நீங்கள்
அதிர்ஷ்டமானவரா ?
உங்கள்
கையில் சூரிய ரேகை உள்ளதா?
சூரிய
ரேகை
சூரிய மேடு என்பது மோதிர
விரலிற்குக் கீழ் இருப்பது. . கை ரேகை
சாத்திரத்தில் சூரிய ரேகை மிகவும் முக்கியமானது. ஒருவரிடம் எவ்வளவுதான் திறமை இருந்தாலும் ஒருவருடைய கையில்
சூரிய ரேகை இல்லாவிட்டால், வெளி உலகத்திக்கு அவருடைய திறமை தெரிய மாட்டாது. சூரிய ரேகை ஒருவருடைய புகழ், வசியம் என்பவற்றை
குறிக்கும்..
சூரிய ரேகை ஒருவருடைய திறமையையும் ,வெற்றியையும் குறிக்கும். ஒருவருக்கு . தங்கு தடை இல்லாத
சூரிய ரேகையும், நன்கு அமைந்த சூரிய மேடும் அமைந்தால்
வாழ்க்கை மிகவும் பிரகாசமாக அமையும். சூரிய மேட்டில் ஒரு செங்குத்து
ரேகையிருந்தால் ஒரே தொழிலில் நிறைய வருமானம் கிடைக்கும்.
சூரிய ரேகை ஏன் முக்கியமானது
ஒருவர் கல்வியில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் வாங்கி இருப்பார். கடின
உழைப்பாளி ஆகவும் இருப்பர். ஆனால் அவரை அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று மற்றவர்கள்
அழைப்பார்கள். எவ்வளவுதான் திறமை இருந்தும் , உயர் கல்வி தகுதி இருந்தும் அவரால்
வாழ்க்கையில் முன்னேற முடியாத நிலைமை ஏற்படும். இப்படிப்பட்டவர்களின் கையில் சூர்ய
ரேகை அமைந்திருக்காது. இதனால் இவர்கள் வாழ்க்கை குடத்திலிருக்கும் குத்து விளக்கை
போன்று பிரகாசம் இல்லாமல் இருக்கும்.
அதன் பலன்கள்
ஆயுள் ரேகையில் இருந்து
ஆரம்பித்தால்
|
அவர் வாழ்க்கையின்
சக்கரத்தில் ரேகை ஆரம்பிக்கும் வயதில் இருந்து முன்னேற்றமும் ஏற்படும்
|
விதி ரேகையில் இருந்து
ஆரம்பித்தால்
|
சுய முயச்சியால் ஏற்பட்ட
முன்னேற்றமும் ஏற்படும்
|
இருதய ரேகையில் இருந்து
ஆரம்பித்தால்
|
மனைவியால் அல்லது
பெண்களால் அதிஷ்டம் ஏற்படும்.
|
புத்தி ரேகையில் இருந்து
ஆரம்பித்தால்
|
சமஜோசித அறிவால் / புத்தியால் வெற்றி கிட்டும்.
|
செவ்வாய் மேட்டில்
இருந்து ஆரம்பிக்கும் ரேகை
|
நில புலன்கள் சேரும் படை
தளபதி , ராணுவம் , காவல் துறைகளில் உயர் பதவி
|
சந்திர மேட்டில் இருந்து
ஆரம்பிகும் ரேகை நல்ல கற்பனாசக்தியை கொடுக்கும்
|
நல்ல கற்பனாசக்தியை
கொடுக்கும் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் கவிஞர்கள் ஆக
இருப்பார்கள்
|
மேல் செவ்வாய் மேட்டில் இருந்து சூர்ய ரேகை
ஆரம்பித்தால்
மேல் செவ்வாய் மேட்டில் இருந்து சூர்ய ரேகை ஆரம்பித்தால் ஆரம்பித்தால், ஜாதகர் விவசாயம், நாடாளும் மன்ற அல்லது
சட்டசபை உறுப்பினர் ஆக இருப்பர். கிராம சபை அல்லது கிராமத்து நாட்டாமை இருப்பர்
உத்யோகத்தில் உயர்ந்த பதவியில் இருப்பார்.
இருதய ரேகையில் இருந்து சூர்ய ரேகை ஆரம்பித்தால்
இப்படிப்பட்ட ஜாதகர்கள் காலசர்ப்ப தோஷம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் 33 வயதுக்கு பிறகு வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை சந்திப்பார்கள். 40 வயதுக்கு பிறகு வாழ்க்கை
ஏறுமுகமாக இருக்கும்
விதி ரேகையிலிருந்து சூர்ய ரேகை ஆரம்பித்தால்
ஜாதகர் தன்னுடைய சுயமுயற்சியால் முன்னேற்றம் அடைவார்கள். இவர்கள் தன்னுடைய கடும்
உழைப்பாலும் முயற்சியாலும் வாழ்க்கையின் வெற்றி விளிம்பிற்கு செல்வார்கள்.
ஆயுள் ரேகையிலிருந்து சூர்ய ரேகை ஆரம்பித்தால்
ஜாதகர் பல திறமைகளை தன்னுள் கொண்டிருப்பர். கல்வி நிறுவங்களின் பெரும் பதவிகளை
அலங்கரித்து கொண்டிருப்பார். இவர்கள் தங்கள் சொன்ன சொல்லை எப்டியாவது காப்பாற்றுவார்கள். சிலர் கதையாசிரர்களாகவும்
எழுத்தாளார்களாகவும் இருப்பார்கள்.
சந்திர மேட்டிலிருந்து சூர்ய ரேகை ஆரம்பித்தால்
ஜாதகர் வெற்றியாளராகவும் மிகுந்த அதிர்ஷ்டம் நிறைந்த வராகவும் இருப்பர்.
தொழிலதிபராகவும் பல பேருக்கு வேலை வாய்ப்பை தருபவராகவும் இருப்பர். பலர்
இவர்களுடைய வெற்றிக்காக உழைப்பார்கள் மற்றும் உதவுவார்கள்.
சூரிய ரேகை நடுவில் துண்டு பட்டு இருந்தால்
ஜாதகர் தொழிலிலும்
உத்தியோகத்திலும் பல சரிவுகளை சங்கடங்களையும் சந்திக்க நேரிடும் .
சூரிய ரேகை பல துண்டாக அமைந்து இருந்தால்
எதிரிகளால் ஜாதகரின்
முன்னேற்றத்திற்கு தடை ஏற்படும். ஜாதகருக்கு எல்லா துறைகளிலும் தோல்வியே தரும்.
சூரிய ரேகை வளைந்து நெளிந்து
காணப்பட்டால்
ஜாதகர் தன்னம்பிக்கை அற்றவர் ஆக இருப்பர். இப்படிப்பட்டவர் ஜாதகத்தில் சூரியன்
நீச்சம் பெற்று காணப்படுவார் உத்யோகத்தில் அல்லது தொழிலில் பல தோல்விகளை சந்திக்க
நேரிடும். துணிச்சலான காரியங்களை
செய்ய தயங்குவார்கள். தொழிலில் அல்லது உத்யோகத்தில் எதிரிகள் ஏற்படுத்தும் தடையால் முன்னேற முடியாத
நிலை ஏற்படும்.
சூரிய மேட்டில் திரிசூலம் இருந்தால்
சூரிய மேட்டில்
திரிசூலம் இருந்தால் நிறைய காசு பணம் வர ஆரம்பிக்கும்.
சூரிய வளையம்
புதன் மேடு என்பது சுண்டுவிரலிற்குக் கீழ் இருப்பது.. சூரிய மேட்டையும், புதன் மேட்டையும் ஒரு ரேகை
உருவாகி இணைக்கும். இதனை சூரிய வளையம்
என்று அழைப்பார்கள். அப்படிப்பட்டவர் அரசில் உயர் பதவி, வெளி நாடு தூதர் பதவி, அரசு துறை செயலாளர்கள், மந்திரி, பிரதமமந்திரி, ஜனாதிபதி போன்ற பதவிகளை
வகிக்க நேரிடும்.
சூரிய மேட்டில் நட்சத்திரம்
சூரிய மேட்டில்
நட்சத்திரம் இருந்தால் நல்லது . பெயர் புகழ் பதவிகள் தேடி
வரும்.
சூரிய மேட்டில் விரும்ப தக்க குறிகள்
சூரிய ரேகையில்.
|
சதுர குறி பிரச்சினைகளிருந்து
பாதுகாப்பை பெறுவதை குறிக்கும்
|
ஒன்றிற்க்கு மேற்பாட்ட சூரிய ரேகை காணப்பட்டால்.
|
பல தொழிலில் ஈடுபாட்டை காட்டுவார்கள்
|
திருமண ரேகை சூரிய ரேகையுடன் இணைந்தால்
|
அதிர்ஷ்டமான மணவாழ்வு அமையும்
|
சந்தர்ப்ப ரேகை ஒன்று சூரிய ரேகையுடன்
இணைந்தால்
|
ஜாதகருக்கு அது நல்ல பலன்களையே வழங்கும்
|
சூரிய மேட்டில் விரும்பத்தகாத குறிகள்
சூரிய ரேகையில்.
|
தீவுக் குறி காணப்படுவது நல்லது அல்ல
|
பெருக்கல் குறி காணப்படுவது
|
சிறப்பானது அல்ல
|
சதுர குறி
|
பிரச்சினைகளிருந்து பாதுகாப்பை பெறுவதை
குறிக்கும்.
|
பல துண்டுகளாக வெட்டப்பட்டு
காணப்பட்டால்
|
அந்த ரேகை வெட்டும் காலப் பகுதியில்
பிரச்சினைகள் ஏற்படும்
|
திருமண ரேகை சூரியரேகையை வெட்டினால்
|
மணமுறிவு ஏற்படலாம்
|
ஒருவருக்கு அதிர்ஷ்டமான வாழ்வு அமையவேண்டுமென்றால் , சூரிய ரேகை நன்கு தெளிவாக கையில்
அமைந்து காணப்பட வேண்டும்தெளிவில்லாமல் அமைந்த ரேகைகள் , ஒருவருக்கு முழுமையான பலனை தராது .
ஸ்ரீ அகத்தியர் அருளிய ஆதித்ய ஹிருதயம்
ஒருவருடைய கையில் சூரிய
ரேகை இல்லை என்றால் வாழ்க்கை போராட்டமாக அமையும். ஆகையால் தினமும் சூரிய வழிபாடு
செய்ய வேண்டும் மாமுனி அகஸ்தியர் அருளிய ஆதித்திய ஹிருதயம் சொல்லி வர விரைவில்
சூரிய ரேகை கையில் அமையும். அதிர்ஷ்டமும் செல்வ செல்வாக்கும் தேடி வரும். சூரிய ரேகை கையில் இல்லாதவர்கள் மாணிக்கம்
அணியலாம்.
ஆதித்திய ஹிருதயம்கேட்க கீழே தரப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்யவும்
"ஓம்
ஹ்ரம் ஹ்ரீம் ஹ்ரௌம் ஷக் சூர்யாய நமஹ",
சூரிய ஸ்தோத்திரம் தமிழில்,
சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி!
சூரியா போற்றி, சுதந்திரா போற்றி!
வீரியா போற்றி, வினைகள் களைவாய்
ஆதித்திய ஹிருதயம்கேட்க கீழே தரப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்யவும்
சூரிய மூல மந்திர
ஜபம்:
•சூரிய ஸ்தோத்திரம்.
ஜபா குஸூம ஸங்காசம்
காச்யபேயம் மஹாத்யுதிம்!
தமோரிம் ஸ்ர்வ பாபக்னம்
ப்ரணதோ (அ) ஸ்மி திவாகரம் !!
காச்யபேயம் மஹாத்யுதிம்!
தமோரிம் ஸ்ர்வ பாபக்னம்
ப்ரணதோ (அ) ஸ்மி திவாகரம் !!
சூரிய ஸ்தோத்திரம் தமிழில்,
ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி!
சூரியா போற்றி, சுதந்திரா போற்றி!
வீரியா போற்றி, வினைகள் களைவாய்
மேல சொன்ன பாடல்களை தினமும் சொல்லிவர சூரிய பகவான் அருளினால் உங்கள் கையில் சூரிய ரேகை உருவாகும். மற்றும் அதிர்ஷ்டம் உங்களைத்தேடி வரும்.
Super, true result
ReplyDelete