கடன் தீர பரிகாரங்கள்
லக்னத்திற்கு 6-ம் இடம் என்பது ருண, ரோக , சத்ரு ஸ்தானம் ஆகும். ‘ருணம்’ என்றால் கடன். ‘ரோகம்’ என்றால் நோய். ‘சத்ரு’ என்றால் எதிரி. 6-ம் அதிபதியோ, 6-ல் நின்ற கிரகமோ அல்லது 6-ம் அதிபதியின் நட்சத்திரங்களோ தான், ருண - ரோக - சத்ரு ஸ்தானத்தை இயக்குபவர்கள். இந்த 6-ம் பாவக காரகர்கள் சனி மற்றும் செவ்வாய்.
ஒருவரது லக்னத்தில் இருந்து 6-ம் இடம் ருண - ரோக - சத்ரு ஸ்தானம் எனப்படும். ஜாதகத்தில் லக்னத்துக்கு 6-க்கு உடையவர் வலுப்பெற்று இருந்தால், அந்த ஜாதகருக்கு பெருத்த கடன் உண்டாகும். மேலும் எதிரிகளாலும், நோய்களாலும் துன்பப்பட நேரிடும் என்கிறது ஜோதிடம். எனவே கடன் வாங்கும்போதும் அதிகப்படியான கடன் கொடுக்கும்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நல்ல நேரங்களைக் கணித்த பிறகே கடனை வாங்க வேண்டும் அல்லது திரும்பக் கொடுக்க வேண்டும். முடிந்தவரை விளக்கு வைத்தபிறகு கடன் கொடுக்காதீர்கள், வாங்காதீர்கள் என்கிறது சாஸ்திரம்.
குளிகை நேரம்
குளிகை நேரத்தில் வாங்கிய கடனில் ஒரு பங்கை அடையுங்கள். நிச்சயம் முழு கடனும் தீரும். அதுபோல குளிகை நேரத்தில் கடனே வாங்காதீர்கள்.
அடகு வைத்த நகைகள்
அடகு வைத்த நகைகள் வீடு வந்ததும் நன்கு சுத்தம் செய்து மஞ்சள் நீரில் போட்டு பூஜை அறையில் ஒருநாள் வைத்த பிறகே உபயோகியுங்கள்.
ருணவிமோசன பைரவர் வழிபாடு
ருணவிமோசன பைரவர் வழிபாடு கட்டாயமாக உங்களின் எல்லா கடன்களையும் தீர்க்க உதவும். அதுபோல பிரதோஷ வழிபாடு நிச்சயம் எத்தனை பெரிய கடன்களையும் படிப்படியாக தீர்க்க உதவும். அதுபோல பஞ்சமி தினத்தில் அம்பிகையை எண்ணி விளக்கேற்றி வழிபட்டால் கடன் பிரச்சனைகள் தீரும்.
மைத்ர முகூர்த்தம்
மைத்ர முகூர்த்தம் ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு வரும். அந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு நாளும் அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரும். இந்த நேரத்தைப் பயன்படுத்தி நமது கடன் எத்தனை கோடி ரூபாய்களாக இருந்தாலும் அதை முழுமையாக அடைத்துவிட முடியும்.
பிரதோஷ நாளில்
செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில் பிரதோஷ நேரத்தில் கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். சூரிய, சந்திர கிரகணம் ஏற்பட்டு விலகும் சமயம் கடனை திருப்பித் தரலாம். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித்தரலாம். சென்ற பிறவியின் தவறுகளால் உருவான நோய் மற்றும் கடனுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு தொடர்ந்து செய்து வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.
கடனால் பாதிக்க பட்ட தொழில் அதிபர் ஜாதகம்
இங்கே தரப்பட்டுள்ளது ஓர் தொழில் அதிபர் ஜாதகம். இவருக்கு தற்சமயம் ரூபாய் 20 கோடி கடன் உள்ளது. ஆறாம் அதிபதி (கடன் , எதிரி , ஆரோக்கியம்) செவ்வாய் 12 ல் மறைந்து 6 ம் இடம் ஆன கடன் ஸ்தானத்தை பார்ப்பதால் இவருக்கு தலைக்கு மேல் கடன் உள்ளது
சிறை
இவருக்கு கேந்திர ஆதிபத்ய தோஷம் பெற்ற குரு தசையில் செவ்வாய் புக்தியில் கடன்காரர்களால் சிறையில் அடைக்கப்பட்டார் .
கேந்திர ஆதிபத்திய தோஷம்
10ம் அதிபதியான குரு கேந்திர ஆதிபத்திய தோஷம் பெற்றுள்ளதால் , 10 ம் இடத்தில மாந்தி இருப்பதாலும் ,
இவர் தொழில் அதிபராக இருந்தாலும் அவரால் அதிக லாபம் ஈட்டி தொழில் வெற்ற பெற்று கடனை இன்று வரை அடைக்க முடிய வில்லை.
உங்கள் ஜாதகத்தை பார்த்து முழுமையான பலன்கள் , யோகங்கள் , அவயோகங்கள் , எண் கணிதம் , பிரசன்ன ஆருடம் மூலம் உங்கள் பிரச்சனைகள் அறிய , 35 பக்க தமிழில் ஜாதக விளக்கத்தை ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

No comments:
Post a Comment