஓடப்போகிறது.. காரணம் ஜென்ம சனி விலகி பாத சனியாக மகர ராசிக்கு தொடரப்போகிறது. மகர ராசிக்கு ஏழரை சனி முழுமையாக விலக இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன. ஆனாலும் மகர ராசிக்கு சனி பகவான் அதிபதி என்பதால் , சொந்த ராசி நேயர்களுக்கு அதிக தொல்லைகள் கொடுக்கமாட்டார் என்று உறுதியாக சொல்லலாம்.

மேலும் மகர ராசி நேயர்களுக்கு 2ம் இடத்தில் ஆட்சி பெற்ற சனி அமர்வது தேனு யோகத்தை தரும். இதனால் மகர ராசி நேயர்களுக்கு தங்கள் வாக்கு சாதுர்யத்தால் எதிரிகளை சமாளிப்பார்கள். தாராளமான பண வரவு ஏற்படும். செல்வாக்கு உயரும். சில மகர ராசி நேயர்கள் வெளி நாடு சென்று உயர் கல்வி கற்கும் யோகம் உண்டாகும். மாணவர்களளின் கல்வியில் நல்ல முன்னேற்றமான போக்கு காணப்படும்.

 தடையில்லா தன வருமானமும்  அதீத லாபமும் கிடைக்கும். பாத சனி காலம் என்பதால் ஏழரை சனியின் கடைசி இரண்டரை ஆண்டு காலம் கொஞ்சம் கவனம் தேவை. சனியின் பார்வை ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு,பதினொன்றாம் வீடுகளின் மீது விழுவதால் கஷ்டங்களை எளிதாக கடந்து விடலாம்.  தாயாரின் உடல் நிலையில் சற்று கவனம் தேவை.

 குடும்ப சனியாக இரண்டாம் வீட்டில் சனிபகவான் அமரப்போவதால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் வீண் விவாதங்கள் வந்து போகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே சண்டைகள் சச்சரவுகள் வந்து போகும். விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை இருந்தால் இந்த பிரச்சனைகளில் இருந்து மீளமுடியும்.

இந்த கால கட்டத்தில் யாருக்கும் பணத்தை கடனாக தர வேண்டாம் மற்றும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. கடன் கொடுத்த பணத்தை வசூலிப்பதிற்குள் போதும் போதும் என்று ஆகி விடும்... பொருளாதார நெருக்கடியால் பல தொல்லைகளை சமாளிக்க நேரிடும்.  எனவே பேசும் வார்த்தைகளிலும், பணம் கொடுக்கல் வாங்கலிலும் கவனமும் நிதானமும் தேவை.

மகர ராசி மாணவர்கள் கல்வியில் மேன்மை அடைவார்கள். புதிய ஆராய்ச்சிகளை செய்து ஒரு சிலர் முனைவர் பட்டம் பெறுவார்கள்., இது நாள் வரை  புத்திர பாக்கியம், தடைபெற்றவர்களுக்கு தற்சமயம் உண்டாகும். விரும்பிய வண்ணம் காரிய வெற்றி, நிலபுலன் சேர்கை ஆகியவை ஏற்படும்

மகர  ராசி நேயர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வும்  ஒரு சேர கிடைக்கும். சிலருக்கு விரும்பிய  இடத்திற்கு  அனுகூல இடமாற்றம் கிடைக்கும். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் மகர   ராசி நேயர்கள் அனுபவிக்க இருக்கிறார்கள்.. பணவரவுசரளமாக  இருக்கும். செய் தொழில் வளர்ச்சி பெறும். திருமண தடைகள் நீங்கும். புதிய வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும்.  சிலர் வெளிநாடு சென்று மேற்கல்வி கற்க , தொழில் செய்ய , வேலையில் சேர வாய்ப்பு கிடைக்கும்.



பரிஹாரம்

உங்களுடைய வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில் கேது பகவானுக்கு செவ்வாய் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடை நீங்கி வெற்றிகள் குவியும்

சனிக்கிழமை ஆஞ்சநேயரை வணங்கினாலும் அனுமன் சாலிசா பாராயணம் செய்தாலும்  ஏழரை சனியால் ஏற்படும் தொல்லைகளிருந்து விடுபடலாம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.


No comments:

Post a Comment