உங்கள் ஜாதகத்தில் சிவராஜ்ய யோகம் உள்ளதா ?
சிவராஜ யோகம்' என்று சிறப்பாகக் குறிப்பிடப்படும் யோகம் என்னவென்றால், குருவும், சூரியனும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் அமைப்பாகும்.இந்த அமைப்புதான் ஒருவரை மற்றவர் மீது அதிகாரம் செய்ய வைக்கும். இவர் பேசும் வார்த்தைகள் 'கட்டளை வாக்கிய'மாகவே அமைந்திருக்கும். அவர் சொன்னால் கேட்பதற்கும் பத்து பேர்காத்திருப்பார்கள்.அரசாங்கத்தில் சாதாரண அதிகாரி முதல் உயர் அதிகாரி வரை மந்திரி முதல் முதல்வர் வரை பதவி வகிக்கும் அமைப்பைப் பெறுவார்
தேவகுரு மற்றும் பிரகஸ்பதி என்று சொல்லப்படும் குருவும், ஆத்ம காரகன் என்று சொல்லப்படும் சூரியனும் சம சப்தம ஸ்தானங்களில் நின்று, நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் அமைப்பு சிவராஜ யோகம் என்ற அமைப்பை ஏற்படுத்துகிறது.
குருவும், சூரியனும் பலவீனம், பகை, நீசம் போன்ற நிலைகளை அடையாமலும், பாவக்கிரகங்க ளின் தொடர்புகள் ஏதுவுமில் லாமல், வலுவாக இருப்பதன் அடிப்படையில், ஒருவருக்கு அரசாங்கத்தில் சாதாரண அதிகாரி முதல் உயர் அதிகாரி வரையிலும், அரசியலில் சிறப்பான பதவியைத் தரும். அமைச்சர் முதல் பிரதமர் வரை பதவி வகிக்கும் வாய்ப்பையும் பெற வாய்ப்புள்ளதாக ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது
சிவ வழிபாடு
.சிவராஜ யோகம் கொண்டவர்கள் சிவ வழிபாடு செய்வதன் மூலம் பல சிறப்புகளைப் பெறமுடியும். சிவனை வழிபட வழிபட இந்த யோகம் ஜாதகத்தில் பிரமாதமாக வேலை செய்கிறது .
பிரதமர் இந்திரா ஜாதகம்
பிரதமர் இந்திரா ஜாதகத்தில் குருவும் சூரியனும் ஒருவரை ஒருவர் சமசப்தமாக பார்த்துக் கொள்வதன் மூலமாக சிவராஜ்ய யோகம் இவர் ஜாதகத்தில் வலுவாக அமைந்தது. அரசியலில் சிறப்பான பதவியைத் தரும். அமைச்சர் முதல் பிரதமர் வரை பதவி வகிக்கும் வாய்ப்பையும் பெற வாய்ப்புள்ளதாக ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால்தான் பிரதமர் பதவி இவரை தேடி வந்தது.
ஜோதிடம் பார்க்க ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment