கும்பம்: சனி பெயர்ச்சி
பலன்கள் 2023 :
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின்
அடிப்படையில், டிசம்பர் மாதம் 20ஆம் தேதி 2023
மாலை 5 மணி 23 நிமிடத்திற்கு மகர ராசியில்
இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.
கோச்சாரத்தில்
கும்ப ராசிக்கு சனி ஜென்ம ராசி
ஸ்தானமான 1ம் இடத்திற்கு வருவதும்
, ராகு 2ல் இருப்பதும் கேது 8ல் இருப்பதும்
குரு 3ல் இருப்பதும் வருகின்ற 1 மே 2024 முதல் 4ம் இடத்தில் தன காரகர் குரு அமர இருப்பது சற்று
கடுமையான பலன்களே நடைபெறும்.. சனி 1ல் கோச்சாரத்தில் இருப்பது யோகமான பலன்களை கும்பராசி நேயர்கள் அனுபவிக்க தடை ஏற்படுத்தும்..
கேது 8ல் இருப்பதும் குரு 4 ம் இடத்தில்
இருப்பதும் நன்மையான பலன்களை தர தடை ஏற்படுத்தும்., ஆகையால் கும்ப ராசி நேயர்கள் சனி , ராகு கேது மற்றும் குரு பிரீத்தி செய்வது நன்மை தரும்.
கும்ப ராசி
நேயர்கள் 40% யோகமான பலன்களை மட்டும் அனுபவிக்க இருக்கிறார்கள். கும்ப ராசி நேயர்களுக்கு இந்த காலகட்டத்தில் நன்மை
மற்றும் தீமையான பலன்களே அதிகம் நடக்க இருக்கிறது. தீய பலன்களும் இருக்கும்.
கும்ப ராசி
நேயர்களுக்கு நடப்பு தசா புக்தி நன்றாக இருந்தால் , தசா நாதன் நல்ல சாரம் வாங்கிருந்தால்
யோகமான பலன்கள் நடைபெறும். மாறாக தசா புக்தி
சாதமாக இல்லை என்றாலும் , தசா நாதன் பகை சாரம் பெற்றுஇருந்தாலும் நன்மை மற்றும் தீய
பலன்களே கலவையாக நடைபெறும்.
சனி ஒருவரின்
ஜனனகால ஜாதகத்தில் ஆட்சி உச்சம் பெற்று இருப்பின், கோட்சார ரீதியாக கெடுபலன் தரும்
ஸ்தானத்தில் இருப்பினும் அது அதிக கெடுதிகளைத் தர மாட்டார்.
கும்ப ராசி
நேயர்களே , சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில்
அமரப்போகிறார். ஜென்மசனி தொடங்குகிறது. சனி பகவான் உங்களுடைய ராசியில் ஆட்சி பெற்று
அமரப்போகிறார் இதனால் சச ஏற்படுகிறது. சச யோகத்தால் அணைத்து விதமான தீய பலன்கள் நற்பலன்களே ஏற்படும்.
சனி கும்ப ராசிக்கு அதிபதி என்பதால் நீங்கள்
சந்திக்கும் அணைத்து பிரச்சனைகளில் இருந்து காப்பாற்ற படுவீர்கள்.
ஏழரை சனி
முதல் சுற்றில் உள்ளவர்களுக்கு ஜென்ம சனி மன அழுத்தம், தடுமாற்றங்களை மற்றும் பணக்கஷ்டங்களை தருவார். கும்ப ராசியில் பிறந்த 35 வயதிற்கு மேற்பட்டவர்கள்
இந்த சனிப்பெயர்ச்சியை எளிதாக கடந்து சென்று விடுவீர்கள். ஏழரை சனி காலகட்டம் என்பதால்
கடினமாக உழைப்பீர்கள், பொறுப்பு மற்றும் கடமைகளும் அதிகரிக்கும்.
உழைப்பு
,உழைப்பு என்று 24 மணி நேரமும் உழைப்பீர்கள்.. ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள்.
கடல் கடந்து சென்று மேல் படிப்பு , வேலை வாய்ப்பு மற்றும் தொழில் செய்யும் யோகம் உண்டாகும்.. அரசு பணிக்கான
தேர்வுகளை எழுதியிருப்பவர்கள் அதில் வெற்றி
பெறுவீர்கள்.
பரிஹாரம்
உங்களுடைய
வீடு அருகில் உள்ள கோயிலில் உள்ள நவகிரஹங்களில்
ராகு பகவானுக்கு சனி கிழமைகளில் நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம். கேது பகவானுக்கு
செவ்வாய் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில்
நெய் தீபம் ஏற்றி வழிபட தடை நீங்கி வெற்றிகள் குவியும்.
சனி பகவானுக்கு
சனி கிழமைகளில் நல்லெண்ணெய் எள் தீபம் ஏற்றி வழிபடவும். ஸ்ரீ காலபைரவரை தேய்பிறை அஷ்டமிகளில்
மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் வழிபடலாம்.
No comments:
Post a Comment