Search This Blog

Thursday, July 6, 2017

வாழ்க்கையே போராட்டமா ?அப்ப உங்கள் கையில் கரும் புள்ளி நிச்சயம் இருக்க வேண்டும் !! Black Moles on Hands-Palmistry

வாழ்க்கையே போராட்டமா ?

எதிலும் தடைகளும் எதிர்ப்பா?

அப்ப உங்கள் கையில் கரும் புள்ளி நிச்சயம் இருக்க வேண்டும் !!!


Black Mole on hands-Palmistry


கையில் கரும் புள்ளி

பொதுவாக கையில் எந்த இடத்திலும் கரும் புள்ளி இல்லாமல் இருப்பதே நலம். கையில் கரும் புள்ளி இருந்தால் , அது வரப்போகும் ஆபத்தை உணர்த்தும். கையில் கரும் புள்ளி இருக்கும் மேட்டிலோ அல்லது ரேகையிலோ வைத்து அது எந்தமாதிரியான ஆபத்து என்று தெரிந்து கொள்ளலாம்.
Black Mole on hands-Palmistry

கைகளில் கரும் புள்ளி நிரந்தரமாக இருக்கக்கூடும் அல்லது திடீரென தோன்றி பின்னர் மறையக்கூடும். வராஹிமிஹிரர் எழுதிய ஹஸ்த சாஸ்திரம் என்ற நூலில் கரும்புள்ளிகள் கையில் அமைந்தால் என்ன என்ன தீமைகள் ஏற்படும் என்று தெளிவாக கூறியுள்ளார்.


செல்வி ஜெயலலிதா குரு மேட்டில் கரும் புள்ளி
Black Mole on hands-Palmistry

குரு மேட்டில் கரும் புள்ளி இருந்தால் அத்தகைய அமைப்பு ஜாதகருக்கு அரசாங்க தண்டனையை வாங்கி தரும் என்று வராஹமிஹிரர் கூறுகிறார்.
உதாரணமாக செல்வி ஜெயலலிதா மற்றும் சசிகலா இவர்கள் உச்ச நீதி மன்றத்தால் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தார்கள் என்று கூறி 4 வருடம் சிறை தண்டனை வழங்கியது . இவர்களின் கையில் குரு மேட்டின் கரும் புள்ளி இருந்தனால்தான் இவர்கள் நீதிக்கு புறம்பான வழியில் சொத்து சேர்க்க தூண்டியது .

புதன் மேட்டில் கரும்புள்ளி
Black Mole on hands-Palmistry

சுண்டு விரலில் அடிப்பகுதியில் அதாவது புதன் மேட்டில் கரும்புள்ளி காணப்பட்டால்
உத்தியோக உயர்வு பாதிக்கப்படும் மற்றும் ஒரு விலைமதிப்பற்ற பொருள் திருட்டுப்போகப்போகிறது என்று அர்த்தம்.

சுக்கிரமேட்டில் கரும்புள்ளி
Black Mole on hands-Palmistry

 சுக்கிரமேட்டில் கரும்புள்ளி காணப்பட்டால்
வாழ்க்கைத்துணை அல்லது காதலி பிரிவு ஏற்படும். இதனால் ஜாதகருக்கு மனக்கவலை உண்டாகக்கூடும்

ஆயுள் ரேகையில் கரும்புள்ளி
Black Mole on hands-Palmistry

ஆயுள் ரேகையில் கரும்புள்ளி தோன்றினால்
ஜாதகருக்கு நோய் உண்டாகி உடல் நிலை பாதிக்கப்படும். விபத்துகள் ஏற்படும். ஜாதகத்தில் ஆயுட்காரகரான சனி பலமில்லாமல் இருந்தால் அவர்களுக்கு மரணம் கூட சம்பவிக்கலாம் 


சுண்டு விரலில் கரும்புள்ளி

 சுண்டு விரலில் கரும்புள்ளி என்றால்
குழந்தைகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.


கட்டைவிரல் நுனியில் கரும்புள்ளி


கட்டைவிரல் நுனியில் கரும்புள்ளி தோன்றினால்
ஏழையாய் இருந்து பின்னர் செல்வந்தர் ஆவார். தன்னுடைய தவறான நடவடிக்கைகளால் செல்வத்தை இழ்க்க நேரிடும்


சுக்கிரமேட்டில் கரும்புள்ளி

சுக்கிரமேட்டில் கட்டைவிரலை ஒட்டினாற்போல் கரும்புள்ளி இருந்தால்
வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். வீண்வாக்குவாதம் தொழிலையும் உத்யோகத்தையும் பாதிக்கும்.


இருதய ரேகையை ஒட்டி கரும்புள்ளி
Black Mole on hands-Palmistry

இருதய ரேகையை ஒட்டி கரும்புள்ளி 
பங்குசந்தை , வட்டி தொழில் பெரும் நஷ்டம் உண்டாகும்


புத்திரேகையை ஒட்டி கரும்புள்ளி

Black Mole on hands-Palmistry

புத்திரேகையை ஒட்டி கரும்புள்ளி
வாகனங்கலால் விபத்து ஏற்படும்


சந்திர மேட்டில் கறுப்புநிற புள்ளி
Black Mole on hands-Palmistry

சந்திர மேட்டில் கறுப்புநிற புள்ளி
வயிறு சம்பந்தமான நோய் வருவதற்கு அறிகுறி


மோதிர விரலின் அடிப்பகுதியில் கரும்புள்ளி

 மோதிர விரலின் இறுதி அடிப்பகுதி யில் கரும்புள்ளி
செல்வம் திருட்டு போகும்


புதன் மேட்டில் கரும் புள்ளி

புதன் மேட்டில் கரும் புள்ளி இருந்தால்
கல்வி தடை, நண்பர்களால் ஏமாற்றப்படுத்தல், கூட்டு தொழில் நஷ்டம்


சூரிய மேட்டில் கரும் புள்ளி
Black Mole on hands-Palmistry

சூரிய மேட்டில் கரும் புள்ளி
அரசாங்கம் எதிர்ப்பின் நிலை காரணமாக சிறை வாசம்


நடு விரலில் கரும் புள்ளி இருந்தால்

நடு விரலில் கரும் புள்ளி இருந்தால்
எதிர்பாரா மரணம், விபத்துகளால் மரணம், பொது காரியங்களுக்காக உண்ணாநோன்பு இருந்து மரணம்.


குரு மேட்டில் கரும் புள்ளி இருந்தால்

குரு மேட்டில் கரும் புள்ளி இருந்தால்
சமுதாய நெறிமுறைகளை மீறி நடப்பார்கள். சாஸ்திரம் சம்பிரதாயங்களை புறக்கணிப்பார்கள். மந்திரி மற்றும் உயர் பதவி களிலிருந்து தூக்கிவீசப்படுவார்கள்



செவ்வாய் மேட்டில் கரும் புள்ளி இருந்தால்

செவ்வாய் மேட்டில் கரும் புள்ளி இருந்தால்
திடீர் செல்வசேர்க்கை உண்டாகும். ஆனால் அரசு பொது காரியங்களுக்காக சொத்துக்களை கைப்பற்றும். . வழக்குகளில் தோல்வி ஏற்பட்டு அதனால் சொத்துக்கள் கைநழுவி போகும்.

சுக்கிர மேட்டில் கரும் புள்ளி இருந்தால்

சுக்கிர மேட்டில் கரும் புள்ளி இருந்தால்
பல பெண்களிடம் தொடர்பு அதனால் நோய்வாடப்படுத்தல்


கரும்புள்ளி மறைய பரிகாரங்கள்


புதன் மேட்டில் கரும்புள்ளி மறைய
புதன் கிழமைகளில் நவகிரஹத்தில் உள்ள புதன் பகவானை வழிபடவேண்டும். புத  கிரஹ அஷ்டோத்தரத்தை புதன் கிழமைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.
சுக்கிர மேட்டில் கரும் புள்ளி மறைய
வெள்ளி கிழமைகளில் நவகிரஹத்தில் உள்ள சுக்கிர பகவானை வழிபடவேண்டும். சுக்கிர கிரஹ அஷ்டோத்தரத்தை வெள்ளி கிழமைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.
செவ்வாய் மேட்டில் கரும் புள்ளி மறைய
செவ்வாய் கிழமைகளில் நவகிரஹத்தில் உள்ள செவ்வாய் பகவானை வழிபடவேண்டும். செவ்வாய் கிரஹ அஷ்டோத்தரத்தை செவ்வாய் கிழமைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.
குரு மேட்டில் கரும் புள்ளி மறைய
வியாழக்கிழமைகளில்நவகிரஹத்தில் உள்ள குரு பகவானை வழிபடவேண்டும். குரு கிரஹ அஷ்டோத்தரத்தை வியாழக் கிழமைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.
சூரிய மேட்டில் கரும் புள்ளி
ஞாயிற்றுகிழமைகளில் நவகிரஹத்தில் உள்ள சூரிய பகவானை வழிபடவேண்டும். சூரிய கிரஹ அஷ்டோத்தரத்தை ஞாயிற்று கிழமைகளில் பாராயணம் செய்ய வேண்டும். குருநாதர் அகஸ்தியர் மாமுனி அருளிய ஆதித்ய ஹிருதயம் தினந்தோறும் காலையில் பாராயணம் செய்யலாம்

No comments:

Post a Comment