12 வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே ஏற்படும் அபூர்வ யோகம் -சரஸ்வதி யோகம்
ஜாதகத்தில் சரஸ்வதி யோகம் என்றால் என்ன ?
சரஸ்வதி யோகம் அமைய ஜாதகத்தில் உள்ள கிரஹ நிலைகள்
ஒருவரது சுய ஜாதகத்தில் தனகார கன் ஆகிய குரு, களத்திரகாரகன் ஆகிய சுக்ரன், வித்யாகாரகன் ஆகிய புதன் ஆகிய மூன்று கிரகங்களும் லக்னம், 2, 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்களில் இணைந்தோ அல்லது தனித்தனியாக இருந்தா லோ அது சரஸ்வதி யோகம் ஆகும்.
குரு உச்சம் பெற்று இருக்க வேண்டும்,
அபூர்வ யோகம்
சரஸ்வதி யோகம் ஒரு அபூர்வ யோகம் - ஏனன்றால் 12 வருடங்களுக்கு ஒரு வருடம்தான் குரு கடக ராசியில் உச்சம் பெறுவார். ஆக இந்த யோகம் அமையப்பெற்றவர்கள் கடக ராசியில் குரு உச்சம் பெற்று காணப்படும்.
மேலும் புதன் , சுக்கிரன் லக்னம், 2, 4, 5, 7, 9, 10 ஆகிய இடங்களில் அமைய பெற வேண்டும்
ஜாதகத்தில் சரஸ்வதி யோகம்
சரஸ்வதி தேவி அறிவு மற்றும் ஞானத்தை தருபவர். ஒரு ஜாதகர் சரஸ்வதி யோகத்திற்கு சாதகமா ன கிரக நிலைகளுடன் காணப்பட் டால், அவர் மிகவும் அறிவாளியா கவும் பணக்காரராகவும் மாறுவத ற்கான பிரகாசமா ன வாய்ப்புக ளைப் பெறுவார்.நாடகம், மற்றும் கவிதை சரஸ்வதி யோகம் பெற்ற ஜாதகர் இயற்றும் திறமையில் நிபுணத்துவம் பெற்றவராக இருப்பார். அவர் ஒரு சிறந்த கணிதவியலாளராகவும் இருக்கலாம். சரஸ்வதி யோகம் உள்ள ஜாதகர் சரஸ்வதி தேவிக்கு உள்ள அணைந்து குணநலகள் கொண்டவராக இருப்பர்
கதை , இசை துறையில்
சரஸ்வதி யோகம் பெற்ற ஜாதகர் ஒரு கவிஞராகவும், கதை , இசை துறையில் சாதனை செய்வராகும், புகழ்பெற்றவராகவும், அனைத்து அறிவியலிலும் கற்றவராகவும், திறமையானவராகவும், பணக்கா ரராகவும், அனைவராலும் பாராட்ட ப்பட்டவராகவும், நல்ல மனைவி மற்றும் குழந்தைகளைப் பெற்றவ ராகவும் ஆகிறார்.
பர்வதம்சம்
குரு ஒரு கேந்திரத்தில் அமைந்து, (இந்த ஜாதகத்தில் 4ம் இடத்தில )லக்னத்தின் அதிபதி வலுவாகவும், பர்வதம்சத்தை ஆக்கிரமித்தும் இருந்தால், பூர்வீகம் மனைவி, மகன்கள், நண்பர்கள் மற்றும் செல்வத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும்.
சரஸ்வதி யோகத்தால் ஏற்படும் பயன்கள்
இந்த யோகத்தில் பிறந்தவர்கள் பல்வேறு கலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். பெயரின் தன்மைக்கேற்ப இந்த யோகத்தால் நல்ல கல்வியும், இயல், இசை, நாட்டியம் ஆகிய கலைகளில் பயிற்சியும், தேர்ச்சியும் ஏற்படும். தேவைக்கேற்ப செல்வத்தை அடைவதுடன், சமுதாயத்தில் அனைவரும் மதிக்கும் கவுரவமான நிலையையும் பெறுவார்கள்
1. ஜாதகர் உயர்ந்த ஞானமும் அறிவும் கொண்டவர்
2.அவர் புத்திசாலி மற்றும் மற்ற அம்சங்களிலும் மிகவும் அதிர்ஷ்டசாலி.
3. ஜாதகத்தில் சரஸ்வதி யோகம் உள்ள நபர், பெயரையும் புகழையும் பெற வாய்ப்புள்ளது.
ஆர்வம் இருந்தால், அவர்கள் படைப்பாற்றல் கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களாக இருக்கலாம்.
4.அவர்கள் நிச்சயமாக உரைநடை, கவிதை மற்றும் நாடகம் இயற்றும் திறமை பெற்றிருப்பார்கள்.
5. ஜாதகருக்கு கணிதத்தில் அபார அறிவு இருக்கும்.
6.ஜாதகருக்கு அழகான கையெழுத்து மற்றும் இனிமையான குரல் இருக்கும்.
7.சரஸ்வதி யோகம் உள்ள ஜாதகர் நிச்சயமாக பணக்காரராகவும் வளமாகவும் இருப்பார், மேலும் திருமண சுகத்தையும் அனுபவிப்பார்.
உதாரண ஜாதகம்
இங்கே இணைத்துள்ள ஜாதகத்தில் , குரு பகவான் கேந்திர ஸ்தானமா ன 4ம் இடத்தில உச்சம் பெற்று பஞ்ச மகா புருஷ யோகமான ஹம்ச யோகம் அடைந்து காணப் படுகிறார். இயற்கை சுபர்களான குரு, புதன் , சுக்கிரன் 4 மற்றும் 5 இடங்களில் இந்த யோகத்திற்கான விதிகளின் படி 4 மற்றும் 5 இடத்தில் அமையப்பெற்றுள்ளன. ஜாதகர் இசை துறை கல்வி மற்றும் மேல் படிப்பு படித்து உள்ளார்
உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க , ஜாமக்கோள் பிரசன்னம் மூலமாக உங்கள் அணைத்துஆள்
பிரச்சனைகளுக்கு தீர்வு காண.ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment