Search This Blog

Saturday, March 26, 2022

மகர ராசிக்கு ராகு கேது மற்றும் குரு பெயர்ச்சி பலன்கள் 2022-23

 மகர  ராசிக்கு  ராகு கேது  மற்றும் குரு பெயர்ச்சி பலன்கள்  2022-23


https://youtu.be/gy10oEUDCJg



மகர ராசிக்கு 4ல் ராகு

இதுவரை 5ல் உள்ள ராகு அதிக  பிரச்சனைகள் ஏற்படுத்திருப்பர். அவை யாவும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

நான்காம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும்

இந்த 4ம் பாவத்திக்கு ராகு வருகிறார். இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள்.

தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம்.

பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார்

மகர ராசி 10 ம் இடத்தில கேது பகவான்

ஒருவருக்கு வேலை கிடைப்பது, வேலை பறிபோவது, வாழ்க்கையைத் தலைகீழாக்கும் நல்லதும் கெட்டதுமான மாற்றங்கள், போன்றவற்றைக் கேதுதான் தருவார்.

10ல் பாபியான கேது இருப்பதால் மகர ராசி நேயர்களுக்கு யோகத்தை தரும்

அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

செல்வம் செல்வாக்கு கூடும்.

மகர ராசிக்கு ஜென்ம சனி

மகர ராசியில் ராசியின் அதிபதி ஆன சனி பகவான் மகர ராசியில் ஆட்சி பெற்று காணப்படுவதால் , சச யோகம் ஏற்படுகிறது.

 சச யோகம் என்பது பஞ்சமகா புருஷ யோகம் ஒன்றாகும்.

மகரம் , மற்றும் கும்ப ராசிக்கு சனி பகவான் அதிபதி என்பதால் , ஏழரை சனி , அஷ்டம சனி , அர்த்தாஷ்டம சனி இந்த ராசி நேயர்களுக்கு சனி அதிக கேடு பலன் செய்வதில்லை

சனிபகவான் மகர  ராசியில் அமர்ந்து கொண்டு ராசிக்கு மூன்றாம் இடம், ஏழாம் இடம், பத்தாம் இடத்தைப் பார்வையிடுவதால் உங்களுக்கு பல நன்மைகள் நடைபெறும்.

மகர ராசிக்கு 3ம் இடத்தில் குரு சஞ்சரிப்பதால்

தீதிலா தொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்

மகர ராசிக்கு 3ம் இடமான இளைய சகோதரர், தைரிய, வீரிய ஸ்தானத்தில் குரு அமர்ந்து தன் 5, 7, 9 ஆகிய இடங்களை தன் பார்வை பலனைத் தரவுள்ளார்.

இது நாள் வரை தாமதமான தி ருமணம் நடக்கும்,

பதவி உயர்வு  தாமதம் அடைந்தவர்களுக்கு பதவி உயர்வு தற்சமயம் கிடைக்கும்.

மகர ராசி 7ம் இடத்திற்கு குரு பார்வை

குரு 7ம் இடத்தை பார்வையிடுவதால் , இது நாள் வரை திருமணம் தாமத பட்டவர்கள் இனி திருமணம் நடைபெறும்.

இல்லற வாழ்வு இனிமையாய் அமையும்.

கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் ஏற்படும்

மகர ராசிக்கு குரு பாக்யஸ்தானமான  9ம் இடத்தை பார்வையிடுவதால்

9 -வது ராசியாக வருவது பாக்கியஸ்தானம்.

மகர ராசி நேயர்களுக்கு குரு பகவான் 9ம் இடத்தை பார்வையிடுவதால் யோகம் கூடும்.

திடீர் அதிர்ஷ்டம், வாழ்வில் ஏற்படும்

எதிர்பாராத முன்னேற்றம், திடீர் செல்வம்,

மகர ராசிக்கு லாப  ஸ்தானமான 11ம் இடத்தை குரு  பார்ப்பதால்

தொழில் மூலம் வரும் லாபம்,

 மறைமுக வருமானம்,

ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களில் வருமானம்,

பங்கு சந்தை , இன்ஷூரன்ஸ் மூலம் வருமானம்,

ஓய்வூதிய வருமானம் 

மகர ராசிக்கு 4ல் உள்ள ராகுவுக்கு பரிஹாரம்

திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மன் ஆலயம்.

திருவாடானைக்கு கிழக்கே பத்து மைல் தூரத்தில் அமைந்துள்ளது திருவெற்றியூர் பாகம்பிரியாள் அம்மன் ஆலயம். இந்த ஆலயத் தில் நாக தோஷ வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தலமாகும்" வேறு எங்குமே இல்லாத அற்புதம் இந்த ஆலயத் தில் உள்ளது. நாக குலத்தின் முதன்மை தலைவியான வாசுகி நாகம் இந்த சிவாலயத்தில் உள்ள புற்றில் ஐக்கியமானதாக தல வரலாறு.

சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, புத்தடி நாகருக்கு முட்டை, பால் வாங்கி வைத்து மூன்று முறை புத்தடியை வளம் வந்து மனதார அம்மனை பிரார்த்தனை செய்தால் நாகதோஷம் மட்டும் இல்லாமல் ராகு கேது தோஷங்கள் கூட முற்றிலும் அகலும்.

தர்ப்ப சயனம்

ராமநாதபுரத்திலிருந்து தர்ப்ப சயனம் சென்று விபீடணனுக்கு அபயமளித்த சேத்திரம் வணங்கி, அங்குள்ள தல விருட்சத்தில் தாங்கள் கட்டியுள்ள உடையில் சிறிது கிழித்து ஒரு சிறு கல் வைத்து மரக்கிளையில் கட்டி வந்தால் நாகதோஷம் விலகும்.

 

மகர ராசிக்கு 3ல் உள்ள குருவுக்கு பரிஹாரம்

திருச்செந்தூ குரு பரிகார ஸ்தலம்

திருச்செந்தூர் தலம் குரு பரிகாரத் தலமாக விளங்குகிறது.

வியாழ பகவானான குரு திருச்செந்தூர் தலத்தில் வழிபட்டு தன் யந்திரத்தை ஸ்தாபித்துள்ளார்.

குரு பகவான் பூஜித்த தலம் திருச்செந்தூர் சுப்ரமணியர் ஆலயம்.

இது வியாழ தலம். குரு திசை குரு புத்தி நடப்பவர்கள். திருமண தடை உள்ளவர்கள் திருச்செந்தூர் வந்து முருகனை தரிசனம் செய்தால் திருமண தடைகள் நீங்கும்.

ஓமாம்புலியூர்:- சிதம்பரத்துக்கு தென்மேற்கில் சுமார் 30 கி.மீ. தொலைவில் இத்தலம் உல்ளது.

இறைவன் பெயர் துயர் தீர்த்த நாதர்.

இறைவி பெயர் பூங்கொடி நாயகி.

இறைவன் தட்சிணாமூர்த்தியாக உமையம்மைக்கு பிரணவ மந்திரத்தை விளக்கிய தலம்

இங்கு தட்சிணாமுர்த்திஉயர்ந்த பீடத்தில் காணப்படுகிறார்.

சனி சாந்தி பரிகாரம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வழிபடலாம். வாலாஜாபேட்டைக்கு காஞ்சிபுரம் , வேலூர் , அரக்கோணம் ஆகிய இடங்களிலிருந்து போகலாம்.

திருவாரூர் மாவட்டம் , திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருக்கொள்ளிக்காடு திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சனீஸ்வர பகவானையும், சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கி வந்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

சனி சாந்தி பரிகாரம் ஹோமம் செய்யலாம்.

 உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க

ஜாமக்கோள் ஆருடம் மூலம் பிரசன்னம் பார்க்க

ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295




No comments:

Post a Comment