Search This Blog

Monday, July 3, 2017

உங்கள் கையில் சனி வலயம் உள்ளதா? அப்ப நீங்கள் கோடீஸ்வரர்தான்!!! Ring of Saturn in Palmistry

உங்கள் கையில்சனி பகவான் வலயம் உள்ளதா?

அப்ப நீங்கள் கோடீஸ்வரர்தான்!!!

சனி விரல் மற்றும் நடுவிரல் என்றும் அழைக்கப்படும் விரலின் அடிப்பாகத்தில் அமைந்திருப்பது சனி மேடு என்று அழைக்கப்படுகிறது.
இந்த சனி விரலின் கீழ் காணப்படும் வட்டத்துக்கு ‘சனி வளையம்’ என்று பெயர்.

ஒருவரின் கையில் நடுவிரலில் சனி வளையம் அமைந்து, அந்த வளையத்தில் இருந்து சிறு ரேகைகள் மேல் நோக்கிச் செல்ல, அதே சமயம் விதி ரேகை என்னும் ரேகை கங்கண ரேகையில் இருந்து எந்த குறுக்கு வெட்டும் இல்லாமல் நேராக சனி விரலை தொட்டு நின்றாலோ அல்லது சனி மேட்டில் முட்டி நின்றாலோ அதை கோடீஸ்வர யோகம் என்கிறது கைரேகை சாஸ்திரம்.

இந்த அமைப்பு எல்லோர் கையிலும் அமைய வாய்ப்பில்லை. அபூர்வமாக ஒரு சிலருக்கே இந்த யோகம் அமைகிறது. இவ்விதம் ரேகை அமைந்தவர்கள் கோடீஸ்வரராக மாறுவது நிச்சயம்.



ஜாதகத்தில் குரு கேது இணைவு அல்லது பார்வை

  • ·         கேது குருவிற்கு கேந்திர (1, 4, 7, 10) ஸ்தானங்களில்

  • ·         கேது குருவிற்கு திரிகோண (1, 5, 9) இடங்களில் நிற்பது

  • ·         குரு 5, 7, 9ம் பார்வையால் கேதுவைப் பார்ப்பது

  • ·         குரு, கேது கேந்திர திரிகோணங்களில் இணைந்து நிற்பது

இந்த அமைப்புகள் ஒருவரை கோடீஸ்வராக ஆக்கி விடும்.

ஆனால் ஜாதகத்தில் குரு, கேது கெடாமல் இருக்க வேண்டும்.

இப்படி கிரஹ சேர்க்கை வாய்ந்த ஜாதகர்கள் குரு தசையிலோ  அல்லது  கேது தசையிலோ மிக சாமான்யமான மனிதர்களையும் யாரும் எதிர்பாராத நிலைக்கு உயர்த்தி, பேரும் புகழுடன் அவர்களை கோடீஸ்வரராக்கிவிடும்.

மறைவு ஸ்தானங்களான 6, 8, 12ல் குரு இருந்தாலும், கேது 6, 8, 12 ஆகிய மறைவிடங்களில் இருந்து குருபார்வை பெறுவது கோடீஸ்வரர் ஆகும் நிலைக்கு தடை ஏற்படும்.

குரு கேது இணைவு





லக்கினம்















குரு கேது

மேல கண்ட ஜாதக கட்டத்தில் , ரிஷபம் லக்னமாக அமைந்து, பூர்வ புண்ய ஸ்தானமான 5-ம் வீட்டில், அதாவது கன்னி ராசியில் குருவும், கேதுவும் இணைந்திருந்தால், அந்த ஜாதகர் கோடீஸ்வரராவது உறுதி. குருவுக்கு இது மிகுந்த பலமான இடமாகும்.

குருவுக்கு கேந்திரத்தில் கேது




மேல உள்ள ஜாதகத்தில் கடக லக்கினத்தில் குரு உச்சம் பெற்று அமர்ந்து அவருக்கு கேந்திர ஸ்தானமான 4ம் இடமான துலாத்தில் கேது அமர்ந்து இருப்பதால் , ஜாதகருக்கு கேது அல்லது குரு தசை மற்றும் புத்தி  காலங்களில் கோடிக்கணக்கான பணம் வந்து சேரும்.

1 comment:

  1. Guru kethu 4m idathile sernthirunthu, guru neesam agi irunthal Enna palan

    ReplyDelete