Search This Blog

Monday, October 3, 2022

பாலாரிஷ்டம் என்றால் என்ன ? -

 பாலாரிஷ்டம் என்றால் என்ன ? -

பால்ய வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷம் பாலாரிஷ்ட தோஷம். ஜாதகத்தில் பாவக்கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை ஏற்படும்போது இத்தோஷம் ஏற்படும்.

பிருஹத் ஜாதகம் பாலாரிஷ்டம் பற்றி கீழ்கண்ட விதிகளை சொல்கிறது .

முதல் விதி

லக்கின அல்லது நட்சத்திர சந்தியின் போது அல்லது சந்திர ஹோரையில் பிறக்கும் குழந்தை கள், தீய கிரகங்கள் மற்றும் ராசிகளின் கடைசி பாகைகளை ஆக்கிரமிக்கும் போது அல்லது நான்கு தீய கிரகங்கள் (சந்திரன் உட்பட) கேந்திரங்களை ஆக்கிர மிக்கும் போது, குழந்தைகளுக்கு ​​பாலாரிஷ்டம் (இளமையில் மரணம்) ஏற்படும்.

இரண்டாம் விதி

பாபிகள் மற்றும் நன்மை தரும் கிரகங்கள் முறையே ராசியின் முதல் மற்றும் இரண்டாம் பாதி யை ஆக்கிரமித்து, ஒரு பூச்சி ( கடகம் , மகரம் , விருச்சிகம் ) ராசியில் பிறந்தால் அல்லது ஜென்ம ராசி மற்றும் 7 வது ராசிக்கு பாப கத்திரி யோகம் அமைந்தால், குழந்தை பிறந்த பின் உடனடியாக இறந்துவிடும்

மூன்றாம் விதி

பாபிகள் ஜென்ம ராசி மறறும் 7ல் அமைய பெற்றுஇருந்தாலும் , சந்திரன் பாபிகளுடன் இணைந்து காணப்பட்டாலும் பாலாரிஷ்டம் ஏற்படுகிறது அதாவது குழந்தை விரைவில் இறந்துவிடும்.

நான்காம் விதி

பலவீனமான சந்திரன் 12-ஆம் இடத்தில் , 8ம் இடத்திலும் பாபி களுடன் சேர்க்கை பெற்றாலும் , கேந்திரத்தில் சுபர்கள் அமைய பெறாவிட்டாலும் , , குழந்தை விரைவில் இறந்துவிடும்.

ஐந்தாம் விதி

சந்திரன் பாபிகளுடேன் சேர்க்கை பெற்று 7, 8 அல்லது 12ல் இருந்தால், மற்றும் சுபர்கள் கேந்திரங்களில் , ​​​​அமராவிட்டாலும் , அல்லது சுபர்க ளின் பார்வை சந்திரனுக்கோ 7, 8 அல்லது 12 க்கு இல்லை என்றாலும் , குழந்தைக்கு பாலாரிஷ்டம் ஏற்படுகிறது .

பாலரிஷ்டம் ஏன் ஏற்படுகிறது ?

குழந்தை பிறந்தது முதல் 4 வயது வரை தாயினால் செய்யப்பட்ட பாவத்தினாலும், 4 வயதிற்கு மேல் 8 வயது வரை தந்தையினால் செய்யப்பட்ட பாவத்தினாலும், 8 வயதிற்கு மேல் 12 வயதுவரை ஜாதகர் தான் முற்பிறவியில் செய்த பாவத்தினாலும் பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும்.

பாலரிஷ்டம்- மற்ற கிரஹ சேர்க்கைகள்

1. ராசி சந்திப்பில் பிறக்கும் குழந்தைகள், தீர்க்காயுள் பெறுவதனால் பிரசவ நேரத்தில் தாய்க்கு உயிருக்கு ஆபத்து உண்டாகலாம்.

2.லக்னாதிபதியும், சந்திரன் நின்ற ஸ்தானதிபதியும் அஸ்தமனம் அடைந்திருந்து, லக்னத்திலிருந்து துர்ஸ்தானமான 6, 8, 12ஆம் இடங்களில் இருந்தால் பாலாரிஷ்டம் ஏற்படுகிறது

,3. ராசி சக்ரத்தில் ,சனி இருக்கும் வீட்டை அதாவது சனியை, செவ்வாய் மற்றும் ராகு பார்த்தாலும் பாலாரிஷ்டம் ஏற்படுகிறது

4.லக்னத்தில் செவ்வாய் அமர்ந்து லக்னாதிபதி பலவீனமாகி குரு பார்வையும் கிட்டவில்லை என்றால் பாலாரிஷ்டம் ஏற்படும்.

5. சுக ஸ்தானமான 4 ஆம் இடத்தில் சாய கிரஹங்கள் ஆன ராகு, கேது தனியாக இருப்பது பாலாரிஷ்டம் ஏற்படும்.

இங்கே படத்தில் உள்ள குழந்தையை பார்க்கும் பொழுது மிகவும் பரிதாபமாக இருக்கிறது . இந்த நிலை நம் எதிரிக்கும் வரக்கூடாது என்று பிரார்த்திபோம்

உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க , ஜாமக்கோள் பிரசன்னம் மூலமாக உங்கள் அணைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண.ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

May be an image of text

No comments:

Post a Comment