Search This Blog

Wednesday, May 13, 2026

காகவந்தியா (புருஷ வந்தியா):தோஷம் என்றால் என்ன ?

 காகவந்தியா(புருஷவந்தியா):தோஷம் என்றால் என்ன ?


வந்தியா தோஷம்: ஜோதிடத்தில் குழந்தைப்பேறு தொடர்பான குறைபாடுகளை “வந்தியா தோஷம்” என அழைக்கிறார்கள். இது நான்கு வகையாக பிரிக்கப்படுகிறது:

கதவீ வந்தியா – பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும்.

ஸ்திரீ வந்தியா – ஆண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும்.

மிருத வந்தியா – குழந்தைகள் பிறந்து உயிரிழப்பது.

ஸாஷாத் வந்தியா – குழந்தை பிறக்காத நிலை.

காகவந்தியா தோஷம் என்பது ஜோதிடத்தில் “வந்தியா தோஷம்” எனப்படும் நான்கு வகை தோஷங்களில் ஒன்றாகும். இது “புருஷ வந்தியா” என்றும் அழைக்கப்படுகிறது; அதாவது, ஜாதகருக்கு ஆண் குழந்தை பிறக்காமல், பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும் நிலையை குறிக்கிறது.


ஐந்தாம் இடத்தில் குரு நின்று , ஐந்தாம் அதிபதி பலம் இழந்து , சனி பார்வை செய்தால் இந்த தோஷம் அமையப்பெறுகிறது. எத்தணை குழந்தைகள் பிறந்தாலும் ஒரு குழந்தை மட்டுமே உயிர் வாழும்.

காகவந்தியா தோஷம் (புருஷ வந்தியா):

ஜாதகத்தில் சனி, சூரியன் இலக்கினத்திற்கு எட்டாம் இடத்தில் சேர்ந்து இருந்தாலும், அல்லது தங்கள் சொந்த வீட்டில் இருந்தாலும்,

அதே அமைப்பில் சந்திரன், புதன் கூடினாலும்,

ஜாதகருக்கு ஆண் குழந்தை பிறக்க வாய்ப்பு குறையும்; பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும்.

இந்த தோஷம் நீங்க என்ன பரிஹாரம் செய்ய வேண்டும் ?

கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது, முருகப்பெருமானை வழிபடுவது, நவக்கிரக வழிபாடு செய்வது போன்றவை நவக்கிரக தோஷங்களை குறைக்கும் என்று நம்பப்படுகிறது.

பரிகார பூஜைகள்: சனீஸ்வரன், சூரியன், சந்திரன், புதன் ஆகியோருக்கான சிறப்பு பூஜைகள்.


கோவில் வழிபாடு: பழனி, திருச்செந்தூர், திருத்தணி போன்ற முருகன் கோவில்களில் சஷ்டி விரதம்.


ஜோதிட சாகரம் ஆர் வீ சேகர் 79047 19295


No comments:

Post a Comment