ஜாமக்கோள் மூலமாக ஒரு ஜாதகரின் தற்கால பிரச்சனைகள் என்ன , அவற்றிற்கு என்ன தீர்வு என்பதை துல்லியமாக கூறலாம்
**ஜாமக்கோள் மூலமாக ஒரு ஜாதகரின் தற்கால பிரச்சனைகள் என்ன , அவற்றிற்கு என்ன தீர்வு என்பதை துல்லியமாக கூறலாம் **
ஜாமக்கோள் ஆருடத்தை பற்றி விரிவாக விளக்குகிறது **சீனேந்திர மாலை **என்கின்ற பழம்பெரும் தமிழ் ஜோதிட நூல் .
**உதாரண ஜாமக்கோள் ஜாதகம் **இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
ஜாமக்கோள் பிரசன்னததின் படி ஜாதகர் கிழ்கண்ட கேள்விகளை கேட்க கூடும்
1. உதயத்தில் இருந்து 2ல் ஆருடம் பணம் பொருளாதாரம் குடும்பம் சம்பந்தமான கேள்வி அமையும்
2. ஆரூடத்தில் செவ்வாய் இருப்பதால் , பொருள் நஷ்டம் , வியாதி பற்றி கேள்வி , ஆயுள் தீர்க்கமா? , தான் சந்தித்து வரும் பலவிதமான துன்பங்களை பற்றி கேள்வி
3. **உதயத்தில் குரு இருப்பதால் **, குழந்தைகளின் எதிர்காலம் பற்றி கேள்வி அல்லது குழந்தை எப்போது பிறக்கும் என்பது பற்றி கேள்வி
4.**சுக்கிரன் நீச்சமான ஜாமம் **- ஜாதகருக்கு பெண்கள் விஷயத்திற்காக செய்வினை வைக்கப்பட்டிருக்கும்
திருமண பொருத்தம் பற்றி கேள்வியாக இருந்தால் , திருமண பொருத்தம் இல்லை என்று உறுதியாக சொல்லலாம்
5 ஜாமக்கோள் பிரசன்ன ஜாதகத்தில் **2 ல் செவ்வாய் உச்சம் ** பெற்றுப்பதால் , பொருளாதார நிலை உயரக்கூடிய வாய்ப்பு , அதன் மூலம் சொந்த வீடு , வாகன யோகம் அமையும் நிலை
6, 4ல் கவிப்பு இருப்பதால் ,வீடு வாகனம் *கல்என்பது வி சொத்துக்கள் சம்பந்தமான கேள்வி அமையும் கவிப்பில்
சூரியன் இருப்பதால் , தந்தை வழி சொத்து பிரச்சனைகள் பற்றி ஜாதகர் கேள்வி கேட்பார் .
7. 5ல் பாம்பு இருப்பதால் குழந்தை எப்போது பிறக்கும் அல்லது குழந்தைகளின் எதிர்காலம் பற்றி கேள்வி குலதெய்வம் தெரிய வில்லை அல்லது குல தெய்வ வழிபாடு விட்டு போயிருப்பது - உயர் கல்வியில் தடை புகழுக்கு பங்கம் ஏற்பட்டது ஏன் என்பது கேள்வியாக அமையும் .
8.** 7ல் சந்திரன்** - நினைத்து வந்த காரியத்தில் வெற்றி - தாயாரின் ஆசி - தாயாரின் உடல் நிலை மேம்படுத்தல்
தொலைந்து போன பொருட்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு திருமண எப்போது நடைபெறும் என்பது பற்றி கேள்வி அல்லது திருமண வாழ்வில் உள்ள பிரச்சனைகளை பற்றி கேள்வி
9. 8ல் சனி இருப்பது ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு என்பதை தெரிவிக்கும் , உடல்நிலை , நோய் பற்றி ஜாதகர் கேள்விகள் கேட்க கூடும்
10. 1**0ம் இடம் சிந்தனையை ஜாமக்கோளில் குறிக்கும் . **10இடத்தில சுக்கிரன் நீச்சம் அடைந்து காணப்படுவதால் கணவன் மனைவி உறவில் விரிசல் , பெண்களால் அவமானம் , போன்ற நிலையை உணரலாம்.
11. சிந்தனை என்று சொல்லக்கூடிய 10ம் அதிபதியான புதன் 11ல் இருப்பதால் தொழில் வளர்ச்சி , கௌரவம் மேம்படுத்தல் உயர்ந்த பதவி கிடைக்க போகும் வாய்ப்பு ஆகியவற்றை உணரலாம்
உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க , ஜாமக்கோள் பிரசன்னம் மூலமாக உங்கள் அணைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண.ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment