Search This Blog

Friday, May 5, 2017

கஜ கேசரி யோகம்- Kaja Kesari Yogam

கஜ கேசரி யோகம்

கஜ கேசரி யோகம் என்பது ஒரு உயர்தரமான யோகம் என்று ஜாதக நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. கஜம் என்றால் யானையை  குறிப்பதாகவும். கேசரி என்றால்  சிங்கத்தை  குறிப்பதாகவும். கஜ கேசரி யோகம் .

கஜ கேசரி யோகத்தை பற்றி காணொளி காண , கிழ்கண்ட லிங்க்யை அழுத்தவும் 

https://youtu.be/J7B4_UnVxLY



எப்படி பல  வலுவுள்ள யானைகள் சேர்ந்து சண்டையிட்டாலும் ஒரு சிங்கத்தை வெற்றி கொள்ள முடியாதோ , அதுபோல் ஒருவரின் ஜாதகத்தில் எவ்வளவு கொடுமையான தசை புத்திகள் நடந்தாலும் , ஏழரை சனி , அஷ்டம சனி , அர்தாஷ்டமணி சனி , கண்டக சனி , பாதகாதிபதி  தசை புத்திகள் நடந்தாலும்கஜ கேசரி யோகம் அமையப்பெற்றால், அவை ஜாதகருக்கு ஒரு கெடுதலும் செய்ய முடியாது.



Lions fighting with the elephant - Kajakesari Yoga





கால விதானம்

கால விதானம் என்ற ஜோதிட நூல் கஜ கேசரி யோகம் என்றால் என்ன என்று கீழ்கண்ட சம்ஸ்க்ரித பாடல் மூலம் உணர்த்துகிறது.
கிம் குரவந்தி கிரஹா ஸர்வே
சந்த்ர  கேந்த்ர  ப்ருஹஸ் பதொள
மத்த  மாதாங்க  யூதானாம்
ஹரத்யொ கோபி  கேஸர

இதன் பொருள் என்னவென்றால், பல ஆயிரம் யானைகள் ஒன்று கூடி நம்மை தாக்க வந்தாலும் ஒரு சிங்கம் அதனை எதிர்த்துப் போராடக் கூடிய ஆற்றல் இருக்கும். அதாவது ஒரு சிங்கத்தை கண்டு, பயப்படும் யானைக் கூட்டங்கள் போன்று என்ற பொருள்படும். 

இந்த கஜ கேசரி யோகம் கொண்ட ஜாதகர்களுக்கு, தங்களுக்கு எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் யானைக்கூட்டத்தையே எதிர்கொண்டு எப்படி ஒரு தனியான சிங்கம் அதனை விரட்டி வெற்றிக் கொள்கிறதோ அதே போன்று இந்த கஜ கேசரி யோகம் கொண்டவர்களுக்கும் இது போன்ற திறன் இருக்கின்றது.

Thanjavur Doll - Kajakesari Yogam


எப்படி தஞ்சாவூர் பொம்மை சாய்த்தாலும் கீழ விழாது  இருக்குமோ  அது போல் ஜாதகர் எந்த ஒரு மோசமான தசை புக்திகளிலும் பாதிக்கப்படாமல் இருப்பார்.

ஜாதகத்தில் குருவும் சந்திரனும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில் அமையப்பெற்றால் ஏற்ப்படும் யோகம் ஆகும்.

சந்திரன் குருவுடன் சேர்ந்து யிருந்தாலும் , அல்லது சந்திரன் குருவுக்கு 4,7,10 போன்ற கேந்திர ஸ்தானங்களில் அமையப்பெற்றாலும்  அல்லது சந்திரனை குரு பார்வையிட்டாலும் கஜ கேசரி யோகம் அமையப்பெறுகிறது.

கஜ கேசரி யோகம் மிகவும் பலமுள்ளதாக அமைய குரு அல்லது சந்திரன் ஆட்சி , உச்சம் பெற்றோ அல்லது நீச்சம் பெறாமல் இருக்கவேண்டும்.

குரு அல்லது சந்திரன் வர்கோத்தமம் பெற்றிருந்தாலும் மிகவும் பலம் பெற்றது என்று கூறலாம்.

ஜாதகத்தில் சந்திரனோ அல்லது குருவோ நீச்சமடைதலும் , பலவீனமடைந்தாலும், தேய்பிறை சந்திரனாக யிருந்தாலோ , நவாம்சத்தில் நீச்சமடைந்தாலோ நல்ல பலன்களை தராது.

ஜாதக சிந்தாமணி 

ஜாதக சிந்தாமணி என்ற நூல் மட்டும் கஜ கேசரி யோகம் உண்டாக இரு சிறப்பு விதிகள் மட்டுமே வேண்டும் என்று கூறுகிறது.

1. தனுசு ராசியில் குரு இருக்க சந்திரன் மீனத்தில் இருப்பதும்,

2. ரிஷபத்தில் சந்திரன் இருக்க கும்பத்தில் குரு இருப்பதும்   மட்டும்தான் கஜ கேசரி யோகம் என்று கூறியுள்ளது. 

இதில் உள்ள பொருள் என்ன வென்றால் குருவோ அல்லது சந்திரனோ பலம் பெற வேண்டும் என்பதே.

கஜ கேசரி யோகத்தால் என்ன பலன் ?

கஜ கேசரி யோகம் மிகவும் பலமுள்ளதாக அமைய பெற்றிருந்தால் ஜாதகருக்கு நற்பெயர் , தலைமை தாங்கும் ஆற்றல் , புகழ் , நல்குணம் , ஈகை , பெருச்செல்வம் , நுண்ணறிவு , உயர்கல்வி , உயர்ந்த குடும்பம் , இறந்தபிறகும் நிலைத்திருக்கும் புகழ் ஆகியவை ஏற்படும்.

மிகவும் பலம் வாய்ந்த     கஜ கேசரி யோகம்     புகழ் , பல தலைமுறைக்கு வேண்டிய பணம் , நல்ல மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியவற்றை தரும் . உதாரணமாக கலைஞர் கருணாநிதியின் ஜாதகத்தை அலசுவோம்.

கலைஞர் கருணாநிதியின் ஜாதகம்


புதன்
சூரியன்
சந்திரன்
சுக்ரன்

கேது
03-06.1924
09-40
. திருவாரூர்
லக்கினம்

செவ்வாய்
ராகு

குரு
சனி



கலைஞர் கருணாநிதியின் ஜாதகத்தில் கஜ கேசரி யோகம் மிகவும் பலமுள்ளதாக அமையப்பெற்றுள்ளது. குரு பகவான்  5 ஆம்  யிடத்தில் அமையப்பெற்று  11 ஆம் யிடத்தில் அமையப்பெற்ற உச்சம்பெற்ற சந்திரனை பார்ப்பது மிகவும் மிகவும் பலம் வாய்ந்த     கஜ கேசரி யோகம்  ஆகும்.




Kalaignar Karunanidhi - Kajakesari Yogam


ருசக   யோகம்

மேலும் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியும் , ஜீவனாதிபதியுமான செவ்வாய் கேந்திர ஸ்தானமான 7ம் இடத்தில உச்சம் பெற்று ருசக   யோகம்  யோகம் அடைந்து காணப்படுவதும் மிகப்பெரிய யோகமாகும். உயர்தரமான  கஜ கேசரி யோகம் அமையப்பெற்றதால்தான் கலைஞர் கருணாநிதி அவர்கள் வருடங்கள் தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக 18 வருடங்கள் இருக்கமுடிந்தது .

Ruchaka Yoga


MGR ஆண்ட சுமார் 20 வருடங்கள் அவரால் எந்த பதவிக்கும் வரமுடியவில்லை. அனால் தி மு க கட்சியை கட்டுக்கோப்பாக காப்பாற்ற முடிந்தது.

ஒரு சமயம் பத்திரிகை நிருபர்கள் கலைஞரிடம்  MGR அலை தொடர்ந்து 20 வருடங்கள் வீசும்போது கூட  எப்படி உங்களால் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முடிகிறது  என்று கேட்டார்கள். அதற்கு அவர் தன் காரின் பின்னல் ஓடிவந்துகொண்டிருக்கும் தொண்டர்களை பார்த்து இவர்களால்தான் அப்படி செய்ய முடிகிறது என்று பதில் கூறினார்.

மிகவும் பலம் வாய்ந்த கஜ கேசரி யோகம் கலைஞர் கருணாநிதி அமையப்பெற்றதால்தான் பெயர் , புகழ் , நிறைந்த செல்வம் , உயர் பதவி , எல்லாம் கிடைக்க பெற்றது என்று அடித்து  சொல்லலாம். இப்படிப்பட்ட யோகம் பெற்றதால்தான் அவர் இன்னமும் அரசியலில் நீடித்து நிலை நிற்க முடிந்ததற்கு மற்ற மற்ற யோகங்கள் இருந்தாலும் இந்த கஜ கேசரி யோகம் கொண்டதால் ஒரு சிங்கம் போன்று பெரும் யானைக் கூட்டத்தையே ( MGR & ஜெயலலிதா ) அவர் சமாளிப்பதற்கு இதுவே காரணமாகும்.

ஜெயலலிதா ஜாதகம்
சுக்ரன்

ராகு

லக்கினம்

சூரியன்
புதன்


செவ்வாய்

சனி
சந்திரன்
குரு

கேது



ஜெயலலிதா ஜாதகத்தில் குரு பகவான் 9 ம் பார்வையாக சந்திரனை பார்த்ததால் உயர்தரமான கஜகேசரி யோகம் அமையப்பெற்றது. 

Jayalalitha Jathagam - Kaja Kesari Yogam


மாளவ்ய யோகம்

மிதுன லக்கினத்திற்கு 10 ம் இடத்தில் சுக்ர பகவான் உச்சம் பெற்றதால் மாளவ்ய யோகம் அமையப்பெற்றது. மிதுன லக்கினத்திற்கு 7ம் அதிபதியான குரு பகவான் 7ம் இடத்தில் அமையப்பெற்று கேந்திர ஆதிபத்திய தோஷம் அமையப்பெற்றதால் ஜெயலலிதாவிற்கு திருமணம் என்பது ஒரு கானல் நீராக ஆனது.
'
மிகவும் பலம் வாய்ந்த கஜ கேசரி யோகம் ஜெயலலிதாவிற்கு அமையப்பெற்றதால்தான் பெயர் , புகழ் , நிறைந்த செல்வம் , உயர் பதவி , எல்லாம் கிடைக்க பெற்றது என்று அடித்து  சொல்லலாம்.

Maalvya Yogam


ராஜ யோகம்


ஆமேடம்  எருது சுறா நண்டு கன்னி
இவ்வைந்து இடத்தும் கருநாகம் அமர்ந்திருக்க
பூமேடை படுத்துருங்கம்  ராஜ யோகம்

என்கிறது ஒரு பழமையான ஜோதிட பாடல். ஜெயலலிதா ஜாதகத்தில் . ராகு பகவான் ஆமேடம் என்கின்ற மேஷ ராசியில் அமைந்து தசை புக்தி நடைபெற்ற காலத்தில் அவருக்கு ராஜ யோகத்தை கொடுத்தது.

சிவாஜி கணேசனுக்கும் அவர்களுக்கும், மற்றும் இந்தியில் கலக்கிய அசோக் குமாருக்கும் இந்த கஜகேசரி யோகம் ஜாதகத்தில் இருந்தது . இவர்கள் இருவரும் அவர்களுடைய வாழ்க்கை காலத்தில் மிகவும் யோகமான வாழ்வு வாழ்ந்தார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.


இந்த யோகம் உள்ளவர்களுக்கு பல கோடி மக்களை அரசாட்சி செய்யும் மன்னனாகவும், சொகுசு வாகனங்கள் பெற்றவனாகவும், மக்களை வசீகரம் செய்யும் ராஜ வசியம் பெற்றவனாகவும், போராடி போராடி கடைசியில் வெற்றி பெறுபவனாகவும் இருப்பான். பல தோஷங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் இந்த கஜ கேசரி யோகம் கொண்டவர்கள் அனைத்து தோஷத்தையும் தூள் தூளாக்கி கடைசியில் வெற்றிப் பெறுவார்கள் என்பதேயாகும். அதாவது ஒரு அரசனைப்போன்று வாழ்வான்.

1 comment:

  1. If guru and chandran are together in same 2and place and chandran Neesom virucheegam and has kajakeeswariyogam what result

    ReplyDelete