பாதகாதிபதி காலத்திரஸ்தா னமான 7ம் இடத்தில இருந்தால் ஏன் திருமண வாழ்வு சோபிப்பதில்லை ?
தோஷ சாம்யம் என்றால் என்ன ?
பாதகாதிபதி களத்திர ஸ்தானத்தி ல் அமர்ந்தால் திருமண வாழ்வில் பல தடைகள் , பிரச்சனைகள் , கணவன் அல்லது மனைவி அகல மரணம் , இரு தார யோகம் ஏற்படுகிறது.
ஆகையால் இத்தகைய ஜாதகங்க ளுடென் அதற்கு இணையான ஜாதகத்தை இணைக்க வேண்டும். அப்பொழுதுதான் திருமண வாழ்வு சோபிக்கும்.
உதாரண ஜாதகம் - நடிகை மீனா ஜாதகம் - விருச்சிக லக்கினம். விருச்சிக லக்கினத்திற்கு பாதகாதிபதி சந்திரன் ஆவர். அவர் மீனா ஜாதகத்தில் உச்சம் பெற்று களத்திர ஸ்தானமான 7 ம் இடத்தில இருப்பது கடுமையான தோஷத்தை ஏற்படுத்திருக்கறது.
மேலும் களத்திரகாரகர் மற்றும் விருச்சிக லக்கினத்திற்கு 7ம் அதிபதியும் ஆன சுக்கிரன் 11ல் நீச்சம். நீச்சம் பங்க ராஜ யோகம் பெற்றாலும் , திருமண வாழ்கை சோபிக்க வில்லை.
மற்றும் மீனா ஜாதகத்தில் 7ல் பலம் பொருந்திய கஜ கேசரி யோகம் அமையப்பெறும் திருமண வாழ்க்கை நலம் தர வில்லை.
களத்திரஸ்தானமான 7ம் இடத்தில் குருவும் சந்திரனும் இணைந்து காணப்பட்டால் , இல்வாழ்வு இனிக்காது என்கிறது மணி கண்ட கேரளம் மற்றும் புலிப்பாணி பாடல்கள் அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
குருமதி கூடி ஏழில்
கோலமாய் நின்றாராகில்
மருவிவர் சுபராம் என்று
மகிழ்ச்சியாய் சொல்ல வேண்டாம்
வருமது களத்திர ஹானி
வங்கிசம் நாசமாச்சு
திருவது இல்லை கண்டாய்
தெளிந்து சொல் குறி தப்பாதே- மணிகண்ட கேரளம்
பால்மதியும் பரமகுரு ஏழில் நின்றால்
கூறப்பா குமரியவள் இல்லாமல்தான்
குமரனுடைய வங்கிசமும் நாசமாச்சு- புலிப்பாணி
ஆகையால் , திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது தோஷ ஜாதகத்துடன் தோஷ ஜாதகத்தை இணைத்தால்தான் திருமண வாழ்வு சோபிக்கும், இதை தோஷ சாம்யம் என்றும் கூறுவார்கள் ,
ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment